முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"நிழல் பொம்மை" - அதிகார விளையாட்டு

நண்பர் கணேஷ் பேஸ்புக்கில் இந்தப் பகுதியைப் பகிர்ந்திருந்தார்:

'நிழல் பொம்மை' நாவலில் இருந்து 

சிறிது குரூரம் எனக்குள் வந்ததற்குக் காரணம் யார், பொய்களைப் புனைந்து சுயநலத்தைப் பேணலாம், அதுவே சாமர்த்தியம் என என்னை நம்ப வைத்தது யார்?.

அடிமைகளைக் கட்டி வைத்து சாட்டையால் அடித்துக் கட்டுப்படுத்தும்போது பௌதீக விடுதலையே அவர்களுக்குப் போதும். சுதந்திரமாகத் திரியவிட்டு அவர்களுடைய சிந்தனையை, மன அமைப்பை மாற்றித் தமக்கேற்றபடி ஒருவர் ஒழுங்குபடுத்தும்போது மீளவே முடியாத அடிமைப் பள்ளத்தாக்கில் அவர்கள் விழுகிறார்கள்.

பள்ளத்தாக்கில் அலையும் கண்ணற்றவர்கள் ஒற்றைப் பார்வைகொண்ட பெருந்திரளாக மாற்றப்படுவது, அவர்களை யாரோ குன்றின் மேல் ஏறி நின்று கண்காணித்து வழிநடத்தி திருப்தி கொள்வது, அவ்வப்போது ஆணைகள் பிறப்பித்து அவர்களின் திசையை மாற்றிவிட்டு அதன் விளைவுகளை ரசிப்பது, அவர்கள் பரஸ்பரம் மோதிக்கொள்ளாமல் ஒழுங்கமைவை உறுதி செய்வது, அவர்கள் தற்செயலாக வழி கண்டுபிடித்துத் தப்பித்துவிடாமல் பார்த்துக்கொள்வது, 

அன்றாடத்தின் அற்பமான மகிழ்ச்சிகளின்
பாற்பட்டு பிரதான இலக்கை அவர்கள் மறந்துவிடச் செய்வது.

நான் வந்து சேர்ந்த சில மாதங்களிலேயே சச்சிதானந்தர் அதிகாரத்துக்கு வந்தார். விரைவிலேயே சச்சிதானந்தரே லோகோஸ், லோகோஸே சச்சிதானந்தர் எனும் அளவுக்கு அவர் சூழலை மாற்றினார். சொல்லப்போனால் அங்கு வேலை பார்த்தவர்கள், படித்தவர்கள் எல்லாருமே அனேகமாக தம்மையே லோகோஸ் என்றும், சச்சிதானந்தர் என்றும் கருத ஆரம்பித்தார்கள்.

எங்களையே அறியாமல் அவரது அசைவுகளுக்கு ஏற்ப நாங்கள் எங்கள் அசைவுகளை உருமாற்றிக்கொண்டோம். நாங்கள் பொம்மலாட்டப் பாவைகள் எனில் அவரே எங்களை அசைக்கும் விரல்கள் அவ்வப்போது நாங்கள் அவரது அசைவுகளை மீறித் தன்னிச்சையாக அசையவும், எங்கள் நிழல்கள் எங்கள் நகர்வுக்கு ஏற்ப அசைவதைக் கண்டுகளிக்கவும் செய்தோம். திரும்ப காற்றில் விரல்களின் அழுத்தங்களை, எழுச்சிகளைக் கண்டு எங்களை மீண்டும் தகவமைத்து ஒழுங்கமைவின் பகுதியாக்கிக்கொண்டோம். இதற்கு நடுவே நாங்கள் எங்களைக் கண்டுகொண்டோம். சில நேரங்களில் கண்டுகொள்ள முடியாமல் மேலும் சீரழிந்து போய் மனம் துவண்டோம்.
.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...