முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"நிழல் பொம்மை" - அதிகார விளையாட்டு

நண்பர் கணேஷ் பேஸ்புக்கில் இந்தப் பகுதியைப் பகிர்ந்திருந்தார்:

'நிழல் பொம்மை' நாவலில் இருந்து 

சிறிது குரூரம் எனக்குள் வந்ததற்குக் காரணம் யார், பொய்களைப் புனைந்து சுயநலத்தைப் பேணலாம், அதுவே சாமர்த்தியம் என என்னை நம்ப வைத்தது யார்?.

அடிமைகளைக் கட்டி வைத்து சாட்டையால் அடித்துக் கட்டுப்படுத்தும்போது பௌதீக விடுதலையே அவர்களுக்குப் போதும். சுதந்திரமாகத் திரியவிட்டு அவர்களுடைய சிந்தனையை, மன அமைப்பை மாற்றித் தமக்கேற்றபடி ஒருவர் ஒழுங்குபடுத்தும்போது மீளவே முடியாத அடிமைப் பள்ளத்தாக்கில் அவர்கள் விழுகிறார்கள்.

பள்ளத்தாக்கில் அலையும் கண்ணற்றவர்கள் ஒற்றைப் பார்வைகொண்ட பெருந்திரளாக மாற்றப்படுவது, அவர்களை யாரோ குன்றின் மேல் ஏறி நின்று கண்காணித்து வழிநடத்தி திருப்தி கொள்வது, அவ்வப்போது ஆணைகள் பிறப்பித்து அவர்களின் திசையை மாற்றிவிட்டு அதன் விளைவுகளை ரசிப்பது, அவர்கள் பரஸ்பரம் மோதிக்கொள்ளாமல் ஒழுங்கமைவை உறுதி செய்வது, அவர்கள் தற்செயலாக வழி கண்டுபிடித்துத் தப்பித்துவிடாமல் பார்த்துக்கொள்வது, 

அன்றாடத்தின் அற்பமான மகிழ்ச்சிகளின்
பாற்பட்டு பிரதான இலக்கை அவர்கள் மறந்துவிடச் செய்வது.

நான் வந்து சேர்ந்த சில மாதங்களிலேயே சச்சிதானந்தர் அதிகாரத்துக்கு வந்தார். விரைவிலேயே சச்சிதானந்தரே லோகோஸ், லோகோஸே சச்சிதானந்தர் எனும் அளவுக்கு அவர் சூழலை மாற்றினார். சொல்லப்போனால் அங்கு வேலை பார்த்தவர்கள், படித்தவர்கள் எல்லாருமே அனேகமாக தம்மையே லோகோஸ் என்றும், சச்சிதானந்தர் என்றும் கருத ஆரம்பித்தார்கள்.

எங்களையே அறியாமல் அவரது அசைவுகளுக்கு ஏற்ப நாங்கள் எங்கள் அசைவுகளை உருமாற்றிக்கொண்டோம். நாங்கள் பொம்மலாட்டப் பாவைகள் எனில் அவரே எங்களை அசைக்கும் விரல்கள் அவ்வப்போது நாங்கள் அவரது அசைவுகளை மீறித் தன்னிச்சையாக அசையவும், எங்கள் நிழல்கள் எங்கள் நகர்வுக்கு ஏற்ப அசைவதைக் கண்டுகளிக்கவும் செய்தோம். திரும்ப காற்றில் விரல்களின் அழுத்தங்களை, எழுச்சிகளைக் கண்டு எங்களை மீண்டும் தகவமைத்து ஒழுங்கமைவின் பகுதியாக்கிக்கொண்டோம். இதற்கு நடுவே நாங்கள் எங்களைக் கண்டுகொண்டோம். சில நேரங்களில் கண்டுகொள்ள முடியாமல் மேலும் சீரழிந்து போய் மனம் துவண்டோம்.
.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...