Skip to main content

புத்தகக் காட்சியில் சீமானின் இனவாதப் பேச்சு: யாருடைய தவறு?

சீமானின் பேச்சையும் பபாஸி தலைவரின் ஊடக சந்திப்பு குற்றமன்னிப்புக் கோரலையும் கேட்டேன். சீமானுடைய போதையில் பேசப்பட்ட ஆபாச உளறல. சீமான் பேச்சுக்கெல்லாம் கருத்துரிமை கோருகிறவர்களை கடலில் தான் வீசவேண்டும். கருத்துரிமை சமூகத்திற்குப் பயனுள்ள விசயங்களையும் அறிவையும் பகிரத்தான். பணம் வாங்கிக்கொண்டு பேச்சு ரௌடியிஸம் பண்ண அல்ல.

எனக்கென்னவோ இந்த பபாஸி மூஞ்சிகளைப் பார்த்தால் நம்பிக்கை வரமாட்டேன் என்கிறது. சீமானும், வேடியப்பனும் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் குமுறும் இவர்கள் அரசியல் தலைவர்களையோ அரசியல் பேச்சாளர்களையோ அனுமதித்திருக்கக் கூடாது. தனிப்பட்ட புத்தக மேடையென்றாலும் கூட அனுமதிக்கலாம். புத்தகக் காட்சி விழாவில் கூடாது. ஏனென்றால் அது பொதுமேடை. அடுத்து சீமான் என்ன பேசுவார் என்று இவர்களுக்குத் தெரியாதா? எனக்கென்னவோ இவர்கள் தெரிந்தே பாஜக கிளையின் அழுத்தத்தினாலோ அங்கு இருக்கையில் துண்டுபோட்டு வைக்கவோ தான் அனுமதி கொடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன். ஏனென்றால் இவர்கள் நினைத்தால் அப்பேச்சை ஆரம்பத்திலேயே கண்டித்து நிறுத்தியிருக்கலாம், சரியான தமிழ் தாய் வாழ்த்தை ஒலிக்கும்படி கட்டாயப்படித்தி நிகழ்வை மீண்டும் நடத்தியிருக்கலாம். முக்கியமாக, குடித்துவிட்டு வந்த அவரை மேடையிலே ஏற்றியிருக்கக் கூடாது. அக்காரணத்தைச் சொல்லியே வெளியேற்றியிருக்க வேண்டும். இயல்பிலேயே உளறும் ஒருவர் கடும் போதையில் எப்படிப் பேசுவார்? இவர்களுக்கு இதெல்லாம் தெரிந்தே நிகழ்ந்திருக்கிறது. வேறென்னவோ திரைமறைவில் நடந்திருக்கிறது. பிரச்சினை கைமீறிப் போனதும் ஊடக சந்திப்பில் வந்து ஒப்பாரி வைக்கிறார்கள். இப்படியான பொறுப்பற்றவர்கள், சுரணையற்றவர்கள், மூடர்கள் தலைமைப் பொறுப்பை அலங்கரிபதை வேறெங்கும் பார்க்க முடியாது.
இன்னொரு விசயம்: கூட்டத்திற்காகவும் (அதுவும் மொத்தமாக நூறு பேர்தான்) செல்வாக்குக்காகவும் பட்டிமன்ற பேச்சாளர்களை இலக்கிய விழாக்களுக்கு நாம் அழைத்தபோதே இந்த சீரழிவு ஆரம்பித்துவிட்டது. இனி யிடியூப் பிரபலங்கள், இன்புளுவன்ஸர்கள், முழுமூடர்கள் எல்லாம் மேடையை ஆக்கிரமிப்பார்கள். அதை ஆட்டிடம் பெட்டி வாங்கிக்கொண்டு
அரசியல் தேவைக்காக பயன்படுத்துகிறவர்களும் வருவார்கள். அரசு முதலில் பிரச்சினையின் அடிவேரைக் கண்டு களைய வேண்டும் - இலக்கிய மேடைகளில் கரகாட்ட கோஷ்டிகளை ஏற்றிவிட்டால் தொடர்ந்து அரசியல் பினாமிகள், குடிகாரர்கள், அடியாட்களும் வருவார்கள். முதலில் கொசுவை அனுமதித்தால் அடுத்து கரபான்பூச்சி, அதைத் தொடர்ந்து எலி, அடுத்து பெருச்சாளி, பாம்பெல்லாம் வரும்.
அதனால் முதலில் கொசு மருந்தடிக்க வேண்டும். தேங்கிய நீரை அகற்றி இடத்தை சுத்தமாக வைக்கவேண்டும். இலக்கியவாதிகளும் ஆய்வாளர்களும் தத்தமது உலகத்துள் உரையாடி, சண்டையிட்டு மக்களுக்கு கற்பிப்பார்கள். பணம் வாங்கிக்கொண்டு அவதூறு செய்யமாட்டார்கள்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...