Skip to main content

மயிரிழையில் வென்ற இந்தியா



டி20 தொடரை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். ஆனால் இங்கிலாந்து 5-14 வரையிலான ஓவர்களில் மட்டமாக ஆடி சுழலர்களுக்கு தேவையில்லாமல் விக்கெட் கொடுத்ததாலே சமநிலையற்ற பந்துவீச்சைக் கொண்ட இந்திய அணியிடம் தொடரை இழந்தது என நினைக்கிறேன். இந்த இந்திய அணியின் தேர்வு மிகச் சொதப்பலானது என அணித்தலைமையே ஏற்றுக்கொள்வார்கள். ஒவ்வொரு போட்டியிலும் ஒரே வேகவீச்சாளருடன் ஆடினார்கள். ஹர்த்திக் துவக்க ஓவர்களிலும் கடைசி ஓவர்களிலும் ரன் கொடுக்காமல் வீசுவார் என நம்பி களமிறங்கினார்கள். முக்கியமான கட்டத்தில் ஹர்த்திக்குக்கு காயம் ஏற்பட்டிருந்தால், சுழலர்களுக்கு இந்தளவுக்கு விக்கெட் விழாவிடில் இந்தியா கடைசி 5 ஓவர்களை யார் வீசுவது எனத் தெரியாமல் தத்தளித்திருக்கும். அம்மாதிரியான நெருக்கடிகளை இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு கொடுக்கவில்லை. துபேவும் ஹர்த்திக்கும் இருக்கும்போது இந்தியாவுக்கு அக்ஸர் பட்டேல் தேவையில்லை. ஆனால் அவர் துணைத்தலைவராக இருப்பதால் அவரை எல்லா போட்டிகளிலும் ஆட வேண்டிய தேவையிருந்ததால் அணியின் சேர்க்கையே குழப்பமாகியது. ஆனால் இதே அணியமைப்பை வரும் தொடர்களில் கொண்டு போனால் நிச்சயமாக அடிவாங்குவார்கள். 10-17வது ஓவர்கள் வரை பந்துவீச (ஹர்ஷித் ரானா, அர்ஷதீப் போன்ற) நல்ல வேகவீச்சாளர் நிச்சயமாகத் தேவை.

இங்கிலாந்தைப் பொறுத்தமட்டில் உடலை நோக்கி ஆர்ச்சர், வுட், கார்ஸ் ஆகியோர் பவுன்சர்கள், குறைநீளப் பந்துகளை வீசும் உத்தி என்னை வெகுவாக கவர்ந்தது. ஆனால் அதேநேரம் சென்னையிலும் (கூடுதல் பவுன்ஸ்) ராஜ்கோட்டிலும் (ஏற்ற இறக்கமான பவுன்ஸ்) ஆடுதளம் இந்த உத்திக்கு உதவியாக இருந்ததைப் போல கொல்கொத்தா, பூனே, மும்பையில் இருக்கவில்லை. ஒரே பவுன்சர் செயல்திட்டத்தை ஆடுதளத்தின் மாறுதல்களைக் கருத்திற் கொள்ளாமல் அவர்கள் எல்லா மைதானங்களிலும் முயன்று பார்த்தது முட்டாள்தனமானது. உ.தா., கடைசிப் போட்டி நடந்த மும்பையில் ஆடுதளம் சற்று மெத்தனமாக இருந்ததால், இரு பக்க எல்லைக்கோடுகள் 60 மீட்டரே இருந்ததால், வேகமாக அரைக்குழி வீசுவது எடுபடவில்லை. அதற்குப் பதிலாக பந்தைக் குத்தி மட்டையாளரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு குறைநீளத்தில் மெதுப்பந்துகளை அதிகமாக வீசியிருந்தால், குச்சிகளுக்குள் அல்லது காலை நோக்கி பந்துகளை வைத்திருந்தால் இவ்வளவு அதிகமான ரன்களை பவர்பிளேயிலோ பின்போ கொடுத்திருக்க மாட்டார்கள். ஆர்ச்சரும் வுட்டும் ஒரே மாதிரி வேகமாக ஷார்ட்டாக இங்கும் வீசியது சொதப்பலாகியது. சூழலைக் கணித்து சரியாகத் திட்டமிடாமல் வந்ததைப் போலத் தோன்றியது. அதே போல இந்தத் தொடர் முழுக்கவே இடதுகை மட்டையாளர்களுக்கு அவர்களுடைய வேகவீச்சாளர்களுக்கு சரியாக வீச வரவில்லை. வலதுகை மட்டையாளருக்கு உள்ளே வரும் ‘பக்கிள்’ பந்துகள் இடதுகை மட்டையாளருக்கும் அதே போல உள்ளே தலைக்கு வரவில்லை, மாறாக வைடாக சென்றது. அல்லது அவர்கள் ஸ்டம்பைக் காட்டி சுற்றினால் அவர்களைப் பின் தொடர்ந்து பந்தை உள்ளே குறைநீளத்தில் வீசவில்லை. அவர்களிடம் இடதுகை வேகவீச்சாளர் இல்லாதது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அபிஷேக் ஷர்மாவிடம் இப்படித்தான் சிக்கிக் கொண்டார்கள். அவரால் காலில் விழும் அரைக்குழிப் பந்தை பேக்வெர்ட் ஸ்கொயர் லெக்கில் சிக்ஸர் அடிக்க முடியும் என்றாலும் அந்த ஒரு திசையில் மட்டும் அவரை அதிகமாக ஆட வைத்திருந்தால் அவர் தடுமாறியிருப்பார். அபிஷேக்கின் அடிக்கும் அரைவட்டம் கவர், பாயிண்ட், நேரான பவுண்டரிகளே. இங்கிலாந்து வீச்சாளர்கள் அங்குதான் அதிகப் பந்துகளையும் கொடுத்தார்கள். அதேபோலத்தான் துபேயும் திலக்கும் குச்சிகளை விட்டு அடித்தபோது அவர்களால் வீசும் இடமளிக்காமல் முடக்க முடியவில்லை. அதாவது சாம்ஸன், சூர்யா ஆகியோர் விலகி நின்று மட்டையை வீசும்போது அவர்களுடைய தலைக்கோ விலாவுக்கோ வீச முடிந்த அவர்களால் இடதுகையாளர்களுக்கு அதைச் செய்ய இயலவில்லை. இதுவே இத்தொடரின் முடிவை இந்தியாவுக்குச் சார்பாக மாற்றிய மற்றொரு காரணி.

கடைசியாக அவர்கள் சுலபத்தில் வருணின் பந்துவீச்சை அதிக ரிஸ்க் எடுக்காமல் தள்ளிவிட்டு மற்ற வீச்சாளர்களை இலக்காக்கியிருந்தால் இவ்வளவு விக்கெட்டுகளை இழந்திருக்க மாட்டார்கள். அவர்கள் தப்பித்திருக்கலாம். கடைசி 5 ஓவர்களில் - அர்ஷதீப்பைத் தவிர சரியான கடைசி ஓவர் வேகவீச்சாளர்கள் இல்லாத - இந்தியாவை சாத்தியிருக்கலாம். ஏனோ அதையும் அவர்கள் செய்யவில்லை. அதாவது மேட்ச் அப்பில் சொதப்பினார்கள்.

இந்தியாவுக்கு அதிர்ஷ்டகரமாக ஒரு டி20 தொடர் மடியில் வந்து விழுந்திருக்கிறது! கம்பிருக்கு இது ஒரு தற்காலிக ஆறுதல். சூர்யாவுக்கு மகுடத்தில் மற்றொரு இறகு.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...