Skip to main content

சடங்குகள் மீதான நீயா நானா விமர்சனம்

சடங்குகளுக்கும் அர்த்தங்கள் உண்டு.
அவை மானுடவியல் நோக்கில் உளவியல் நோக்கில் அணுக வேண்டியவை.
கொஞ்சம் தொ.ப. வை வாசியுங்கள்.
பகதவத்சல பாரதியை வாசியுங்கள்..

தொல் பழங்குடி சமூகத்தின் எச்சங்கள் தான் நம் சில சடங்குகளில் கடத்தப்பட்டு வந்திருக்கின்றன.
இவை மானிடவியல் நோக்கில் அணுக வேண்டியவை.
இச்சடங்குகளை தலைமுறையாக கடத்தி வந்ததில் பெண்களின் பங்களிப்பு முக்கியமானது.
ஏன் இதைச் செய்கிறோம் என்று பெண்கள் தெரிந்து செய்யவில்லை என்பதால் அதைச் " சடங்கு" என்றழைக்கிறோம்.

பண்பாட்டு ஆய்வாளர்கள் இதை " தொல்படிமவியல்" என்பார்கள். இது உளவியலோடு தொடர்புடையது.
தொல்படிமம் என்பது வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு மனித குலத்தின் மூளையில் பதிந்த பண்பாட்டுத் தடயங்களின் சாரமாகவும், மரபு வழியாக வரும் கூட்டு நனவிலி (Collective unconsciousness) மனத்தின் வடிவமாகவும், மனித குலம் அதன் வெவ்வேறு காலகட்டங்களைச் சந்தித்த வகை மாதிரியான எண்ணற்ற அனுபவங்களின் உளவியல் நிலையிலான எச்சமாகவும் கொள்ளப்படுகிறது.

இதைப் பற்றிய எந்த ஒரு புரிதலும் இல்லாமல் ரொம்பவும் மேம்போக்காக பேசுவதைக் காணும்போது
நம் புரிதல் என்னவாக இருக்கிறது! என்பதைத்தான் இவை வெளிப்படுத்துகின்றன.

- புதிய மாதவி

######

கடந்த வார நீயா நானாவைப் பார்த்தபோது நானும் இதையே உணர்ந்தேன். சடங்குகள் மூடத்தனமானவை, மக்களை அவை அடிமையாக்குகின்றன என்பதே ரொம்ப பழைய மேம்போக்கான கருத்துதான். சடங்குகள் அடிப்படையில் மனிதர்களை இணைக்கின்றன, சேர்ந்து செயல்படும் நம்பிக்கையை, உற்சாகத்தை அளிக்கின்றன. அந்த பிணைப்பு உடையும்போது மனிதர்கள் சிதறி மைக்ரோ குடும்பங்கள் பிறக்கின்றன. அதனாலே அடுத்தவர்களின் அழுத்தத்தினால் சடங்குகளில் ஈடுபடுவதாக நாம் உணர்கிறோம். ஆனால் இன்னொருவருக்காக நாம் ஏன் ஒன்றைச் செய்யக் கூடாது? 

சரி அப்படியே செய்ய வேண்டாம் என்றால் விலகி தனியாக இருக்கலாம். தவறில்லை. ஆனால் பின்பற்றுகிறவர்களை மூடநம்பிக்கையாளர்கள், பெண்களை அடிமைப்படுத்துபவர்கள் என்றெல்லாம் பொருள்படப் பேசுவது வன்முறை. அது தனிமனிதர்களை அல்ல, சமுக அமைப்பையே கேலி செய்து தகர்க்கும்படி கோருகிறது. நாம் அந்த இடத்தில் இலக்கியம், அரசியல் சமூக இயக்கங்களை உருவாக்கி ஒன்றாகச் செயல்பட்டால் சரி. ஆனால் அங்கு நாம் வெறுமனே 9-9 உழைக்கிற தனியர்களையும், மன அழுத்ததையும், சுரண்டலையும், காங்கிரீட் சிறைகளையுமே உருவாக்கியிருக்கிறோம். நல்ல காற்று, உணவு, போதுமான இடவசதி, பேசப் பழக  களங்கள் இல்லாத நமது நகரங்கள் மனித மனத்தை சிதைக்கின்றன. இத்தகைய சமூகங்களிலே சர்வாதிகாரமும் வெறுப்பரசியலும் தோன்றும் என இரண்டாம் உலகப்போர் கால ஜெர்மனியை வைத்து ஹேனா அரெண்ட் கூறுகிறார். சமூகரீதியான மதத்தின் வீழ்ச்சியிலும் நவீன சமூகத்தின், பெரும் அரச மதத்தின் எழுச்சியிலுமே தான் பாஸிசம் உருவெடுக்கிறது. இந்து மதத்தை வீழ்த்தியே இந்துத்துவா தோன்றுகிறது. கும்பமேளாவில் நம் பிரதமர் கடவுளை அல்ல, தன்னைத் தான் முன்வைக்கிறார். அதுதான் நவீன சமூகம். அங்கு தனிப்பட்ட அந்தரங்க மதம், சடங்குகளுக்கு இடமிருக்காது. அதனிடத்தில் மதம் அரசியல்பட்டதாக, கொள்கை வயப்பட்டதாக இருக்கும். உண்மையானப் பகுத்தறிவு இந்த நுட்பமான வித்தியாசத்தைப் புரிவதே. 

மேலும் எல்லா பெண்களும் ஆண்களுக்காக சடங்குகளைச் செய்வதாகச் சொல்ல முடியாது. சிறுதெய்வ வழிபாட்டில் மிகத்தீவிரமாக இருக்கும் பல பெண்கள் குடும்பப் பொறுப்புகளையே கூட சிலநேரம் உதறிவிடுவார்கள். இந்த ஆத்ம பந்தமே அவர்களை விடுவிக்கிறது. 

நான் நீயா நானா நிகழ்ச்சி வறட்டுப் பகுத்தறிவுவாதம் பேசுவதாகச் சொல்லவில்லை. அடுத்து உடனே பக்தர்களை அழைத்து ஆடிப்பாடி ரகளையாக ஒரு நிகழ்ச்சி நடத்தி அதில் கோபிநாத்துக்கும் சாமி வருவதாகக் காட்டிவிடுவார்கள். எல்லா பக்கமும் நிற்பார்கள். டாக்டர் ஷாலினி கடைசியில் வராதவரை எல்லாமே சரியாகத்தான் போகும்.

- ஆர். அபிலாஷ்

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...