நான் பொதுவாக யார் கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிந்தாலும் போய் விசாரிப்பேன். விந்தி நடப்பவர்கள், கை, தலை உடைந்து கட்டுப்போட்டவர்கள், சக்கர நாற்காலியில் வருவோர் என. இன்று காலை அப்படி ஒரு சக ஊழியரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவருக்கு கடந்த ஆண்டு ஒரு விபத்து நடந்திருக்கிறது - அதிலிருந்து மீண்டும் வந்திருக்கிறார். ஆனால் அவருக்குப் பட்ட காயங்களுக்கும் அவர் சொன்ன சம்பவத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஏன் இப்படி நடநது, இது எப்படி சாத்தியம், அப்படித்தானே ஆகியிருக்க வேண்டும், இதைக் கேட்டீர்களா, ஏன் கேட்கவில்லை என்று விசாரித்துக் கொண்டிருந்தேன். ஏற்கனவே டுரோமாவில் இருந்தேன், இதற்கு மேல் மீண்டும் அவதிப்பட வேண்டாம் என விட்டுவிட்டேன் என்றார். ஆனால் என் மனம் அந்த டுரோமாவிடம் ஈர்க்கப்பட்டபடியே இருந்தது. எனக்கு அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோதே மனதில் ஒரு சுவாரஸ்யமான கதை தோன்றியது. சொல்லபோனால் 60% கதையமைப்பும் மனத்தில் சில வினாடிகளில் கோபுரம் போல் எழுந்துவிட்டது. அதில் இன்னொரு அடுக்கைச் சேர்த்தால் சுவாரஸ்யமான ஆழமான கதையாகிவிடும். நான் அதை அடையும் வரை என் உபமனம் அதைச் சிந்தித்துக் கொண்டே இருக்கும். அதை நான் எழுதாமல் போகலாம், எழுதலாம். ஆனால் எழுத்தாளராக இருப்பதன் அனுகூலம் எல்லா உரையாடல்களிலும் இரு கதையை, புதிய உலகைக் காண்பதுதான். இன்று மாலையில் அவரை மீண்டும் வெளியே எதிர்கொண்டபோது இதோ ஒரு கதாபாத்திரம் என்று தோன்றியது. கதாபாத்திரம் என்னைப் புன்னகையுடன் கடந்து சென்றது.
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...
கருத்துகள்