முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆங்கில வழிக்கல்வியும் காலனிய அடிமை மனநிலையும்

 "Decolonization of medical education: A global screening of instructional languages and mother tongue dependence" எனும் ஆய்வுக் கட்டுரையில் ஹமாத் உலகம் முழுக்க ஐரோப்பிய தேசங்கள் ஆங்கிலம் அல்லாத தத்தமது தாய்மொழியிலேயே மருத்துவக் கல்வியை வழங்குகின்றன என்கிறார். ஜெர்மனி, ஸ்வீடன், நார்வே, கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. உலகளவில் 2900 மருத்துவக் கல்லூரிகளில் 55.6% மேலானவற்றில் தாய்மொழியில் தான் கற்பிக்கிறார்கள், ஆங்கிலத்தில் அல்ல. இதனால் இவர்களுடைய மருத்துவ ஆய்வுத் தகுதியோ மருத்துவப் பணியாற்றும் திறனோ உலகளவிலான மதிப்போ இல்லாமல் ஆகிவிடவில்லை. ஆங்கிலம் தாய்மொழியாக அல்லாத 53 நாடுகளில் மட்டுமே ஆங்கில வழியில் மருத்துவம் கற்பிக்கப்படுகிறது. அதேநேத்தில் முன்னாள் காலனிய நாடுகள் (ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில்) மருத்துவக் கல்வியை பரவலாக ஆங்கிலத்தில் இன்றும் கற்பிக்கிறார்கள். இது ஒரு நடைமுறைத் தேவையாக அல்லாமல் பண்பாட்டுச் சிக்கலாகவோ உள்ளது. இந்தியாவைப் போன்ற முன்னாள் காலனிய நாடுகள் பின்-காலனிய தேசங்கள் ஆகும்போது மேற்கத்திய தேசங்களின் சாயலில் இருந்து விடுபட முடியாமல் திணறுவதுடன், உலகமயமாதலின் பிடியிலும் சிக்கியிருப்பதால் ஆங்கிலத்தைப் பிடிவாதமாகப் பற்றிக் கொள்கின்றன. இது இந்நாடுகளில் ஆங்கிலம் அறிந்த மேற்தட்டு, அறியாத கீழ்த்தட்டு எனும் பின்-காலனிய படிநிலையைத் தக்க வைக்கவும், ஆதிக்க கலாச்சாரத்தைத் தொடரவும் ஆளும் வர்க்கத்துக்கு உதவுகிறது. மெல்லமெல்ல இதிலிருந்து விடுபடுவது, எதிர்-காலனியமாக்கல் செய்வது வெகுமக்களுக்கு கல்வியை அணுக்கமாக்கும்.

மோடிக்கும், அமித் ஷாவுக்கும் இந்த உயரிய நோக்கம் உள்ளதாக நான் சொல்லவில்லை. அவர்கள் கடைசியில் இந்தி வழியாக மருத்துவம் கற்க வேண்டும் என்றே சொல்வார்கள், அதற்கே அதிகமாக நிதி வழங்குவார்கள். ஆனால் தாய்மொழி வழிக்கல்வி எனும் இந்த ஐடியா முக்கியமானது. தமிழ்நாட்டில் இருந்து ஒரிஜினலான ஆய்வுகள் நடக்கவும், ஆங்கிலப் பரிச்சயம் இல்லாத மக்களுக்கு மருத்துவத்தைப் புரிந்துகொள்ளவும், மருத்துவர்களுடன் அணுக்கமாக உணரவும் இது உதவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...