முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாய் மட்டும் இல்லாவிட்டால்...


 

நேற்று பிரதமர் உரையாற்றும்போது ஜி.எஸ்.டியில் மாற்றங்கள் கொண்டு வரப்போவதாகவும், அதனால் விலைவாசி குறைந்து மக்களால் அதிகமாகச் செலவழிக்க முடிந்து, பொருளாதாரம் வளரப் போகிறது (அதாவது, பொருளாதார வீக்கம் குறையப்போகிறது) என்றார். அதைக் கேட்கையில் அடடா என்றிருந்தாலும் ஐயய்யோ என்றும் இருந்தது. இவர்கள் என்ன சொன்னாலும் செய்வது இன்னொன்றாக இருக்குமென்பதே நம் அனுபவம். இன்று செய்தியில் ஜி.எஸ்.டி மாறுதலால் எந்த பொருட்களுக்கெல்லாம் விலை குறையும் என்று போட்டிருந்தார்கள். டி.வி. ஏஸி போன்ற மின்னணு சாதனங்கள், சைக்கிள், பேக்கரி ஐட்டங்கள், சேவ் போன்ற நொறுக்குத்தீனிகள், கண்ணாடி, மருந்துகள், நோட்டுப் புத்தகங்கள், பேனா போன்ற கல்விக்கான பயன்பாட்டுப் பொருட்கள். இதை அவர் இந்திய மக்களுக்கான தீபாவளிப் பரிசு என்று அறிவித்திருக்கிறார். ஆனால் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள அத்தியாவசியப் பொருட்களுக்கு அவர் வரியைக் குறைக்கவில்லை. அதாவது அன்றாட உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்கும் முயற்சியை எடுக்கவில்லை. முக்கியமாக பெட்ரோல், டீஸல் மீதான ஜி.எஸ்.டியை வெகுவாக குறைத்து அதன்வழியாக அதன் விலையைக் குறைக்கவில்லை. சும்மா ஏ.ஸி, டிவி விலையைக் குறைப்பதால் மக்களின் அன்றாடத் தேவைகள் தீரவோ பிரச்சினைகள் தணியவோ போவதில்லை.

ஒருவர் இன்று மாதம் 10,000 சம்பாதித்தால் வாழவே முடியாது. நகரங்களில் 20,000 கூட ஒரு குடும்பத்துக்குப் போதவில்லை. காய்கறி, மளிகை சாமான்கள் விலையெல்லாம் எக்குத்தப்பாய் எகிறிக் கிடக்கின்றன. வீட்டு வாடகை லாக் டவுனுக்குப் பிறகு பெருமளவு அதிகரித்துவிட்டது. சம்பளம் பெரும்பாலும் உணவு, உறைவிடத்துக்கே போய்விடுவதாலே மக்களால் நுகர்வுப் பொருட்களை வாங்க முடியவில்லை. பெட்ரோல், டீஸல் விலையில் 30-40 ரூபாய் குறைந்தாலே மிகப்பெரிய மாற்றம் வரும். உணவுப் பொருட்களின் விலை குறையும். பொருளாதார வீக்கம் குறையும். இன்று 20% மேல் பெட்ரோலில் எத்தனால் சேர்க்கப்படுகிறது. உலகம் முழுக்க கச்சா எண்ணெய்யின் விலை குறைந்திருக்கிறது. அதனால் நியாயமாகவே விலையை 80 ரூபாயாகக் குறைத்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. கூடுதலாக ஜி.எஸ்.டியையும் குறைத்தால் 50 ரூபாய்க்கே கூட கொடுக்கலாம். அரசு தன் வருமானத்தையும் அம்பானிகளின் வருமானத்தையுமே பிரதானமாகக் கருதுவதாலே நம் பொருளாதாரம் வீங்கிவீங்கி வெடிக்கும் நிலையில் இருக்கிறது.
அடுத்து, நோட்டுப் புத்தகம், பேனாவின் ஜி.எஸ்.டியைக் குறைக்காமல் தனியார் பள்ளிகள், பல்கலைக்கழகங்களின் கல்விக் கட்டணத்திற்கு ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வந்திருக்க வேண்டும். மத்திய வர்க்க குடும்பங்களின் வருமானத்தில் பெரும்பகுதி கல்விக் கட்டணம் செலுத்துவதிலேயே போகிறது. அடுத்து, நிலத்தில் முதலீடு செய்வதிலும், வாடகையிலும் கட்டுப்பாடு அவசியம் - மக்கள் பணத்தை பங்குகளிலும் தங்கத்திலும் முதலீடு பண்ணுவதைத் தடுக்கும் நோக்கில் வரியை அதிகரித்த அரசு ரியல் ஏஸ்டேட்டைத்தான் நிஜத்தில் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் நிலத்தின் விலையை அரசே நிர்ணயிக்கும் என அறிவித்து, வங்கிகளும் தாம் அளித்த பணத்தின் வட்டியை சரிபாதியாகக் குறைக்க வேண்டும் என அறிவிக்க வேண்டும். நிலத்தை, வீட்டை வாங்கி விற்பதில் ஒரு லாக் இன் பீரியட் கொண்டு வரலாம். பணம் நிலத்தில் முடங்காமல் இருந்தாலே வணிகம் வளரும். அதுவே வீடு வாங்குவதற்கான கடனில் சிக்கித் தவிக்கும் மக்களைக் காப்பாற்றும். இதைச் செய்ய விருப்பம் இல்லாவிடில் அரசே மக்களுக்கான மலிவு விலை வீடுகளைப் பரவலாக எல்லா நகரங்களிலும் கட்டி விற்கலாம் (பழைய சோவிய நாடுகளில் நிகழ்ந்ததைப் போல).
பிரதமருக்கு இதைக் குறித்தெல்லாம் எந்த அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஜி.எஸ்.டியைக் குறைக்கும்படி பெருவணிகர்களின் லாபி போடும் அழுத்தத்திற்கு ஏற்ப சில பொருட்களுக்கு மட்டும் குறைத்திருக்கிறார்கள். (மருந்துகளின் ஜி.எஸ்.டியைக் குறைத்தது மட்டுமே பாராட்டத்தக்கது.) ஆகையால் இதைப் பெருவணிகர்களுக்கான தீபாவளிப் பரிசென்றே கூறலாம். இதனால் மக்களின் பாக்கெட்டில் பணமும் மிஞ்சாது, நுகர்வும் அதிகரிக்காது. அமித் ஷா கூட எடையைக் குறைத்துவிட்டார். ஆனால் பொருளாதாரத்தின் தொப்பை வீக்கம் குறையாது.
இந்த வாய் மட்டும் இல்லாவிட்டால் நாய் தூக்கிக்கொண்டு போய்விடும் என்பார்கள். அது நம் பிரதமருக்குப் பொருந்தும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...