Skip to main content

கிரிக்கெட்டும் போரும்

 சர்வதேச கிரிக்கெட் அடிப்படையில் தேசிய உணர்வைத் தூண்டுவதற்காக நடத்தப்படுவது என்பதில் மறுப்பில்லை. ஆனாலும் கிரிக்கெட் ரசனையைக் கொண்டு நாம் கடந்த அரைநூற்றாண்டு காலமாகவே தேசவெறியைக் கடந்து செல்ல முயன்றுள்ளோம். சென்னையில் வசீம் அக்ரமின் பாகிஸ்தான் அணி இந்திய அணியை ஒரு டெஸ்ட் போட்டியில் முறியடித்தபோது இந்திய ரசிகர்கள் கைத்தட்டி பாகிஸ்தானைப் பாராட்டியது ஒரு முக்கியமான நிகழ்வாக அதனாலே பார்க்கப்பட்டது. எதிரணியினர் பயணம் வரும்போது அவர்களை அதிகப்படியாக பார்வையாளர்கள் பரிகசிப்பதோ எதிர்ப்பதோ இனவாதமாகவும் விளையாட்டின் கௌரவத்துக்கு இழுக்காகப் பார்க்கப்படுவதும் அதனாலே. அதேநேரத்தில் இரண்டு நாடுகளுக்கு எதிராகப் போர் நடந்து முடிவுக்கு வந்தபின்னர் அவர்கள் மோதிக்கொள்ளும்போது அதை அப்போரின் தொடர்ச்சியாகப் பார்க்க வேண்டுமா? அது சரியா?

அது நிச்சயமாக அருவருப்பானது. போரே ஒரு அருவருப்பான நிகழ்வுதான். அது கொலைப்பாதகச் செயல்தான். நாம் போரில் எப்போதுமே நம் நாட்டவர் கொல்லப்படும்போது அதை இரங்கத்தக்கதாகவும் எதிர்நாட்டவர் கொல்லப்படும்போது அதைப் பாராட்டுக்குரியதாகவும் நினைக்கிறோம், ஆனால் எல்லையில் வாழும் நம் நாட்டவரின் மரணமே கூட நம் தேசத்தின் ஆளும் வர்க்கத்தின் குற்றம்தான் எனப் புரிந்துகொள்வதில்லை. இம்முறை ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானை இந்தியா முறியடித்தது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் - அதாவது பாஜகவின், அமித் ஷா மற்றும் அவரது மகனின் - அறிவுறுத்தலின்படி இந்திய அணியின் தலைவர் சூரியகுமார் யாதவ் பாகிஸ்தான் அணித்தலைவர் சல்மான் அலி ஆகாவுடன் கைக்குலுக்கவில்லை. இதை பாகிஸ்தான் பயிற்சியாளரும் கிரிக்கெட் வாரியமும் கண்டித்துள்ளது. இதை சாத்தியமாக்கிய ஆட்ட மேற்பார்வையாளரான (match referee) ஆன்டி பைக்கிராப்டை நீக்க வேண்டும் எனக் கோரியுள்ளது. சூரியகுமார் கைகுலுக்காதததுடன் கிரிக்கெட்டின் நல்லுணர்வை விட தேசநலன் முக்கியமானது என்று கூறியிருக்கிறார். ஆட்டத்தின் வெற்றியை பெஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கும் இந்திய ராணுவத்திற்கும் அர்பணித்திருக்கிறார். எனக்கு அப்போது ஒரு கேள்வி ஏற்பட்டது: நாட்டுக்கான ஒரு மறைமுகக் கலாச்சார 'தாக்குதலாக', குறியீட்டு யுத்தமாக, இப்போட்டி மாறுகிறது என அவர் தெரிவிக்கிறார். எனில் இப்போட்டியில் இந்தியா தோற்றிருந்தால்? இந்தியா இப்போரில் வென்றதாகப் பெருமைப்பட்டது. போட்டியில் தோற்றிருந்தால் நாம் பாகிஸ்தானிடம் குறியீட்டு யுத்தத்தில் அடிபணிந்ததாக ஆகிவிடுமா? நாம் தேசப்பற்று இல்லாமல் நடந்துகொண்டோம் என்றாகுமா? (மும்பை கிரிக்கெட் முன்னாள் அணித்தலைவரும், டிரிப்யூன் பத்தியாளருமான ஷிஷிர் ஹத்தங்காடியும் இதையேதான் கேட்கிறார்.) எனில் அதைச் சரிசெய்ய நாம் மீண்டும் அவர்களுடன் மோதியிருப்போமா? அடுத்து, பாகிஸ்தான் வென்று இதே போல குண்டு வீசப்பட்டு இந்தியாவால் கொல்லப்பட்ட எல்லையோர பாகிஸ்தானியருக்கு வெற்றியை அர்ப்பணிக்கிறோம் எனச் சொல்லியிருந்தால் இந்தியா அதைத் தாங்கியிருக்குமா? அது எந்தளவுக்கு அழுத்தத்தை, நெருக்கடியை வீரர்களுக்குக் கொண்டு வந்திருக்கும்? ஒருவேளை இதைக் கொண்டு நாம் மீண்டும் போர் தொடுத்திருப்போமா? இதிலெல்லாம் எதாவது லாஜிக் உள்ளதா?
அடுத்து இது விதிமுறை மீறல் ஆகாதா? என்னதான் இத்தொடரை ஐ.சி.சி நடத்தவில்லை என்றாலும் - ஐ.சி.சியின் நடுவர்களும் ஆட்ட மேற்பார்வையாளரும் நியமிக்கப்பட்ட நிலையில் - இதை ஏற்க முடியுமா? இரண்டாண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் வீரர் உஸ்மான் குவாஜா பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒரு சொல்லை ஒரு போட்டியில் புலப்படுத்திட ஐ.சி.சி அவரைத் தண்டித்தது. 2014இல் இங்கிலாந்தின் மொயின் அலியும் இவ்வாறு தண்டிக்கப்பட்டார். ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு விதிமுறையா? இஸ்லாமியர் செய்தால் குற்றம், இந்து மதத்தவர் செய்தால் நியாயமா?
கிரிக்கெட்டை முன்பு அயலுறவு அமைச்சகத்தின், உள்துறை அமைச்சகத்தின் முடிவுப்படி நிறுத்திவைத்தார்கள். மோடியின் அரசியல் அதைவிட மோசமானது - அவர் இப்போட்டிகள் நடப்பதையும் அதைக்கொண்டு அரசியல் செய்தியைப் பிரகடனம் செய்வதையும் விரும்புகிறார். இவ்வாறு மதவெறுப்பை, கசப்பை கிரிக்கெட்டில் கலக்கிறார். அமெரிக்கா நல்லவேளை சர்வதேச கிரிக்கெட் போட்டித்தொடர்களில் பரவலாக ஆடவில்லை. இல்லாவிட்டில் டிரம்பின் பைத்தியக்காரத்தனங்களையும் கிரிக்கெட்டில் பார்க்க வேண்டியிருக்கும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...