Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

பைக்: நனவுவெளிக் குறிப்புகள் (ஆ)

 4) வண்டியை ரெட்ரோ பிட் (இரு சக்கரங்களையும் ஷாப் அப்சர்வர்களையும் இணைத்து கியரை வலப்பக்கம் லிவராக மாற்றி வைத்துக்கொடுப்பது) செய்தபிறகுதான் நான் முதன்முதலாக கியர் மாற்றக் கற்றுக்கொண்டேன். அதுவே அந்த பட்டறையின் முகப்பில்தான் வண்டியில் அமர்ந்து முதல் கியருக்கு மாற்றி ஓட்டிப் பார்த்தேன். முதலில் ஸ்டால் ஆனது. ஆனால் தொடர்முயற்சியில் பத்து நிமிடங்களிலே முதல் கியர் வசப்பட்டது. இரண்டாவது, மூன்றாவது கியர்களுக்கு மாற்றி ஓட்டுவது சிரமாக இருந்தது. முதலில் ஓட்டும்போது சில அடிப்படைகள் தெரியாததால் (எந்த வேகத்தில் கிளட்சைப் பிடித்து கியரை மாற்ற வேண்டும், ஏற்றத்தில் எந்த கியரில் வண்டியை எடுக்க வேண்டும், திடீரென எதிரில் வண்டி வந்தாலோ போக்குவரத்து நெரிசல் தோன்றினாலோ என்ன செய்வது) குழம்பிப் போனேன். என்னால் நிச்சயமாக வீட்டுக்கு வண்டியை எடுத்து வரமுடியாது எனத் தெரிய (அதாவது என அசட்டுத் தைரியம் வடிந்ததும்) அங்குள்ள ஒரு மெக்கானிக்கிடம் உதவி கேட்டேன். அவர் ஒரு சிறிய கட்டணத்துக்கு வண்டியை எடுத்து வந்துவிட்டார். இரு நாட்களுக்குப் பிறகு என் நண்பர் ஒருவர் வந்து கியர் மாற்றச் சொல்லித் தந்தார். முதல் கியரில் இருந்து இரண்டாவது கியரில் ஓட்டினேன். அவ்வப்போது ஸ்டால் ஆனது என்றாலும் தடுமாறாமல் இரண்டு முறைகள் என் வீட்டைச் சுற்றியுள்ள சில தெருக்களை அடைந்தேன். போகும்போது ஒரு பைக்கை உரசினேன், மற்றபடி யாரையும் இடிக்கவில்லை. ஆனால் மூன்றாவது கியருக்குப் போக முடியவில்லை. அதன்பிறகு நண்பர்களைச் சார்ந்து மட்டும் பைக் கற்றுக்கொள்ள முடியாது, முறையான பயிற்சியாளர் அவசியம் எனத் தோன்றியது. பைக் ஓட்டச் சொல்லித் தரும் பயிற்சியாளர்களை அழைத்தால் அவர்கள் பைக்கை அவர்களுடைய இடத்துக்கு எடுத்து வரச் சொன்னார்கள். நான் எடுத்து வருவேன் சார், ஆனால் வழியில் பல விபத்துகள் நடக்குமே எனச் சொன்னதற்கு அவர்கள்விரைவில் தொடர்பு கொள்கிறோம்என்று சொல்லி மாயமாகிவிட்டார்கள். கடைசியில்ஹீல்ஸ் ஆன் வீல்ஸ்எனும் பயிற்சிப் பள்ளியினர் கேட்டதும் ஒப்புக்கொண்டனர்


5) பவன் என்பவர் என் வீட்டுக்கே வந்தார். தாம் மைதானங்களில் ஓட்டப் பயிற்சி அளிப்பதில்லை, சாலைகளே சரியான பயிற்சிக்களங்கள் என்றார். நான் வண்டியை வெளியே எடுத்து வழக்கம்போல முதல் கியரைப் போட்டு அவரையும் பின்னால் ஏற்றிக்கொண்டேன். இரண்டாவது கியருக்கு வந்தேன். தெருக்களைச் சுற்றினோம். அவர் எதிர்பாராதவிதமாக என்னைப் பிரதான சாலைக்குப் போகச் சொன்னார். நான் உலகின் அத்தனைக் கடவுள்களையும் அழைத்து வாகன ஓட்டிகளைக் காப்பாற்றக் கேட்டுக் கொண்டு பிரதான சாலையில் இறங்கினேன். பைக் ஓட்டுவது ஒருவிதத்தில் சுலபம்தான் எனத் தோன்றியது - பயிற்சியாளர் பின்னிருந்து கியரை மாற்ற அறிவுறுத்திக் கொண்டிருந்தார்: 15 கிலோமீட்டர் தாண்டியதும் கிளட்சைப் பிடித்து இரண்டாவது கியர், 25-30 கிலோமீட்டர் வந்ததும் மூன்றாவது கியர் இப்படி. வாகனங்கள் எனக்கு முன்னால் நின்றதும் வேகத்தைக் குறைத்தால் என் வண்டி ஸ்டால் ஆவது, அதிக கியரில் வேகம் குறைந்தால் வண்டி ஏதோ வயிற்றுப் போக்கு வந்த வயிற்றைப் போல கடமுடாவெனச் சத்தம் போடுவது (knocking), ஏற்றத்தில் வண்டி நின்றால் பின்னுக்கு உருள்வது எனப் புதுப்புதுப் பிரச்சினைகள் தலைகாட்டின. (பதற்றத்தில் என் சட்டை நனைந்துவிட்டதென்றாலும் தைரியமாக இருப்பதாக பாவனை செய்தேன்.) அவர் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு சொன்னார் (ஸ்டால் ஆனால் கவலைப்படாமல் வண்டியைக் கிளட்சைப் பிடித்து ஸ்டார்ட் செய்வது, சிலநேரங்களில் கியரைக் குறைத்து ஸ்டார்ட் செய்வது, ஏற்றத்தில் முதல் கியரை போடுவது, வேகத்தைக் குறைக்கையில் அப்படியே கியர்களையும் குறைப்பது இப்படி). ஆனால் அவரது அறிவுரைகளை நினைவில் வைத்து செயல்படுத்துவது வரவில்லை. அவர் பின்னிருந்து என்னை நிதானப்படுத்தினார். முக்கியமான விசயங்களை மட்டும் அவ்வபோது சொல்லிக் கொடுத்தாலும் நான் தவறுசெய்வதை அவர் பொருட்படுத்தவில்லை. இது என்னை அமைதியாக்கியது. நான்காவது கியர் வரைப் போனேன். புரியாத உச்சரிப்பில் பேசும் ஆங்கிலேயர்களுடன் தலையசைத்தபடி உரையாடுவதைப் போல போக்குவரத்தையும் சாலையையும் சமாளித்து வண்டியை ஓட்டி வீட்டுக்கு கொண்டு வந்துவிட்டேன். வீட்டுக்கு வந்ததும் அவர் சொன்னார், “உங்களுக்கு இன்னும் ஒரு நாள் பயிற்சி போதும். வெள்ளிக்கிழமை காலையில் வருகிறேன்.” அட, என்னாலே நம்ப முடியவில்லை. “என்னது ஒருநாளா?” “ஆமா. எத்தனையோ பேர்களுக்குப் பயிற்சி கொடுத்துள்ள நான் சொல்கிறேன், நம்புங்க, உங்களுக்கு இன்னும் ஒருநாள் போதும்.” “ஒருநாளுக்குப் பின் நான் தினமும் சாலையில் ஓட்டலாமா?” “தாராளமா”. பல்லவிஇவரை நம்பி பின்னால் உட்கார்ந்தால் என் உயிருக்கு உத்தரவாதம் உண்டா?” என்று பலமுறைகள் கேட்டார். அவர் பாகிஸ்தான் யுத்தத்தின்போது நம் ராணுவ தளபதிகளைப் போலஒண்ணுமே இல்ல, தைரியமா ஏறிப் பாருங்கஎன்றார். அவரது நம்பிக்கை எனக்குப் பிடித்திருந்தது - நான் முரட்டுத்தனமான தன்னம்பிக்கை கொண்டவன் என்பதால், அவர் அப்படிச் சொன்னது பிடித்திருந்தது. கொஞ்சம் மனம் வைத்தால் ராக்கெட்டையே ஓட்டலாம் என நம்புகிறவன் நான். ஆனால் பல்லவி சுலபத்தில் நம்பவில்லை. ரெண்டாவது நாள் பயிற்சியும் முடியட்டும் எனக் காத்திருந்தேன். ஆனால் அவர் சொன்ன நாளில் அதன்பிறகு வரவில்லை.  


(தொடரும்)

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...