Skip to main content

பைக்: நனவுவெளிக் குறிப்புகள் (அ)

 1)


பைக் - அதாவது கியர் பைக் - ஓட்ட வேண்டும் எனும் ஆசை ஏன் தோன்றியது எனத் தெரியவில்லை. பெங்களூரின் யுத்தக் களம் போன்ற சாலைகளாலா? பைக்கின் சப்தத்தினாலா? தோற்றமா? எப்போது என்று மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது.

 இருபதாண்டுகளுக்கு மேலாக ஸ்கூட்டர் ஓட்டுகிறேன். அது கிட்டத்தட்ட என் உடலின் நீட்சி. அரைத்தூக்கத்திலும் சுலபமாக ஓட்டலாம். என் இப்போதைய ஸ்கூட்டர் வாங்கி ஒன்பதாண்டுகள் தாண்டிவிட்டன. இன்னும் சில ஆண்டுகள் ஓட்டலாம் என்றாலும் அதை முதியோர் இல்லத்துக்கு அனுப்பி பை சொல்ல வேண்டிய காலமும் நெருங்கிவிட்டது. அடுத்து மின்-ஸ்கூட்டரா அல்லது அதிக சிசி கொண்ட பெட்ரோல் ஸ்கூட்டரா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் மீண்டும் ஸ்கூட்டரா என்று அலுப்பாக இருந்தது. புதிதாக எதையாவது செய்யலாம். கியர் பைக் ஓட்டத் தெரியாது. அதை வாங்கி ரெட்ரோ பிட் செய்து கற்றுக்கொள்ள வேண்டும் - கல்யாணம் பண்ணி பேசிப் புரிந்து அதன்பிறகு காதலிக்க வேண்டும் என்பதைப் போல. விவாகரத்து எனும் கொட்டடி வதையில் இருந்து தப்பிக்க எடுத்த வங்கிக் கடன் வேறு சாலை முனையில் கட்டிப் போடப்பட்டு வாகன நெரிசலை ஏற்படுத்தி நிற்கும் யானையோ போல என்னைப் பார்த்து முழுக்கிறது. அதை மெல்லமெல்ல இளைக்க வைத்துவிட்டேன் என்றாலும் வட்டி குறையாத தொப்பையாக இருக்கிறது. நான் சம்பாதித்துச் சேமிப்பது, உபரி வேலைகளில் ஈட்டுவது எல்லாவற்றையும் சாப்பிட்டுஎனக்கொண்ணும் தெரியாதுஎன வட்டியும் முதலும் பருத்த மலைப்பாம்புகளாகப் பின் தொடர்கின்றன. இப்போது போய் ஒரு புதிய முதலீடா, அவசியமா? அப்படியே குழப்பத்தில் முடிவைத் தள்ளிப் போட்டபடி இருந்தேன். இன்னொரு பக்கம் பைக் சம்மந்தமான காணொளிகளைப் பார்ப்பது, கியர் மாற்றச் சொல்லித் தரும் யுடியூபர்களைப் பின் தொடர்வது, நண்பர்களிட்ம் அதைப் பற்றிக் கேட்பது என இருந்தேன். இப்போதைய ஸ்கூட்டர் நன்கு காய்த்த புளியமரத்தை தோட்டையுடன் அணுகும் உரிமையாளரைப் போல என்னை உலுக்கி எடுப்பதால் அதில் நான் என்றுமே நீண்ட தூரம் அதில் பயணித்ததில்லை. ஒருநாள் ஒசூருக்குத் தற்செயலாக அதில் போக நேர்ந்தது - அதுதான் திருப்புமுனை: அப்பயணத்தை மிகவும் ரசித்தேன். நெடுஞ்சாலையில் இப்படிப் பறப்பது இவ்வளவு ஜாலியாக இருக்குமா? அப்போதுதான் ஸ்கூட்டர் மீது எனக்கு காதலே வந்தது. அதை சர்வீஸ் செய்து பாகங்களை மாற்றி பிக் அப்பையும் சரியாக்கினேன். விபத்தில் இருந்து மீண்டு ஆட வந்த ரிஷப் பண்ட் போலாகிவிட்டது. அதன்பிறகு அதில் சில முறைகள் ஒசூரும், ஒருமுறை மைசூரும் போனேன். வேகமாக ஓட்டும்போது - எதிர்க்காற்றில் கொசு பறப்பதைப் போலத்தான் இருக்கும் என்றாலும் - ரொம்ப உற்சாகமாக உணர்ந்தேன். நெடுஞ்சாலையைப் பார்த்தால் என் கை ஆக்ஸிலேட்டரை முறுக்கத் தொடங்கும். அப்படியே கிழித்துக்கொண்டு போவதில் தப்பித்து ஓடும் கைதிக்கு பிடிபடுமுன் வரும் ஒரு சந்தோஷம். ஆனால் இப்படியே போனால் ஸ்கூட்டர் தாங்காது. இருக்கிற பணத்தைத் திரட்டி பைக் வாங்கலாம் என முடிவெடுத்தேன். அவெஞ்சர்தான் என் மனத்தில் முதலில் வந்தது. அதன்பிறகு வெவ்வேறு பைக்குகள் குறித்து நிறைய ஆய்வு செய்து யோசித்துக் குழப்பி அலைந்து திரிந்து விசாரித்து அவெஞ்சர் தான் சரி எனும் முடிவுக்கு வந்தேன்


2) அவெஞ்சரில் நகரச் சாலைகளில் ஓட்டுவதற்கும் நெடுஞ்சாலையில் ஓட்டுவதற்கும் என்று இரு மாடல்களை வைத்திருக்கிறார்கள் (160-220 ஸிஸி). இரண்டிலும் உட்கார்ந்து பார்த்தபோது 220யின் உட்காரும் நிலைதான் பிடித்திருந்தது. 160யில் சற்று முதுகை வளைக்க வேண்டும். ஹேண்டில் பார் நேராக இருந்ததால் 220 அளவுக்கு அவ்வளவு வசதியாக இல்லை.  


3) வண்டியை ரெட்ரோ பிட் செய்ய இடத்தைக் கண்டுபிடிப்பது சற்று சிரமமாக இருந்தது. ஹைதராபாதில்தான் சூப்பராகச் செய்கிறார்கள். அடுத்து மும்பை. அங்கெல்லாம் கொண்டு போக முடியாது. நான் சென்னையில் என் ஸ்கூட்டரை ரெட்ரோ பிட் செய்தபோது இருந்ததைப்போல இப்போது இல்லை. விலை இரட்டிப்பாகிவிட்டது, சக்கரங்களைப் பொருத்தும் சட்டகமும் விரிவாகிவிட்டது. என் ஸ்கூட்டர் பழைய மாடல் ரெட்ரோ பிட்டிங். அதை ஓரளவுக்கு இடமுள்ள டிராபிக்கில் நுழைக்கலாம், ஆனால் ஏற்றத்தாழ்வான இடத்தில் சட்டெனக் கவிழ்ந்துவிடும்; இப்போதைய ரெட்ரோ பிட் ஸ்கூட்டர்களையோ நீங்கள் கர்ப்பிணிப் பெண்ணைப் போலத்தான் போக்குவரத்து நெரிசலில் அழைத்துச் செல்ல வேண்டும் என்றாலு அவை மிகுந்த சமநிலையைக் கொண்டிருக்கும், சுலபத்தில் சரியாது. பெங்களூரில் பனேர்கெட்டா விலங்குகள் காட்சியகத்தின் அருகே ஒருவர் இதற்கென்றே ஒரு பட்டறையை வைத்திருக்கிறார். (கடைக்கு சைத்ர ஶ்ரீ என்ஜினியரிங் எனப் பெயர்). வயதான மனிதர். முப்பதாண்டு அனுபவம். நல்ல வேலைக்காரர். குழந்தை மனதுக்காரர். எதாவது கேள்வி கேட்டு அவரை நாம் சந்தேகிக்கிறோம் என்று பட்டால் கோபித்துக் கொள்வார். அப்படித்தான் பல்லவிக்கும் அவருக்கும் இரண்டாவது நாளே மோதல் ஏற்பட்டது. “நீங்கள் வண்டியை ஸ்கிராட்ச் போட்டுவிடுவீர்களா?” என்று கேட்டாள். அடுத்து வண்டியை நாங்கள் விடும்போது அவள் காணொளிப் பதிவு பண்ணினாள். “என்ன நம்ப மாட்டீங்களா?” என்று கன்னடமும் தமிழும் கலந்து பொரிந்தார். நான் அவரைச் சமாதானப்படுத்தினேன். அவர் கொதித்தபடியே இருந்தார். (வயதானவர்களை வளர்ந்தவர்களாக நடத்தக் கூடாது, அவர்களைக் குழந்தையைப் போல நடத்தினாலே காரியம் நடக்கும் என்பது என் அனுபவம்.) நான் அங்கு போய் அவர் ரெட்ரோ பிட் பண்ணி வைத்திருக்கிற வண்டிகளைப் பார்த்தேன். ஒன்றை எடுத்து ஓட்டினேன். அதன் சமநிலை எனக்குப் பிடித்துவிட அதைச் சொன்னேன். அவரது ரெட்ரோ பிட்டிங் எவ்வளவு திறமையாக, கச்சிதமாக உள்ளது என்று வியந்தேன். உற்சாகமான அவர் பல்லவியிடம் தான் கோபத்தில் பேசியதற்கு மன்னிப்பெல்லாம் கேட்டார். அவரிடம் முன்பணம் கொடுத்து பணியை ஒப்படைத்தேன். பைக்கை வாங்கியபின் அங்கு ஷோரூமில் இருந்து ஒருவர் எடுத்து வந்துவிட்டார்.


(தொடரும்)

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...