Skip to main content

"கால்கள்" நாவல் கிண்டில் பதிப்பு

 


வைத்தியர் ஊரில் வந்த நாளில் இருந்தே சேகரித்த எண்ணற்ற நண்பர்களில் ஒருவனாக ஒருநாள் தேங்காய் நார், வர்ணம் இழந்து அவனது உடல் நிறம் ஒட்டிக் கொண்ட துவர்த்து, தேங்காய் எண்ணெய் வாசனையுடன் குளியல் தயாரிப்புடன் வாசல் படிக்கட்டி அமர்ந்து அவளை நோக்காமல் வைத்தியரிடமும், சில சமயம் அவளிடம் துணுக்குகளாய் பேசிக் கொண்டிருந்தான். வாக்கியங்களை முடிப்பதில் ஒருவித சோம்பல் அவனுக்கு. பாதியில் கைவிட்டு மற்றொன்றுக்கு தாவி அதிலும் சுவாரஸ்யம் இழந்து
அவளுக்கு நடந்து பழக மரக்கட்டைகளால் கைப்பிடி அமைக்க ஒரு புது யோசனையுடன் அன்று வைத்தியர் வந்திருந்தார். முன் தினம் சைக்கிள் ஓட்டும் பயிற்சி அவளது கால்களை வலுப்படுத்தும் என்று ஆற யோசித்து அப்பாவிடம் விளக்கிக் கொண்டிருந்தார். அப்பாவுக்கு அது ரொம்ப பிடித்திருப்பதாய் தலையாட்டினார். அவளது உடல்நலம் பற்றிய அலோசனைகளில் அதிகப்படியாய் வினோதமாக கற்பனாதிதமாக உள்ளவை கேட்டால்தான் அப்பா மிகவும் ஆர்வம் கொள்வார். சைக்கிள் ஓட்டுவதென்ன மரம் ஏறுவது இன்னும் அற்புதமான யோசனையாக அவருக்கு தோன்றியிருக்க கூடும். “பண்ணீருவோம் வைத்தியரே” என்று திரும்ப திரும்ப சொன்னார்.
அடுத்த நாளான அன்று வைத்தியர் சைக்கிளை தற்காலிகமாய் மறந்திருந்தார். “முதலில் பிடிச்சு நடந்து ”கொஞ்சம் பெலம் வரட்டும் ... என்ன சொல்றீங்க” கரகர என்ற குரலில் விக்கி விக்கி சிரித்தார். அப்படி சிரித்தால் அமோதிக்க வேண்டும் என்று பொருள். இல்லா விட்டால் விட்டு விட்டு பொறி தெறிக்கும் எந்திர சக்கரம் போல் சிரித்துக் கொண்டே இருப்பார்.
அப்பா “ஆமா ஆமா ... எனக்கு அவ நடந்து பாத்தா போதும்” என்றார். அப்போது தான் கார்த்திக் குறிக்கிட்டு “சைக்கிள வாடகைக்கு ... ம்ம்ம் பரவாயில்ல திரும்ப கொடுத்திரலாம் ... அப்போ செல்லப்ப ஆசாரியை ... ” என்று இழுத்தான்.
அவன் கவனமாய் அவளை பார்ப்பதை தவிர்த்தான். ஆனால் அவள் எழுந்து முட்டி ஊன்றி ஓரடி எடுத்து வைத்ததும் அவனது திரும்பி அமர்ந்த உடலில் ஒரு திடுக்கிடல், நடுக்கம், அக்கறை. “செல்லப்பன் கிறுப்பு பயலப்பா. நமக்க தங்கச்சி பிள்ளைக்கு கட்டிலு செய்ய ரெண்டு நாள் வந்தான். மூணா நாள் ஆளு மாயமாயிட்டான். கட்டிலு இன்னும் வீட்டில அரைகுறையா கிடக்கு, மூணு காலோட. எங்க தேடினாலும் தொட்டி ராஸ்கலு கையில கிடைக்க மாட்டேங்கான். வேலை சுத்தம் இல்லடே அவனுக்கு”.
“ஒரு காலுதானே ... வீட்டுப்பக்கத்துல ஐயப்பன் இருக்கான்லயா .. கின்னரன் கேட்டீங்களா அனுப்பட்டுமா ... மூட்டீருவான் சில்லறை கொடுத்தா போரும் சைக்கிள எடுத்து வைச்சிருக்கேன் ராமப்பன் கடையில இருந்து. திரும்ப விட்டிரலாம் தான். நீங்க சொன்னீங்கன்னு தான் எடுத்து வந்தேன்” கார்த்திக் பதற்றமாயிருக்கையில் ,மட்டுமே இப்படி பேசுவான் என்பதை கவனித்தாள்.
அப்பா குறுக்கிட்டார் “பிள்ளே திரும்பி நேரே இருக்கணும். எந்த பங்கமும் வராது. திரும்புங்க மது ஒரு குழந்தைதானே”. அவன் நெளிவது முதுகுப் பக்கம் தெரிந்தது. அவன் அவ்வாறு மதுவுக்கு முதுகு காட்டி அமர்வது அப்பாவை வெறுப்புற வைத்திருக்க வேண்டும்.
அவளிடம் பழக ஆரம்பித்த பின் கருணையின் அரண் கொண்டு அவன் தன்னை பாதுகாத்து கொண்டான். பின்னர் இப்படியான பதற்றம் அவள் அருகாமையில் அவனுக்கு ஏற்படவில்லை.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...