முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாவல் எழுதுவது பற்றின குறிப்புகள் - 9


எழுதும் கலையும் (உத்தி) படைக்கும் கலையும் (அகத்தூண்டுதல்) வேறுவேறு. எழுதும் கலை புறவயமானது. புறவயமான உத்தி எந்தளவுக்கு நமக்கு உதவும்? நேற்று என் நாவலில் வேலை செய்து முடித்துவிட்டுப் படுக்கையில் இக்கேள்வி எனக்குள் எழுந்ததுஇன்று காலையிலும் இது என்னை அலைகழிக்கிறது. உத்திக்கும் படைப்பூக்கத்துக்குமான எல்லைக் கோட்டை எங்கு தீர்மானிக்கிறோம்? ஒருவேளை உத்தியும் ஒருவித படைப்பாக்கச் செயல்தானோ? நாம்தான் தேவையில்லாமல் இரண்டையும் தனித்தனியாகப் பிரித்து வைத்துப் பாவிக்கிறோமா? இதைக் குறித்த என் சிந்தனைகள் கீழ்வருமாறு


நான் ஒரு நாவலில் ஒரு பாத்திரத்தைப் படைக்கும்போது எனக்குள் இருந்து நினைவுகள், உணர்வுகள், நுண்தகவல்கள் புறப்பட்டு வருகின்றன. என் கற்பனை இவற்றை இணைத்து பூரணமான வடிவை அளிக்கிறது. என் தன்னிலை இச்செயலைச் செலுத்துகிறது. இத்தன்னிலை ஒரு எழுத்தாளராக என் தன்னிலை. இத்தன்னிலையும் அன்றாட உலகில் செயல்படும் தன்னிலையும் வேறுவேறானவை. எழுத்தாளத் தன்னிலையில் ஒருவித தூய்மை உள்ளது. பரிசுத்தமான, களங்கமற்ற நெருப்பைப் போன்ற தன்மை உள்ளது. இதில் நாம் இருக்கையில் எந்த மனச்சாய்வும், கருத்தியலும் நம்மைப் பாதிப்பதில்லை. இதை ஒரு விளையாட்டு மனநிலை என்று கூறலாம்

இங்கு நான் விளையாட்டு என்று சொல்வது மொழி விளையாட்டோ கற்பனை விளையாட்டோ தீவிரமற்ற, பொறுப்பற்ற மனநிலையோ அல்ல. விளையாட்டை play எனும் ஆங்கிலச் சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பாக இலக்கிய விமர்சனக் கலைச்சொல்விளையாட்டுஇருக்கிறது. ஆங்கிலத்தில் இச்சொல்லுக்கு பொருத்தமற்று நடுங்கிக் கொண்டே, அசைந்தபடியே இருப்பது எனப் பொருள் தெரிதாவின் கோட்பாட்டில் உள்ளது. அதாவது ஒரு சொல் அதன் அர்த்தத்தில் சரிவரப் பொருந்தாமல் ஒரு ஆணி தனது மரையில் முறுகாமல் சுற்றிக் கொண்டே இருப்பதைப் போல உள்ளது என இது பொருள்படுகிறது. நாவலிலும் இத்தகைய விளையாட்டு மனநிலை உள்ளது. நான் கதைசொல்லியாகவோ கதையைச் சொல்லும் ஒரு பாத்திரமாகவோ மாறி அவரது கோணத்தில் இருந்து தன் வாழ்க்கையை, நினைவுகளை, அனுபவங்களைப் பார்த்து அதில் இருந்து புறப்பட்டு வரும் சொற்களை அப்படியே எழுதுவது. இங்கு நான் எழுதவில்லை, இன்னொரு பாத்திரமே எழுதுகிறார். (சொல்லப்போனால் இப்படியான புனைவில் நான் என் பெயரை எழுத்தாளராகப் போட்டுக் கொள்வது ஒருவித அநீதிதான்.) 


இதைச் செய்துவிட்டு நான் எழுதியதைக் குறித்து மனதுக்குள் அசைபோடுகிறேன். அப்போது எனக்கு சில வரிகளை நீக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. இப்படி யோசித்து தீர்மானம் எடுக்கிற நபர் யார்? அவரே உத்தியைப் பயில்கிறவர். ஆனால் நான் அதைத் திருத்துவதற்காக மீண்டும் அதில் அமரும்போது என்னுடைய படைப்பு மனம் மேலெழுந்து வருகிறது. அது சில முடிவுகளை எடுக்கிறது. ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தை மறுத்து புதிதாக ஒன்றை உருவாக்குகிறது. இங்கு உத்தி அறிவினாலா படைப்பு மனத்தாலா செயல்படுத்தப்படுகிறது? எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை


எழுதும் கலை குறித்தப் புத்தகங்கள், உரைகள், பயிலரங்குகளும் கூட நேரடியாகப் படைப்பில் குறுக்கிட முடிவதில்லை. அவை பேசும் பல்வேறு அறிவுரைகள், சாத்தியங்கள் அறிவினால் மட்டுமே தீர்மானித்து நடைமுறைப்படுத்த முடியக் கூடியவை அல்ல. சொல்லப்போனால் நாம் எழுதும்போது அறிவு மனமென்றோ படைப்பு மனமென்றோ தனியாகப் பிரிக்க முடியாத ஒரு தன்னிலை / அகக்குரல் தோன்றுகிறது. அக்குரல் எங்கிருந்து தோன்றுகிறது? அது எது


தெரியவில்லை.



 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...