Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

பா. கண்மணியின் “வீனஸ்”



பா. கண்மணியின் மொழி அழகானது. அவர் தான் வர்ணிக்கும் வீனஸ் அழகு நிலையத்தின் முடிதிருத்த நிபுணர்களின் லாவகத்துடன் தன் காட்சிகளை வர்ணிக்கிறார், இழையிழையாக சொற்களை எடுத்து நறுக்குகிறார், வடிவமைக்கிறார், வண்ணம் பூசுகிறார், ரொம்ப கற்பனாவாதமான ரசனையான சொற்றொடர்களுடன் நம்மைச் சொக்க வைக்கிறார். நுட்பமான புறவிவரணைகளாலும் நம் மனதை ஆட்கொள்கிறார். இந்நாவலின் கதைகூறல் முழுக்க புறவயமாக இருப்பதாலும், இதிலுள்ள பாத்திரங்கள் பெரும்பாலும் நேர்கோட்டில், முரணின்றி செயல்படுகிறவர்களாக இருப்பதாலும் நம்மால் இதை வேகமாக ரசித்துப் படித்துவிடக் கூடும். அது மட்டுமல்ல, கண்மணியின் மொழி எண்பதுகளில் பிரபலமாக விளங்கிய வணிக நாவலாசிரியர்களின் மொழியை நினைவுபடுத்துகிறது; சில இடங்களில் பாலகுமாரனைப் படிப்பதைப் போல இருக்கிறது; ஆனாலும் இன்னாரின் மொழியைத்தான் அவர் போலச்செய்கிறார் எனச் சொல்ல முடியவில்லை. அதேநேரம் ஏதோ ஒரு நிழல் நாம் படிக்கும்தோறும் பின்னாலே வருகிறது. ஆண்களிடம் இருந்து தனித்து நின்று சாதிக்க விரும்புகிற, அது சாத்தியப்படாதபோது சோர்வடையாமல் போராடுகிற இப்பெண் பாத்திரங்களும் ஏற்கனவே நாம் இத்தகைய வணிக நாவல்களில் சந்தித்தவர்களே. எனக்கு சிவசங்கரியின் பாத்திரங்கள் நினைவு வந்தார்கள். ஆனால் இவர்கள் முற்றிலும் வேறொரு வர்க்க நிலையில் சூழலில் இருப்பவர்கள். அதேநேரத்தில் இவர்கள் பல்வேறு தந்திரங்களையும் குழப்பங்களையும் கொண்ட முதிர்ச்சிக்கும் குழந்தைமைக்கும் நடுவில் நிற்கிற இன்றைய இளம்பெண்கள் அல்லர். மத்திய வயதினர். இன்றைய மனநிலைக்கும் பழைய மனநிலைக்கும் நடுவில் இருப்பவர்கள். கனவு காண்கிறவர்கள், உத்வேகத்துடன் ஒரு லட்சியத்தை நோக்கி ஓடுகிறவர்கள். தடுமாறும்போதும் ஒரு விசை அவர்களைச் செலுத்துகிறது. எந்தக் காரணம் கொண்டும் குடும்பத்துக்குள் நிம்மதியை நாடாதவர்கள். சிவசங்கரியின் நிழல் இருந்தாலும் அதன் மீது புதிய உடலொன்று பொருந்திக் கொள்கிறது. 


வீனஸின்கதைக்களம் எளிமையானது - “வீனஸ்அழகுநிலையத்தை நடத்தும் ரஞ்சனி, அவரது நிலையத்திற்கு வாடிக்கையாளராக வரும் நிஷா எனும் மாடல், சந்தியா எனும் மத்திய வயது, மணமான மேற்தட்டுப் பெண், திலோத்தமா எனும் டயட்டீஷியன், ப்ருத்வி எனும் உடற்பயிற்சியாளரின் தனிக்கதைகள் சற்றே பெரிய அத்தியாயங்களாக அவர்களுடைய பெயரையே தலைப்பாக வைத்து வருகின்றன. இவர்கள்வீனஸுடன்நேரடியாகவே தொடர்பு கொண்டவர்கள் என்பதாலே நாவலுக்கு ஒரு வடிவம் கிடைக்கிறது; ஆனால் இக்கதைகள் தனித்தனி சிக்கல்களாலத் தோன்றி வளர்ந்து கதையின் மையச்சிக்கலுடன் வந்து பொருந்துவதில்லை.  இந்த தனி அத்தியாயங்களிலும் கூட அரிதாகத்தான் ஒரு நெருக்கடியான சூழல் தோன்றி வருகிறது. கடைசி அத்தியாயத்தில் ரஞ்சனிக்கு முக்கியமான உதவியொன்றைப் பண்ணின வயதான உளவியல் டாக்டர் அவளிடம் தன் காதலைத் தெரிவித்து அவளுடன் உடலுறவு கொள்ள சூழலை வியர்த்தமாக முயல்கிற இடத்தைச் சொல்லலாம். ஆனால் அங்கும் ரஞ்சனி சட்டென நெருக்கடியில் இருந்து விலகிக் கொள்கிறார். மற்ற அத்தியாயங்களில் சந்தியாவும் ப்ருத்வியும் வரும் இடங்களில் மீண்டும் இத்தகைய சூழல்கள் வருகையிலும் கதைசொல்லி அதற்கான இடத்தை உருவாக அனுமதிப்பதில்லை. நெருப்பு பற்றிக் கொண்டது ஊதி அணைத்து விடுகிறார். இது இந்நாவலின் முக்கியமான ஒரு பலவீனம்.


பாத்திரங்களை ஒரு கண்மூடித்தனமான முடிவெடுத்து சிக்கலை மேலும் மேலும் சிக்கலாக்க விடும்போதே நாம் கதையின் கருப்பொருளைக் கண்டடைகிறோம். ஒரு விசாரணையை ஆரம்பிக்கிறோம். அத்தகையை விசாரணை இந்நாவலில் அழகைக் குறித்தும், வாழ்வின் எடையின்மையைக் குறித்தும் நிகழ்த்தியிருக்க இயலும். பா. கண்மணி ஏனோ அதைத் தவிர்த்து விடுகிறார். 


இந்நாவலின் வேறு இரு பிரச்சினைகள் இதில் பாத்திரங்களின் அகவுலகம் பெரிதாகக் காட்டப்படுவதில்லை என்பது. சில இடங்களில் அவர் நமக்கு இந்த அகவுலகைக் காட்சிகள் வழியாகச் சித்தரிக்கிறார் - திலோத்தமாவுக்கும் அவளது அப்பாவுக்குமான உறவில் கசப்பு தோன்றி அது கனிவாக மாறும் பத்திகள், சந்தியாவின் கணவரின் வெளிநாட்டு வாடிக்கையாளர்களான தம்பதியரில் கணவர் சந்தியாவைக் காமுற்று நெருங்கும்போது அவள் அதை உள்ளூர ரசித்து இணங்க முன்வருவதும், பின்வாங்குவதுமான இடங்களைச் சொல்லலாம். நாவலின் ஓட்டத்தில் திடீரெனத் தோன்றும் இரு பத்திகளில் அகவுலகம் பற்றின விவரணையும் வருகிறது. ஆனால் அதை நோக்கி கண்மணி இன்னும் தீவிரமாகப் போயிருந்தால் நவீன அழகு உற்பத்தி குறித்து ஒரு விவாதத்தைத் திறந்திருக்க முடியும். 


திருவிழாவில் குழந்தையைத் தொலைப்பதைப் போல கதையின் முடிவையும் எட்டாமல் அவர் பாதியிலே முடித்துவிடுகிறார். அதற்கும் நான் மேலே குறிப்பிட்டதைப் போல அவர் நெருக்கடியான இடங்களை நோக்கி கதையை நகர்த்தி உச்சத்தை நோக்கிக் கொண்டு போகாதது காரணமாக இருக்கலாம். 

இந்த சில குறைகளையும் மீறி இதன் தகவல் செறிவு, தளுக்கான மொழி நம்மை சுண்டி இழுக்கிறது. ஒரு இனிமையான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. படித்துப் பாருங்கள்.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...