Skip to main content

சர்வாதிகாரத்தின் குரல் அக்கறையாகவே தென்படும்

 


//வைரமுத்துவுக்கு கிடைத்த இந்த விருது தமிழுக்கு அளிக்கும் சிறுமை இன்னும் நம்மை முப்பதாண்டுகள் பின்னடைவுக்கு உள்ளாக்கும். ஒவ்வொரு மேடைகளிலும் நாம் இளம்கேலியுடனும் அதன் விளைவான பரிந்துநோக்கும் மேட்டிமைப்பார்வையுடனும் அணுகப்படுவோம்.
இச்சூழலில்தான் தரமான தமிழ்ப்படைப்பாளிகளை முன்வைக்கும் வாழும் தமிழ் இலக்கிய விழா போன்ற எங்கள் முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதிகாரபீடங்கள் நம்மை தொடர்ச்சியாக சிறுமைசெய்துகொண்டே இருக்கின்றன. அடிவிழுந்தோறும் நாம் நிமிர்ந்தாகவேண்டும்.நம் முன்னோடிகளை, நம்மை முன்வைக்கவேண்டும்.// - ஜெயமோகன்"

என்னப் பிரச்சினை என்றால் ஜெயமோகன் அளிக்கும் விருதோ அவரது பரிந்துரையின் பெயரில் அளிக்கப்படும் விருதுகளோ எழுத்தாளர்களை நாவற்றவர்களாக மாற்றுகின்றன, ஒருவித கண்காணிப்புப் பிரதேசமாக, போலீஸ் ஸ்டேட்டாக தமிழ் இலக்கியத்தை மாற்றுகிறது. அவரது பாசிசப் போக்கு இங்கு சுதந்திரமான உரையாடலுக்கு பெருத்த அடியாக இருக்கிறது. அவரது கூட்டங்களில் கைகட்டி அமர்ந்து பழகுவோர் பிறகு எங்கும் மனம் திறந்து பேசவோ எழுதவோ முடியாதவர்கள் ஆகிறார்கள். அவர்கள் எதிர்ப்புணர்வை இழந்தால் ஒழிய அவர் 'அளிக்கும்' பரிசுகளை, விருதுகளைப் பெற இயலாது. ஜெயமோகன் ஒவ்வொரு படைப்பாளிக்கு விருது கொடுக்கும்போது பூனையின் நகங்களைப் பிடுங்கிவிட்டு அதைப் பதுமையாக்குவதைப் போலத்தான் அவர்களைத் தன்வயப்படுத்தி மேடையில் முன்வைக்கிறார். ரமேஷ் பிரேதனுக்கு உதவுகிறேன், கௌரவிக்கிறேன் எனும் பெயரில் அவரை இவர் அவமதித்ததை மறக்க முடியாது.
அதைப் பார்ப்பவர்களும் அதன்பிறகு வாயை மூடிக் கொள்வது, ஜெயமோகனைப் பிரதியெடுப்பது, ராணுவ ஒழுங்குடன் பின்தொடர்வதுதான் தம்மை முன்னேற்றும் என உபமனத்தில் நம்பத் தொடங்குகிறார்கள். ஏனென்றால் மற்ற விருதுகள், இலக்கிய இயக்கங்களைப் போல் அல்லாது அவர் வழங்கும் விருதுகளும் நடத்தும் இயக்கமும் அவரை மையமிட்டு அவரைப் புகழ்ந்தே வழங்கப்படுகின்றன, நடத்தப்படுகிறது. அவரது எல்லா கேடுகளும் ஹிட்லர்தனங்களும் அவற்றிலும் கலந்து விடுகிறது.

ஜெயமோகனின் பெரிய பிரச்சினை அவருக்கு சமத்துவத்தில் நம்பிக்கை இல்லை, அடுத்தவர்கள் இடத்தில் தன்னை வைத்துப் புரிந்துகொள்ளும் திறனும் இல்லை என்பது. இயல்பிலேயே ஹிட்லருக்கு இருந்த மிகை தன்மதிப்பு, வெறுப்பின் அடிப்படையில் சதா சிந்திப்பது, இருமையாக உலகைப் பாவிப்பது ஆகிய குணங்கள் இவரிடமும் உண்டு. இந்த வைரமுத்து ஞானபீடக் கண்டனத்தையும் பாருங்கள், முழுக்க முழுக்க அவர்கள் vs நாம் எனும் முரணெதிர்வையே கட்டமைக்கிறார். அதோ அங்கே ஓடுகிறவன் துரோகி, நம் மதத்தை வெறுப்பவன் , அவனை நோக்கிக் கல்லெறியுங்கள், நாமெல்லாம் உத்தமர்கள், அவனைப் பிடித்து அடித்துக் கொல்லுங்கள் எனும் இந்த முரணெதிர்வு தர்க்கம் ஆர்.எஸ்.எஸ்ஸின் எல்லா முழக்கங்களிலும் உண்டு. அதை ஜெயமோகன் அதோ ஓடுகிறவன் நம் இலக்கிய மேன்மைக்கு விரோதி, அவனைக் கல்லெறியுங்கள், அவனிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள என்னிடம் இணையுங்கள், செயல்படுங்கள் என மாற்றுகிறார். இதைத்தான் ஹிட்லரும் பயன்படுத்தினார். இது சுயபரிசீலனையை, சுயவிசாரணையை, கேள்வியை மறுக்கும் போக்கு. இது ஜனநாயக விரோதமான ஒரு உத்தி.

ஆக, ஜெயமோகன் இங்கு முன்வைக்கும் சீர்திருத்த நடவடிக்கை எனக்கு மோடியின் பொருளாதார, கலாச்சார சீர்திருத்தங்களைத்தாம் நினைவுபடுத்துகின்றன. எந்த உரையாடலும், ஜனநாயக நடைமுறைகளும் இல்லாத மேல்-கீழ் படிநிலையை வலியுறுத்துகிற எதேச்சதிகார முயற்சிகள். அதனாலே, வைரமுத்துவும் அவரது ஆதரவாளர்களும் செய்வதை விட ஜெயமோகன் செய்வது இன்னும் பல மடங்கு ஆபத்தானது என நினைக்கிறேன். தமிழ்நாட்டில் பண்பாட்டுத்தளத்தில் ஜனநாயக விழுமியங்களை ஒழித்து ஒற்றை மைய, எதேச்சதிகாரப் போக்கை நிறுவுவதே ஜெயமோகனின் நோக்கம், அவருக்கான இடுபணி. பாஜக தேசிய அளவில் செய்வதை அவர் இங்கு பண்பாட்டுத் தளத்தில் செய்ய முயல்கிறார்.

"குற்றமும் தண்டனையும்" நாவலில் ரஸ்கோல்நிக்கோவ் நாட்டில் உள்ள அத்தனை அநீதிகள், ஏற்றத்தாழ்வுகள், வறுமையின் கொடுமைகளைப் பட்டியலிட்டுவிட்டு இதையெல்லாம் சரிசெய்ய ஒரு கொலை செய்யப் போகிறேன் என்பான். எனக்கு ஜெயமோகனின் கொந்தளிப்பான வைரமுத்து ஞானபீடக் கண்டனத்தைப் பார்க்கையில் அதுதான் நினைவுக்கு வருகிறது. சர்வாதிகாரத்தின் குரல் ஆரம்பத்தில் அக்கறையாகவே தென்படும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...