Skip to main content

சர்வாதிகாரத்தின் குரல் அக்கறையாகவே தென்படும்

 


//வைரமுத்துவுக்கு கிடைத்த இந்த விருது தமிழுக்கு அளிக்கும் சிறுமை இன்னும் நம்மை முப்பதாண்டுகள் பின்னடைவுக்கு உள்ளாக்கும். ஒவ்வொரு மேடைகளிலும் நாம் இளம்கேலியுடனும் அதன் விளைவான பரிந்துநோக்கும் மேட்டிமைப்பார்வையுடனும் அணுகப்படுவோம்.
இச்சூழலில்தான் தரமான தமிழ்ப்படைப்பாளிகளை முன்வைக்கும் வாழும் தமிழ் இலக்கிய விழா போன்ற எங்கள் முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதிகாரபீடங்கள் நம்மை தொடர்ச்சியாக சிறுமைசெய்துகொண்டே இருக்கின்றன. அடிவிழுந்தோறும் நாம் நிமிர்ந்தாகவேண்டும்.நம் முன்னோடிகளை, நம்மை முன்வைக்கவேண்டும்.// - ஜெயமோகன்"

என்னப் பிரச்சினை என்றால் ஜெயமோகன் அளிக்கும் விருதோ அவரது பரிந்துரையின் பெயரில் அளிக்கப்படும் விருதுகளோ எழுத்தாளர்களை நாவற்றவர்களாக மாற்றுகின்றன, ஒருவித கண்காணிப்புப் பிரதேசமாக, போலீஸ் ஸ்டேட்டாக தமிழ் இலக்கியத்தை மாற்றுகிறது. அவரது பாசிசப் போக்கு இங்கு சுதந்திரமான உரையாடலுக்கு பெருத்த அடியாக இருக்கிறது. அவரது கூட்டங்களில் கைகட்டி அமர்ந்து பழகுவோர் பிறகு எங்கும் மனம் திறந்து பேசவோ எழுதவோ முடியாதவர்கள் ஆகிறார்கள். அவர்கள் எதிர்ப்புணர்வை இழந்தால் ஒழிய அவர் 'அளிக்கும்' பரிசுகளை, விருதுகளைப் பெற இயலாது. ஜெயமோகன் ஒவ்வொரு படைப்பாளிக்கு விருது கொடுக்கும்போது பூனையின் நகங்களைப் பிடுங்கிவிட்டு அதைப் பதுமையாக்குவதைப் போலத்தான் அவர்களைத் தன்வயப்படுத்தி மேடையில் முன்வைக்கிறார். ரமேஷ் பிரேதனுக்கு உதவுகிறேன், கௌரவிக்கிறேன் எனும் பெயரில் அவரை இவர் அவமதித்ததை மறக்க முடியாது.
அதைப் பார்ப்பவர்களும் அதன்பிறகு வாயை மூடிக் கொள்வது, ஜெயமோகனைப் பிரதியெடுப்பது, ராணுவ ஒழுங்குடன் பின்தொடர்வதுதான் தம்மை முன்னேற்றும் என உபமனத்தில் நம்பத் தொடங்குகிறார்கள். ஏனென்றால் மற்ற விருதுகள், இலக்கிய இயக்கங்களைப் போல் அல்லாது அவர் வழங்கும் விருதுகளும் நடத்தும் இயக்கமும் அவரை மையமிட்டு அவரைப் புகழ்ந்தே வழங்கப்படுகின்றன, நடத்தப்படுகிறது. அவரது எல்லா கேடுகளும் ஹிட்லர்தனங்களும் அவற்றிலும் கலந்து விடுகிறது.

ஜெயமோகனின் பெரிய பிரச்சினை அவருக்கு சமத்துவத்தில் நம்பிக்கை இல்லை, அடுத்தவர்கள் இடத்தில் தன்னை வைத்துப் புரிந்துகொள்ளும் திறனும் இல்லை என்பது. இயல்பிலேயே ஹிட்லருக்கு இருந்த மிகை தன்மதிப்பு, வெறுப்பின் அடிப்படையில் சதா சிந்திப்பது, இருமையாக உலகைப் பாவிப்பது ஆகிய குணங்கள் இவரிடமும் உண்டு. இந்த வைரமுத்து ஞானபீடக் கண்டனத்தையும் பாருங்கள், முழுக்க முழுக்க அவர்கள் vs நாம் எனும் முரணெதிர்வையே கட்டமைக்கிறார். அதோ அங்கே ஓடுகிறவன் துரோகி, நம் மதத்தை வெறுப்பவன் , அவனை நோக்கிக் கல்லெறியுங்கள், நாமெல்லாம் உத்தமர்கள், அவனைப் பிடித்து அடித்துக் கொல்லுங்கள் எனும் இந்த முரணெதிர்வு தர்க்கம் ஆர்.எஸ்.எஸ்ஸின் எல்லா முழக்கங்களிலும் உண்டு. அதை ஜெயமோகன் அதோ ஓடுகிறவன் நம் இலக்கிய மேன்மைக்கு விரோதி, அவனைக் கல்லெறியுங்கள், அவனிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள என்னிடம் இணையுங்கள், செயல்படுங்கள் என மாற்றுகிறார். இதைத்தான் ஹிட்லரும் பயன்படுத்தினார். இது சுயபரிசீலனையை, சுயவிசாரணையை, கேள்வியை மறுக்கும் போக்கு. இது ஜனநாயக விரோதமான ஒரு உத்தி.

ஆக, ஜெயமோகன் இங்கு முன்வைக்கும் சீர்திருத்த நடவடிக்கை எனக்கு மோடியின் பொருளாதார, கலாச்சார சீர்திருத்தங்களைத்தாம் நினைவுபடுத்துகின்றன. எந்த உரையாடலும், ஜனநாயக நடைமுறைகளும் இல்லாத மேல்-கீழ் படிநிலையை வலியுறுத்துகிற எதேச்சதிகார முயற்சிகள். அதனாலே, வைரமுத்துவும் அவரது ஆதரவாளர்களும் செய்வதை விட ஜெயமோகன் செய்வது இன்னும் பல மடங்கு ஆபத்தானது என நினைக்கிறேன். தமிழ்நாட்டில் பண்பாட்டுத்தளத்தில் ஜனநாயக விழுமியங்களை ஒழித்து ஒற்றை மைய, எதேச்சதிகாரப் போக்கை நிறுவுவதே ஜெயமோகனின் நோக்கம், அவருக்கான இடுபணி. பாஜக தேசிய அளவில் செய்வதை அவர் இங்கு பண்பாட்டுத் தளத்தில் செய்ய முயல்கிறார்.

"குற்றமும் தண்டனையும்" நாவலில் ரஸ்கோல்நிக்கோவ் நாட்டில் உள்ள அத்தனை அநீதிகள், ஏற்றத்தாழ்வுகள், வறுமையின் கொடுமைகளைப் பட்டியலிட்டுவிட்டு இதையெல்லாம் சரிசெய்ய ஒரு கொலை செய்யப் போகிறேன் என்பான். எனக்கு ஜெயமோகனின் கொந்தளிப்பான வைரமுத்து ஞானபீடக் கண்டனத்தைப் பார்க்கையில் அதுதான் நினைவுக்கு வருகிறது. சர்வாதிகாரத்தின் குரல் ஆரம்பத்தில் அக்கறையாகவே தென்படும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...