Skip to main content

விழிப்பின் ஒத்திசைவு


 

நேற்றைக்கு முந்தின தினத்துக்கு முந்தின தினம் ஒரு பத்தியை எழுதினேன். நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் நாயகன் தன் காதலியின் தகப்பனாரைப் பார்க்கப் போகிறான். இருவருக்கும் இடையில் மோதல். அவன் திரும்ப தன் வீட்டுக்கு வந்த பின்னர் அவளைக் குறித்து யோசிக்கிறான். நேற்றைக்கு முந்தின தினமும் நேற்றும் இதற்கு அடுத்தப் பகுதியை, அடுத்தடுத்தக் காட்சிகளைத்தாம் எழுத உத்தேசித்தேன். ஆனால் எழுத உட்கார்ந்ததும் முந்தின தினம் எழுதியதைத் திருத்தத் தோன்றியது. நான் எப்போதும் இதைச் செய்வதில்லை. விட்ட இடத்தில் இருந்து ஒரு பாம்பு சாலையைக் கடப்பதைப் போல எழுதிவிடுவேன். வேறு சில தினங்களிலோ எழுதியதையே மீளமீள திருத்தி எழுதிக் கொண்டிருப்பேன். இதற்கு ஒரு காரணம் என் உபமனத்தில் ஏனோ அப்பகுதி நிறைவற்ற ஒரு உணர்வைக் கொண்டிருக்கிறது என்பதே என நினைக்கிறேன். அதாவது மொழியிலோ உணர்விலோ தொனியிலோ கருத்திலோ ஏதோ ஒன்று சரியாகப் பொருந்தி வரவில்லை எனும் உணர்வு. இந்நாவல் கதைசொல்லியின் மனப்போக்கும், அகவுலகமும் சந்திக்கும் நெருக்கடியைக் குறித்தது என்பதால் அவரது தரப்பே முக்கியம். அவன் பார்வையை மட்டுமே நான் முன்வைக்கிறேன். அதேநேரம் நாயகியும் அவளது அப்பாவும் முழுமை பொருந்திய பாத்திரங்களாகவும் இதற்குள் வரவேண்டும். இச்சவாலையும் சமாளித்தாக வேண்டும்.


நேற்று எழுதும்போது இந்த இரு பாத்திரங்களின் நிலைப்பாட்டை ஓரளவுக்கு என்னால் சரியாகக் கொண்டு வர முடிந்தது எனத் தோன்றியது. அதுவும் நேற்று என்னால் தொடர்ந்து எழுத இயலவில்லை. வேலைப்பளு அதிகம். கிடைத்த இடைவெளிகளில் எல்லாம் சில வார்த்தைகளை உள்ளிட்டேன். வாக்கியங்களை மாற்றி எழுதினேன்.
மாலை வீட்டுக்குப் போனால் கடும் களைப்பு. தூக்கம் கண்ணைச் சொருகிக் கொண்டு வருகிறது. தூங்கிவிட்டால் இரவுணவு தாமதமாகும். அதன்பிறகு உறங்குவதும் தாமதமாகும் என்பதால் முடிந்தளவுக்கு நேற்று மாலை உறங்குவதைத் தவிர்த்தேன். ஆனாலும் எப்படியோ ஒரு மணிநேரம் என்னை மறந்து உறங்கிவிட்டு எழுந்து இரவுணவை முடித்தேன். ஏனோ தூங்கத் தோன்றவில்லை. ஒருவித நிம்மதியின்மை.

சிறிது நேரம் யுடியூப் பார்த்தேன். அதன்பிறகு நாவலுக்குத் தன்னிச்சையாகச் சென்று ஏற்கனவே மீளெழுதிய பத்தியைத் திருத்தினேன். சில வார்த்தைகளை மாற்றத் தொடங்கி அப்படியே வர்ணனைக்குள் சென்றுவிட்டேன். நான் உருவாக்கி வைத்திருந்த சந்தர்ப்பத்தில் ஒருவித கடுமையான அழுத்தம் நாயகனுக்கு ஏற்படுகிறது. அவன் அப்போது என்ன செய்வான்? இதற்கு எனக்குச் சில புதிய பதில்கள் கிடைத்தன. ஏதோ என் மொழியே சட்டென இறகுகள் விடுபட்டுப் பறந்து எழுகிற உணர்வு. எழுத எழுத என்னால் நாயகனின் மனத்தில் என்ன தோன்றுகிறது எனத் தெளிவாகக் காண முடிந்தது. அவனது முரண்பாடுகளை வெளிக்கொணர முடிந்தது. அதையெல்லாம் சொல்வதற்கான செறிவான மொழியும் தானே தோன்றியது. சில பகுதிகளில் நாவலுக்கு மென்மையான எடையற்ற மொழியும் சில பகுதிகளில் கனத்த அடர்த்தியான மொழியும் அவசியம். அது சரியாக இடத்தில் அவ்வாறு தோன்றுவதும் முக்கியம். இதையெல்லாம் நான் எழுதவில்லை, என் உபமனமே சிந்தித்துச் செய்கிறது என்பதும் நேற்று எனக்குப் புலப்பட்டது. அதனால்தான் அது என்னை அடுத்த கட்டத்துக்குச் செல்லவிடாமல் தடுக்கிறது என்பதும் புரிந்தது.
இது எப்படி நடக்கிறது என்று தெரியவில்லை. அதேநேரம் என் உபமனம் என் நாவலின் கதையையும், அதற்குத் தேவையான கற்பனையையும், தர்க்கத்தையும், மொழியையும் பரிசீலிக்க நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறது, அதற்கு என்னிடம் பேசுவதற்கான சரியான நேரம், காலமும் அமைய வேண்டிக் காத்திருக்கிறது. எழுதுவது என்பது அதற்கான அவகாசத்தைத் தொடர்ந்து அளித்து அதை ஒரு சிறுதெய்வத்தைப் போல ப்ரீதி பண்ணுவதுதான். தெய்வத்தின் கண்கள் ஏதோ ஒரு கணத்தில் விழிக்கின்றன. அப்போது நம் கண்களும் ஒரே சமயத்தில் விழிக்கின்றன.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...