Skip to main content

ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் சூழலில் அந்நியமாகும் மக்களும் கட்சிகளும்

 தொகுதி மறுசீரமைப்பு குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே தி ஹிந்து போன்ற நாளிதழ்களில் விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன. அப்போதே இதன் ஆபத்துக்களைப் பற்றி எழுதினேன். கடந்த ஆண்டில் இருந்தே தமிழ்நாட்டில் இருந்து எதிர்ப்புக் குரல்கள் கேட்கத் தொடங்கின. முதல்வர் ஸ்டாலின் ஒரு கட்டுரை எழுதினார். அண்மையில் அவர் இந்த சீரமைப்பு மசோதாவை எரித்து முழக்கமிடும் காணொளியைக் கண்டேன். இந்தப் பார்வையுடன் முழுக்க உடன்படுகிறேன். இந்தியா ஒரு வட-இந்திய-சார்பு தேசியமாக அலுவல்ரிதியாக, வெளிப்படையாக மாறப் போகிறது. அதேநேரம் இன்று எதிர்ப்பு ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்த்துதலாக மாறுவதால் நேரடியாக மக்களிடமிருந்து இதற்கு எதிர்ப்பு வருமா எனச் சந்தேகம் உள்ளது. தமிழ்நாட்டிலும் இது ஒரு தேர்தல் பிரச்சார வியூகம் மட்டுமே எனத் தோன்றுகிறது. இது எதிர்ப்பின் உண்மைத்தன்மையை கொன்றுவிடும்.



இப்படியான பிரச்சினைகளை மக்கள் தம்மிடம் இருந்தே ஒரு இயக்கமாகத் திரண்டு எதிர்க்கும்போதே (ரயில் மறிப்பு, விமான நிலைய முற்றுகை, மத்திய அரசு அலுவலக முற்றுகை) அதற்கு நல்ல பலனிருக்கும். இன்னும் சொல்லப்போனால் வேளண் சட்டங்களுக்கு எதிரான பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் இதற்கு ஒரு சிறந்த முன்னுதாரணம். அது வென்றதற்கு முக்கிய காரணம் அதை கட்சிகள் நடத்தவில்லை என்பது. கட்சிகள் எதிர்ப்பை ஒரு நிகழ்த்துதலாக மாற்றுவதால் அதில் தொடர்ச்சியோ தியாகமோ மூர்க்கமோ இருப்பதில்லை. அதை மக்களும் ஒன்றிய அரசும் கடந்து போய்விடுவர். மக்களை ஒருங்கிணைத்து ஒரு தேசியத் தலைவர் நடத்துகிற நடைபயணங்கள் இதைவிட அதிக தாக்கம்த்தை ஏற்படுத்தும்.

அரசியலுக்கு ஊடகமே இன்று பெரிய பாதகமாகிறது - ஏனென்றால் என்னதான் சமூக ஊடகங்களில் மக்கள் பங்கேற்க முடிகிறது என்றாலும் அங்கு அவர்களுக்கு முழுமையான முகமை இல்லை. எதை வைரல் ஆக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் உள்கட்டமைப்பு வசதியும் திட்டமிடலும் கட்சிகளிடம் வந்து சில ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வொரு கட்சியும் பல லட்சங்களில் இருந்து கோடிகள் வரை டுரோல்களை, ஐடி விங் ஆட்களை வேலையில் வைத்துள்ளது. கட்சி நிர்வாகத்திடமே இன்று டிவி ஊடகங்களும் பத்திரிகைகளும் உள்ளன. இது மக்களுக்கும் ஊடகங்களுக்குமான அரசியல் இடைவெளியை தோற்றுவித்து விட்டது. விளைவாக மக்கள் (சமூகவலைதள, மரபான) ஊடகங்களைப் பொழுதுபோக்காகப் பார்க்கிறார்கள். அரசியல் செய்திகளுக்கு இன்றும் தேர்தலைத் தீர்மானிக்கும் ஆற்றல் உண்டு என்றாலும் மக்களை அரசியல்படுத்தும் ஆற்றலை அவை இழந்துவிட்டன. ஒன்றில் இருந்து நாம் அந்நியமாகும்போது அதை கொஞ்சம் விலகி நின்று விளையாட்டாக அணுகுகிறோம். மரையை இழந்த திருகாணி சுழன்றுகொண்டே இருப்பதைப் போல.

தெருவிலும் திடல்களிலும் நடக்கும் அரசியல் போராட்டங்களும் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வு மேலாண்மையாகின்றன. அவையும் மக்களின் அந்நியமாதலை அதிகரிக்கின்றன. கட்சிகளும் தம்மால் மக்களிடம் போய்ச் சேர முடியும் எனும் நம்பிக்கையை இழக்கின்றன. முதல்வர்களும் அமைச்சர்களும் தொடர்ந்து கட்சி அனுதாபிகளைச் சந்திப்பது, அவர்களை நேர்முகமெடுத்து பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துவது இதன் விளைவுதான். இப்படி இன்றைய சூழல் மக்களுக்கும் அரசுக்கும் வெவ்வேறு அளவுகளில் பாதகமே.

எல்லா வெளிகளையும் அரசு கட்டுப்படுத்தும்போது மக்கள் தமக்கும் மக்களாட்சிக்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளதாகவே, தாம் அதிகாரம் இழந்துவிட்டதாகவே என்றே உணர்வர். குறிப்பாக போராட்டத்திற்கென தனி வெளிகளை அரசு வரையறுக்கும்போது அது நாடக நிகழ்த்தல் அரங்க வெளியாகி விடுகிறது. கட்சிகள் முதற்படியாக கட்சித்தன்மையை, நிகழ்வு மேலாண்மைப் போக்குகளைக் கைவிடுவதும், அடுத்ததாக, தற்செயல்களை ஊக்குவிப்பதும் தற்செயலாக நிபந்தனையற்றுப் பொதுவெளிகளில் திரள்வதற்கு மக்களை அனுமதிப்பதுமே இனி வெற்றிகரமான போராட்டங்களுக்கு வழிவகுக்கும். இது தமக்கெதிராகவே திரும்பக் கூடும் என ஆளும் மாநிலக் கட்சிகள் அஞ்சாமல் பொதுவெளிகளை ஒன்றியத்துக்கு எதிராகப் பயன்படுத்தவும் தம்மையே சிலநேரங்களில் விமர்சிக்கவும் அனுமதிக்க வேண்டும். அதாவது எதிர்ப்பரசியலுக்கு மீண்டும் மக்களைப் பழக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் 'ஊடுருவினாலும்' கவலைப்படக் கூடாது. அதிமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டு கிளர்ச்சியின்போது நடந்ததைப் போல கால நிபந்தனைக்கு உட்பட்டு மக்கள் திரளவும் கலையவும் செய்யக்கூடாது. மக்கள் அதிகாரம் கட்டறுத்து விடப்பட்டால் அதை எதிர்க்கட்சியால் திசைதிருப்ப இயலாது. அதற்கு முதலில் ஆளும் அரசுகள் மக்களை அஞ்சாமல் இருக்க வேண்டும். பொது அமைதிக்கு ஊறு, சட்டம் ஒழுங்கு ஆகிய சொல்லாடல்களைக் கைவிட வேண்டும். காவலர்கள் மக்கள் கண்காணிப்பு, தலைவர்கள் பாதுகாப்பு ஆகிய (சோ கால்ட் சட்டம் ஒழுங்கு காவல்) பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு போதை மருந்து விற்பனையைத் தடுக்கும் பணிகளிலும் மக்கள் நன்மைக்கு நேரடியாகப் பயன்படும் பணிகளிலும் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட வேண்டும். அல்லாவிடில் அந்நியமாதலின் விளைவாக மக்களாட்சி கருத்தியலே காணாமல் போய்விடும்.

தொகுதி மறுசீரமைப்பு எதிராக தென்னிந்தியா முழுக்க அத்தகைய 'தற்செயல் போராட்டங்களே' அவசியம். சில நேரங்களில் வேலையில்லாத கோபம், வாய்ப்புகள் இல்லாத கோபம், வறுமை, பொதுவான பல பிரச்சினைகள் மீதான கசப்பும் கூட ஒற்றைப் பிரச்சினைப் புள்ளி மீது திரளும். சில நேரங்களில் பெரும் கார்ப்பரேட்டுகளின் ஆதரவும் இதற்குக் கிடைக்கும். ஆனால் இயக்கத்தின் மையத்தில் உழைக்கும் மக்களும் இளைஞர்களுமே இருப்பார்கள். (நேப்பாள ஜென் ஸி போராட்டங்களின் போது நடந்ததைப் போல.) அப்போதே வலுவான மக்களாட்சி தோன்றும். போராட்டங்களுக்கும் அரசுக்கும் இடையே கட்சிகள் நிற்கக் கூடாது. இத்தகைய போராட்டங்களுக்கு நேரடியான தேர்தல் பலன்கள் ஒரு க்கு உடனடியாக இருக்காவிடினும் மக்களை மீண்டும் ஜனநாயகப்படுத்த அவை உதவும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...