Skip to main content

அழகும் விசுவாசமும்


 

மிலன் குந்தேராவின் "89 சொற்கள்" (89 Words) எனும் கட்டுரை நூலின் முன்னுரையைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் அவர் தன் தன் நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டபோது அனுபவித்த அவஸ்தைகளைக் குறிப்பிட்டிருந்தார். மொழிபெயர்ப்பாளர்கள் தம் இஷ்டத்துக்கு வாக்கிய அமைப்பை மாற்றுகிறார்கள். பெரிய வாக்கியங்களை உடைத்து சிறுசிறு வாக்கியங்களாக்குகிறார்கள். இங்கிலாந்தில் வெளியான அவரது நாவலின் மொழிபெயர்ப்பில் (Unbearable Lightness of Being) பாலியல் சொற்களை முடிந்தளவுக்கு மாற்றி இருக்கிறார்கள். Being என்றால் இருத்தல். இதன் தத்துவார்த்த, கல்விப்புல தொனி பிடிக்காமல் ஒருவர் Unbearable Lightness of Living என்று மாற்றுகிறார். இதனால் எப்படி பொருள் தலைகீழாக மாறுகிறது என குந்தேரே விளக்குகிறார்.

சிலர் அழகுப்படுத்தும் நோக்கில் புதிய சொல்லாடல்களைக் கொண்டு வருகிறார்கள் - ஒருவர் "அவள் வாழ்வில் 17 ஆண்டுகள் கடந்தன" என்பதை "அவள் வாழ்வில் 17 வசந்தங்கள் கடந்தன" என மொழியாக்குகிறார். இது அழகாகத்தான் உள்ளது. ஆனால் தொனி மாறுகிறது. வசந்தம் எனும் உருவகத்தைக் கொண்டு வர எழுத்தாளருக்கும் தெரியும்தான். அவர் அதைப் பயன்படுத்தாதது ஒரு எளிய நேரடி மொழியைப் பயன்படுத்தவும், அதன்வழியாகத் தன் வாழ்க்கைப் பார்வையை உணர்த்தவும்தான். மொழிபெயர்ப்பாளர் அதீத உரிமையெடுக்கும்போது அவர் எழுத்தாளரின் நோக்கங்களை உருமாற்றுகிறார். பிரஞ்சு போன்ற மொழிகளில் வெளியான தன் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஒருவர் "எனக்கு செக் மொழி தெரியாது, அதனால் என் இதயத்தில் இருந்து மொழிபெயர்த்தேன்" என்று குந்தேராவிடம் சொல்லியிருக்கிறார். மொழியே தெரியாமல் எப்படி உணர்வுரீதியாக மட்டும் மொழிபெயர்ப்பார் என அவர் குழம்பிப் போய் பிறகே இரண்டாம் மொழி வழியான மொழியாக்கமென அறிந்துகொள்கிறார். இப்படியான பல விபத்துக்களைக் குறிப்பிடும் அவர் தான் வாழ்க்கையில் மிக அதிகமாகச் சிரமப்பட்டது மொழிபெயர்ப்புகளைப் படித்துதான் என்கிறார். கடைசியில் அவர் உதிர்க்கும் ஒரு அபிப்ராயம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அழகான பெண்கள் விசுவாசமாக இருக்க மாட்டார்கள், விசுவாசமான பெண்கள் அழகாக இருக்க மாட்டார்கள் என செக் மொழியில் ஒரு சொலவடை உள்ளது போலும். அதைச் சொல்லிவிட்டு அவர் மூலமொழிக்கு விசுவாசமான மொழிபெயர்ப்பே அழகானது என்று சொல்கிறார்.
என்னுடைய மொழிபெயர்ப்பு நம்பிக்கையும் இதன்பாற்பட்டதே. நான் தொழில்முறை மொழிபெயர்ப்பாளர் அல்லன். தமிழில் இருந்து ஆங்கிலத்திலும் ஆங்கிலத்தில் இருந்து தமிழிலும் விருப்பத்தின்பால் மொழிபெயர்த்து வருபவன். எனக்கு இலக்கு மொழியில் ஒரு பனுவலை அழகாக்குவதற்காக வாக்கியங்களையோ சொற்களையோ நடையையோ மாற்றுவதில் உடன்பாடில்லை. அதற்கு நாமே சொந்தமாக அக்கதையையோ கவிதையையோ நம் மொழியில் எழுதிவிடலாமே. மொழிபெயர்ப்பைப் படித்தால் அது மொழிபெயர்ப்பு என்று நிச்சயமாகத் தோன்ற வேண்டும். சரளத்தன்மை மூலமொழியில் இருந்து மொழிபெயர்ப்பு மொழிக்கு வர வேண்டும். மொழிபெயர்ப்பாளரே அதை உருவாக்கக் கூடாது. அதனாலே எனக்கு மூலமொழி மீதான விசுவாசம் அதிகம். உணர்வுரீதியாக மூலமொழியில் சொல்லப்படும் விசயத்துடன் ஒன்றும்போது நாம் நம் மனநிலைக்கு ஏற்ப சொற்களையும் தீவிரத்தையும் சிறிது மாற்றலாம். ஆனால் இது வாக்கியத்தில் தெரியக் கூடாது, தொனியிலும் தாளலயத்திலும் மட்டுமே தென்பட வேண்டும். கடைசியாக, மொழிபெயர்ப்பில் ஒரு அரசியலும் உண்டு - நம்மால் உடன்பட முடியாத படைப்பை மொழிபெயர்க்கக் கூடாது. ஏனென்றால் அதிலுள்ள மொழியே அதன் அரசியல். நம் அரசியலுக்கு ஏற்ப படைப்பாளியின் அரசியலை மாற்றுவது (நம்மால் ஏற்க முடியாத சொற்களை, கருத்துக்களை மாற்றுவது, தவிர்ப்பது) ஒரு மோசடி. உ.தா., உங்களுக்கு ஜார்ஜ் பத்தாயின் பாலியல் பிடிக்காது, ஆனால் அவரது கதை பிடிக்குமென்று கூற முடியாது. அவரை பிடிக்குமென்றால் மொத்தமாகத்தான் பிடிக்கும். மொத்தமாகத்தான் மொழிபெயர்க்கவும் முடியும். இதில் ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு அவமானப்பட ஒன்றுமே இல்லை.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...