Skip to main content

வெளிநாட்டுக்குப் போவது


 

வெளிநாட்டுக்குப் போவது முன்பு சாகசமாக, ஆபத்தான பயணமாகக் கருதப்பட்டது. ஒரு படத்தில் வெளிநாட்டுக்குப் போகும் செந்திலை கவுண்டமணி ஒரு குரங்காக மாற்றி விடுவார். அது மேற்சொன்ன நிலையின் குறியீடுதான்.

இப்போதோ வெளிநாட்டுக்குப் போவதும் உள்நாட்டு நகரங்களில் சுற்றுவதும் கிட்டத்தட்ட ஒன்றுதான். இலக்கிய அமைப்புகளின் கதையும் நிலையும் நம் அமைப்புகளின் நிலையும் கிட்டத்தட்ட ஒன்றுதான். அவர்களும் நம்மைப் போல அன்றாடப் பணிகளின் நடுவே இலக்கியம் வளர்க்க முயல்கிறவர்கள். அவர்கள் அயல்நாட்டில் வாழ்வதாலும் அவர்கள் டாலர்களில் சம்பாதிப்பதாலும் அவர்கள் மீது நமக்கு ஒரு மயக்கம். நம்முடைய செயல்பாடுகளைக் கண்டு அவர்களுக்கு ஒரு ஈர்ப்பு. இதில் பெரிய சிக்கல் நம்மவர்கள் அயல் வாசகர்களை அவர்களால் பயண வாய்ப்பு, நிதியுதவி கிடைக்கும் எனும் உத்தேசத்தில் சற்று அதிக மதிப்பளிக்கிறோம் என்பது. ஆனால் உண்மையில் அவர்களும் சாதாரண மனிதர்கள்தாம். நாமும் எதாவது வேலை கிடைத்து அந்த நாட்டுக்குப் போனால் அவர்களைப் போலாகி விடுவோம். இன்றைய சூழலில் இது ஒரு தனித்தகுதி அல்ல. இந்த வாசகர்களுடன் நமக்கு ஏதோ ஒரு நட்புறவு ஏற்படும்போது விமானக் கட்டணத்தை ஏற்பாடு பண்ணி நம்மை அங்கு பேச அழைப்பார்கள். இது அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. அங்கு போய் உரையாடுகையில் ஒரு சர்வதேசத் தன்மை கிடைப்பதாக நமக்கு ஒரு பெருமித உணர்வு வரும். அது உண்மையல்ல. அவர்கள் மார்த்தாண்டம் வாசகர் வட்டத்தினரைப் போலத்தான் இருப்பார்கள். அதில் எந்த சாகசமும் இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. ஒரு கிணற்றில் இருந்து தாவித்தாவி தவளை பக்கத்துக்குக் கிணற்றுக்குப் போவதைப் போலத்தான்.
உண்மையான சாகசமென்பது நம் சென்னைப் பூங்கா அல்லது மெரினா கடற்கரையில் நான்கு பேர்களாக சுற்றி அமர்ந்து இலக்கிய கூட்டம் நடத்துவதுதான். உடனே இரண்டு போலீஸ்காரர்கள் வந்து நம்மை எச்சரித்து கலைத்து விடுவார்கள். எனக்கே இந்த அனுபவம் பல முறை நடந்ததுண்டு. "யார் சார் நீங்க? எதுக்காக ஒண்ணு சேர்ந்திருக்கீங்க? எந்த அமைப்பு நீங்க?" என்று சீரியஸாகக் கேட்பார்கள். நாம் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். இப்போதெல்லாம் இரவு ஒன்பது மணிக்கு மேல் பொதுவிடங்களில் யாரும் திரளக்கூடாது என்று சென்னை மாநில காவல் ஆணையர் சொல்வதால் எல்லாரும் அங்கு கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு விரைந்து நடக்கின்றனர். கடற்கரைக்கு காரில் கட்சிக் கொடி வைத்துக்கொண்டு வந்தால் கூட காவலர்கள் "திஸ் இஸ் எமெர்ஜென்ஸி டைம்" என்று துரத்திவிடுகிறார்கள். கடந்த முறை புத்தகக் கண்காட்சியின்போது பார்த்தேன் - ஒரு போலீஸ்காரர் இரண்டு வாடிக்கையாளர்களிடம் "என்னது கைல, புத்தகமா? இதையெல்லாம் சுமந்திட்டு இங்க நிக்கக் கூடாது. போங்க போங்க" என்று மிரட்டினார். பெங்களூரில் நேர் எதிர் - நீங்கள் நள்ளிரவு ரெண்டு மணிக்கும் நின்று டீ குடிக்கலாம். இலக்கியம் பேசலாம், படிக்கலாம். போலீஸ்காரர்கள் "நாம தூங்கப் போவோம்" என ஒன்பது மணிக்கே சரக்கடித்துவிட்டு கிளம்பிவிடுவார்கள். ஆகையால் இங்கு இலக்கியக் கூட்டம் நடத்துவது ஒரு சாகசம் அல்ல. யாருக்காவது கெத்திருந்தால் மெரீனா கடற்கரையை முயன்று பார்க்கலாம் - பிரான்ஸ், அமெரிக்கா போவதைவிட அங்கு சென்னைக்கு இரவு வேளையில் செல்வதும் அமர்ந்து இலக்கியம் பேசுவதும்தான் உண்மையான சாதனை. சென்னையில் இரவில் நடப்பவைதாம் உண்மையான 'அயல்நாட்டுக் கூட்டங்கள்'. அவற்றில் ஒரு மாவோயிஸ்ட் கூட்டத்தின் ஆபத்தும் ரகசிய தோரணையும் இருக்கும். சென்னை மட்டுமே எமெர்ஜென்ஸி போலீஸ் நகரம்.
இந்த சாகசங்களுக்கு அப்பால் எங்கு தமிழ்க் கூட்டம் நடந்தாலும் வித்தியாசம் இருக்காது. ஆங்கிலத்தில் செயல்படுவது மட்டுமே நம்மை இந்த எல்லைகளைக் கடந்து பரவலான வாசகர்களைச் சென்றடைய வைக்கும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...