Skip to main content

வெளிநாட்டுக்குப் போவது


 

வெளிநாட்டுக்குப் போவது முன்பு சாகசமாக, ஆபத்தான பயணமாகக் கருதப்பட்டது. ஒரு படத்தில் வெளிநாட்டுக்குப் போகும் செந்திலை கவுண்டமணி ஒரு குரங்காக மாற்றி விடுவார். அது மேற்சொன்ன நிலையின் குறியீடுதான்.

இப்போதோ வெளிநாட்டுக்குப் போவதும் உள்நாட்டு நகரங்களில் சுற்றுவதும் கிட்டத்தட்ட ஒன்றுதான். இலக்கிய அமைப்புகளின் கதையும் நிலையும் நம் அமைப்புகளின் நிலையும் கிட்டத்தட்ட ஒன்றுதான். அவர்களும் நம்மைப் போல அன்றாடப் பணிகளின் நடுவே இலக்கியம் வளர்க்க முயல்கிறவர்கள். அவர்கள் அயல்நாட்டில் வாழ்வதாலும் அவர்கள் டாலர்களில் சம்பாதிப்பதாலும் அவர்கள் மீது நமக்கு ஒரு மயக்கம். நம்முடைய செயல்பாடுகளைக் கண்டு அவர்களுக்கு ஒரு ஈர்ப்பு. இதில் பெரிய சிக்கல் நம்மவர்கள் அயல் வாசகர்களை அவர்களால் பயண வாய்ப்பு, நிதியுதவி கிடைக்கும் எனும் உத்தேசத்தில் சற்று அதிக மதிப்பளிக்கிறோம் என்பது. ஆனால் உண்மையில் அவர்களும் சாதாரண மனிதர்கள்தாம். நாமும் எதாவது வேலை கிடைத்து அந்த நாட்டுக்குப் போனால் அவர்களைப் போலாகி விடுவோம். இன்றைய சூழலில் இது ஒரு தனித்தகுதி அல்ல. இந்த வாசகர்களுடன் நமக்கு ஏதோ ஒரு நட்புறவு ஏற்படும்போது விமானக் கட்டணத்தை ஏற்பாடு பண்ணி நம்மை அங்கு பேச அழைப்பார்கள். இது அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. அங்கு போய் உரையாடுகையில் ஒரு சர்வதேசத் தன்மை கிடைப்பதாக நமக்கு ஒரு பெருமித உணர்வு வரும். அது உண்மையல்ல. அவர்கள் மார்த்தாண்டம் வாசகர் வட்டத்தினரைப் போலத்தான் இருப்பார்கள். அதில் எந்த சாகசமும் இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. ஒரு கிணற்றில் இருந்து தாவித்தாவி தவளை பக்கத்துக்குக் கிணற்றுக்குப் போவதைப் போலத்தான்.
உண்மையான சாகசமென்பது நம் சென்னைப் பூங்கா அல்லது மெரினா கடற்கரையில் நான்கு பேர்களாக சுற்றி அமர்ந்து இலக்கிய கூட்டம் நடத்துவதுதான். உடனே இரண்டு போலீஸ்காரர்கள் வந்து நம்மை எச்சரித்து கலைத்து விடுவார்கள். எனக்கே இந்த அனுபவம் பல முறை நடந்ததுண்டு. "யார் சார் நீங்க? எதுக்காக ஒண்ணு சேர்ந்திருக்கீங்க? எந்த அமைப்பு நீங்க?" என்று சீரியஸாகக் கேட்பார்கள். நாம் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். இப்போதெல்லாம் இரவு ஒன்பது மணிக்கு மேல் பொதுவிடங்களில் யாரும் திரளக்கூடாது என்று சென்னை மாநில காவல் ஆணையர் சொல்வதால் எல்லாரும் அங்கு கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு விரைந்து நடக்கின்றனர். கடற்கரைக்கு காரில் கட்சிக் கொடி வைத்துக்கொண்டு வந்தால் கூட காவலர்கள் "திஸ் இஸ் எமெர்ஜென்ஸி டைம்" என்று துரத்திவிடுகிறார்கள். கடந்த முறை புத்தகக் கண்காட்சியின்போது பார்த்தேன் - ஒரு போலீஸ்காரர் இரண்டு வாடிக்கையாளர்களிடம் "என்னது கைல, புத்தகமா? இதையெல்லாம் சுமந்திட்டு இங்க நிக்கக் கூடாது. போங்க போங்க" என்று மிரட்டினார். பெங்களூரில் நேர் எதிர் - நீங்கள் நள்ளிரவு ரெண்டு மணிக்கும் நின்று டீ குடிக்கலாம். இலக்கியம் பேசலாம், படிக்கலாம். போலீஸ்காரர்கள் "நாம தூங்கப் போவோம்" என ஒன்பது மணிக்கே சரக்கடித்துவிட்டு கிளம்பிவிடுவார்கள். ஆகையால் இங்கு இலக்கியக் கூட்டம் நடத்துவது ஒரு சாகசம் அல்ல. யாருக்காவது கெத்திருந்தால் மெரீனா கடற்கரையை முயன்று பார்க்கலாம் - பிரான்ஸ், அமெரிக்கா போவதைவிட அங்கு சென்னைக்கு இரவு வேளையில் செல்வதும் அமர்ந்து இலக்கியம் பேசுவதும்தான் உண்மையான சாதனை. சென்னையில் இரவில் நடப்பவைதாம் உண்மையான 'அயல்நாட்டுக் கூட்டங்கள்'. அவற்றில் ஒரு மாவோயிஸ்ட் கூட்டத்தின் ஆபத்தும் ரகசிய தோரணையும் இருக்கும். சென்னை மட்டுமே எமெர்ஜென்ஸி போலீஸ் நகரம்.
இந்த சாகசங்களுக்கு அப்பால் எங்கு தமிழ்க் கூட்டம் நடந்தாலும் வித்தியாசம் இருக்காது. ஆங்கிலத்தில் செயல்படுவது மட்டுமே நம்மை இந்த எல்லைகளைக் கடந்து பரவலான வாசகர்களைச் சென்றடைய வைக்கும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...