Skip to main content

காலமும் பொழுதுபோக்கும் - ஒரு படைப்பாளியின் நெருக்கடி

 "If today it is rare to see literary adventures as daring as those of Joyce, Woolf, Rilke or Borges, it is not just down to the writers. For the culture in which we live does not favour, but rather discourages, the indefatigable efforts that produce works that require of the readers an intellectual concentration almost as great as that of their writers. Today’s readers require easy books that entertain them and this demand creates a pressure that becomes a powerful incentive to writers.”


Excerpt From
Notes on the Death of Culture,
Mario Vargas Llosa
- லோசா "பண்பாட்டின் மரணம்" குறித்த தன் கட்டுரையில் சொல்லக் கூடிய இவ்விசயம் தமிழ்ச் சூழலில் மிக முக்கியமானது - நான் இந்த அழுத்தத்தை கடந்த சில ஆண்டுகளாக மிக வெளிப்படையாகவே உணர்ந்து வருகிறேன்: எதையும் சுவாரஸ்யமாக, எளிமையாக, பரபரப்பாகவே எழுத வேண்டும் எனும் பதற்றம் எழுத்தாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாகப் புதிதாக எழுத வருவோரின் லட்சியம் வணிக எழுத்தாளர்களாகவோ நடுநிலை எழுத்தாளர்களாகவோ இருக்கிறார்கள். அதாவது அவர்கள் படிப்பது தீவிர இலக்கியமாக இருக்கும், ஆனால் எழுத உத்தேசிப்பது அதுவாக இருக்காது. அதிலும் யாரெல்லாம் தம் எழுத்தின் நுகர்வு மதிப்பை உணராதவராக இருக்கிறார்களோ அவர்கள் எல்லாம் சுலபத்தில் மொழிக்குள் சுதந்திரமாகச் செயல்படுகிறார்கள். யாரெல்லாம் சமூக கவனத்திற்கு (அதாவது வாசகர்களின் மதிப்புக்கு) உள்ளாகிறார்களோ அவர்கள் எல்லாமே தம் கைகள் கட்டப்படுவதாக உணர்கிறார்கள். என்னதான் எழுத்துக்கு தமிழில் பண மதிப்பு இல்லையென்றாலும் இந்த நூதனமான பிரச்சினை மட்டுமே இருக்கிறது.
இந்த முரண்பாட்டைப் புரிந்துகொள்ள நாம் லோசா சொல்வதைப் போல இன்று பண்பாடு எப்படி புரிந்துகொள்ளப் படுகிறது என்று சிந்திக்க வேண்டும். பண்பாட்டை நாம் இன்று எளிய பொழுதுபோக்காக எல்லா தளங்களிலும் மாற்றிவிட்டோம். இந்தியச் சூழலை எடுத்துக் கொண்டால் ஒரு விளம்பரப் படம், ரீல்ஸ், குறும்படம், திரைப்படம், அரசியல்வாதியின் புரொமோஷன் வீடியோ (பொதுமக்களுடன் டீ குடிப்பது, ஜல்மூரி வாங்கித் தின்பது), மனிதர்கள் இடையிலான சம்பாஷணை, மேடையில் ஆற்றப்படும் உரைகள், பாராளுமன்ற விவாதங்கள், வகுப்பறைகள் எல்லாமே இன்று பொழுதுபோக்கையே இலக்காக்குகின்றன. பொழுதுபோக்காமல் தீவிரமானால் அது உடனடியாக அகற்றப்படுகிறது. நாம் ஏன் பொழுதுபோக்குக்காக இவ்வளவு தவிக்கிறோம் என்று மேற்கத்திய சூழலை வைத்து லோசா வினவுகிறார்.
எனக்கு இதற்கு ஒரு முக்கிய காரணம் நாம் இன்று காலத்தை ரொம்பவே பயன்பாட்டு ரீதியாக (instrumental) காணத் தொடங்கியதுதான் என எனக்குத் தோன்றுகிறது. அதாவது காலத்தை நாம் முன்பு நம் வாழ்வின் காரணிகளில் ஒன்றாகக் கண்டோம். காலம் இருப்பதாலே நம்மால் நகர முடிகிறது, வாழ முடிகிறது, மரிக்க முடிகிறது. ஆகையாலே நாம் ஒருவர் காலமாகி விட்டதாக மரணத்தை உருவகப்படுத்தினோம். இங்கிருந்து நாம் இன்று காலமே ஒரு நுகர்வுப் பொருள்தான் எனும் இடத்துக்கு வந்துவிட்டோம். ஒவ்வொரு கணத்தையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என நாம் நினைக்கத் தொடங்கியபோதே இது துவங்கிவிட்டது. காலத்தின் இடத்தில்தான் நாம் ஒவ்வொன்றையும் வைத்துப் பார்க்கிறோம் - ஒரு நட்பை, ஒரு காதலை, உணவை, வேலையை, அரசியலை, ஆன்மீகத்தை எப்படியெல்லாம் பயன்படுத்துவது என யோசிக்கிறோம். இயல்பாகவே நமக்கு காலத்திற்கு ஈடாகப் பணத்தை வைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. ஏனென்றால் ரூபாய் நோட்டு மட்டுமே காலத்துக்கு (உழைப்பு) ஈடாக இன்பத்தைத் தருவதாகக் கோருகிறது. ரூபாய் நோட்டு வாழும் அடிப்படைத் தகுதியைத் தருவதாகக் கோரிய போது அது காலத்தை ஈடுசெய்ய வில்லை. ஏனென்றால் வாழும் நிலைக்கான நிபந்தனைகள் காலத்தைப் போன்ற ஒரு காரணி மட்டும்தான். காலத்தை ஈடற்ற இன்பமாக நாம் கருதும்போது அது காரணியாக அல்லாமல் நுகர்வுப் பொருளாகிறது. இப்போது நாம் வாழ்க்கையையே நுகர்வாகப் பார்க்கிறோம். ஒருவர் கருத்தரிக்கிறார், ஒருவருக்குக் குழந்தை பிறக்கிறது. அதுவும் ஒரு பொழுதுபோக்குதான். அதனால் வாழ்கைக் கடினமாகிறதா, இன்பமாகிறதா என்பது இன்று மணமான இளைஞர்களிடையே ஒரு விவாதமாகிறது. வாழ்க்கையின் தீவிரம் இப்படி எல்லா நிலைகளிலும் மறுக்கப்பட்டு மேலோட்டமான போக்கு ஓங்குகிறது.
இந்த மாற்றத்தின் விளைவாகவே நாம் இலக்கியம் படைப்பதிலும் ஒருவித கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறோம். ஒரு சமூகமாக, காலத்தை நாம் பார்க்கும் விதம் மாறாமல் இப்பிரச்சினைகள் சரியாகப் போவதில்லை. அதாவது காலத்தின் விசயத்தில் நாம் கொஞ்சம் பின்னுக்குப் போய் நவீனத்திற்கு முன்பு காலம் எப்படி இருந்தது, காலம் எப்படிப் பார்க்கப்பட்டது என்று வினவ வேண்டும். கண்டுபிடிக்க வேண்டும்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...