முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குருதி சொரியும் ஒரு கையின் சுவை





ஒரு நீண்ட சுயமைதுனத்தின் முடிவு
ஒரு நீண்ட வெந்நீர் மழையில்
படிகத்துளிகளிடையே
ஆயிரமாயிரம் சிதறல்களாய் நகர்ந்து
ஒரு அரையிருள் கடற்கரையை வந்தடைவதைப்
போன்று உள்ளது.

அங்கு
தனியாக அலைகள் மோதும் சொதசொத மணலில்
நாய்கள் ஒரு ஆடைகிழிந்த பிணத்தை
கிழித்து தின்னுகின்றன
சேலைமேல் அழுக்கான சட்டையை அணிந்து
மூட்டைக்குள் தாயத்துகள் மற்றும் சுருட்டி பழைய ரூபாய் நோட்டுகளை
கொண்ட
வீடு திரும்பும் சோதிடக்காரி
என் கையைப் பற்றி அவசர அவசரமாய்
ரேகைகளை இடமாற்றி
தகவல்களை பரப்புகிறாள்.
தன் முன்மயிரை ஒதுக்கி
அதிலொன்றை பறித்து
மனதை சிடுக்கிடுகிறாள்.
பின் தன் குச்சியால் நாய்களைத் துரத்தி
ஒரு ஈரமான தாயத்தை கழற்றி
அணிவித்து காசு வாங்கிக் கொள்கிறாள்.
நாய்கள் திரும்பப் போய்
அலைநுரைகளை நக்கிக் கொள்கின்றன.

நான் ஆளரவமற்ற அந்த கடற்கரையில்
அந்த அழகிய கையை எடுத்து
மெல்ல மெல்ல மென்று உறிஞ்சியபடி
வியக்கிறேன்
ஒரு நீண்ட சுயமைதுனத்துக்குப் பின்
மனித தேகம் இவ்வளவு
இனிக்குமா என.

பிறகு
இதமான வெந்நீர் மழை
மெல்ல மெல்ல குளிரேறி
பனிக்கட்டி நகரமொன்றில்
என்னை நிறுத்துகிறது.
திறந்த வாய்க்கும்
உறைந்த கைகளுக்கும்
இடையே
அழகிய கையின்
குருதி மட்டும்
உறையாது சொட்ட,
வானம் முழுக்க குத்தீட்டிகளாய் தொங்கும்
உறைமழைக்கும்
எனக்கும் இடையே
இமைக்காத வெண்பரப்பில்
பனிக்கட்டித் துளி ஒன்று
விழுந்து உருளாது நிற்கும்
திறந்த ஒரே கண்.

நாடி துடிக்கும்,
பச்சைநரம்புகள் நெளியும்
அந்த அழகிய கையை
அருகில் கொணர முடியாது
மனம் தவிக்கையில்
தலைக்கு மேல்
தொங்கும் நீர் அம்புகள்
உலோக உரசலாய் கிலுகிலுத்து
காது நிரப்பும்.
பற்கள் கூச
எலும்புகள் விரிசலிட
மழையின் கூர்விளிம்புகள் பரஸ்பரம் மோதி
சரசரவென அதிர்ந்து அடங்கும்
இரவெல்லாம்.

விடிகாலையில்
விரல்கள் கொத்தாய் நிற்கும் முழங்கை எலும்பை
புதைத்து விட்டு
இந்த புயலில்
திரும்புகையில்
கடற்கரையில் இருந்து வீடுவரை
குப்பைகளும் பாலிதீன்பைகளும் கிழிந்து சாம்பலான துணிகளும்
ப்ளாஸ்டிக் பாட்டில்களும் பழைய காகிதங்களும்
ஆளுயரத்துக்கு எழுகின்றன
பாதைகளின் இரு பக்கமும்.
காற்றும் நீரும் ஆகாரமும்
தூசாய் தொண்டையில் சிக்கி
கசப்பாய் வயிற்றில் நிரம்புகின்றன
அப்போது
நினைத்துக் கொள்கிறேன்
அத்தனை உணவுகளிலும் பானங்களிலும்
உமிழ்நீரளவு சுவை
எதிலும் இல்லையென.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...