முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நண்பர் எச்.பீர் முஹம்மது



நண்பர் எச்.பீர் முஹம்மதை முதலில் நான் 15 வயதில் தக்கலையில் நண்பர் முஸ்தபாவின் புத்தகக் கடையில் வைத்து சந்தித்தேன். அவரைப் பற்றின முதல் நினைவே கையில் ஒரு ஆயிரம் பக்க ஆங்கில கட்டுரை நூலோடு அவர் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பது தான். வெட்டி அரட்டையில் நேரம் வீணடிக்காமல் வாசிப்பில் தன்னை தொலைத்து விடுபவராக இருந்தார். தக்கலை கலை இலக்கிய பெருமன்றத்தில் பலருக்கும் அவர் மீது மிகுந்த வியப்பு இருந்தது. நிறைய படிப்பதானாலோ என்னவோ அன்று அவர் பேசும் போது புரிந்து கொள்ள சற்று குழப்பமாக இருக்கும் (ஆனால் இன்று அப்படி இல்லை). எங்கள் மன்றத்தில் அப்போது தமிழில் வெளிவருகிற கோட்பாட்டு நூல்களை, நவீன இலக்கியத்தை படிப்பவர்கள் பலர் இருந்தார்கள். ஆனால் கணிசமாய் ஆங்கிலம் வழி மேற்குலக அறிவியக்கங்களை அறிய முயல்பவராக பீர் மட்டுமே இருந்தார்.

 பீருக்கு அறிவு தான் முக்கியம். எங்கு கிடைத்தாலும் நாடி செல்வார். எப்போதும் போல் ஜெயமோகன் எங்கள் அமைப்புக்கு எதிர்முகாம் தான். ஜெயமோகனின் அரசியலுடன் முரண்பட்டாலும் பீர் ஜெயமோகனை சந்தித்து தத்துவம் பற்றி பேசுவார். புத்தகங்கள் வாங்கி வருவார். ஒருமுறை நண்பர் முஸ்தபாவுடன் அவர் பாலியல் ரகசியங்கள் பற்றி அறிவார்ந்த விவாதம் ஒன்று செய்து கொண்டிருப்பதை கவனித்தேன். எதையும் அனுபவ ரீதியாய் அல்லாமல் அறிவு மூலம் கண்டுபிடிக்கலாம் எனும் அபார தன்னம்பிக்கை அவருக்கு இருந்திருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் அவர் அண்ணன் வெளிநாட்டில் இருந்து அவர் படிப்புக்கு அனுப்பின பணத்தை பூராவும் ஆங்கில கோட்பாட்டு நூல்கள் வாங்க செலவழித்து விட்டார். ஊருக்கு வந்து மூட்டை மூட்டையாய் தம்பி வாங்கி வைத்திருந்த புத்தகங்களை பார்த்ததும் அவருக்கு மிகுந்த ஆத்திரம் ஏற்பட்டது. புத்தகங்களை காப்பாற்றுவதற்காய் அவர் மூட்டை கட்டி நண்பர் என்.டி. ராஜ்குமாரின் வீட்டை கொண்டு வைத்ததாய் அறிந்து கொண்டேன். (இது பற்றின குறிப்பு ஒன்று என் “ரசிகன்” நாவலில் வருகிறது) பிறகு அவருக்கு உடனடியாய் வேலையை அடைந்து தன்னை ஸ்திரப்படுத்தும் நெருக்கடி ஏற்பட்டது. நான் அப்போது ஒரு சின்ன நிறுவனத்தில் கணினி படித்து வந்தேன். பீர் என்னை அழைத்து அங்கே வேலை கிடைக்குமா என கேட்க சொல்வார். தினமும் போன் செய்வார். அவருக்கு என்னால் உதவ இயலவில்லை. எனக்கு அது குறித்து மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. பிறகு அவர் வெளிநாட்டிற்கு வேலை சென்றார். பொருளாதார ரீதியாய் நிலைப்பெற்றார். அதேவேளை தொடர்ந்து நிறைய எழுதவும் செய்தார். அவரது கட்டுரைகளை தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன். 15 வருடங்களுக்கு முன் ஜெயமோகனிடம் பேசும் போது அவர் ஒன்று சொன்னார் “பீரின் மொழி சற்று சிக்கலாய் உள்ளது. அதன் காரணம் அவர் தத்துவம் பற்றி எழுத முயல்பதே. தத்துவம் பற்றி எழுதுபவர்கள் அனைவருக்கும் ஆரம்பத்தில் நிறைய மொழிச்சிக்கல்கள் ஏற்படும். விரைவில் தெளிவான மொழியை பெற்று விடுவார்”. இன்று பீரின் மொழி வெகுவாய் மாறி விட்டது. ஊரில் கூச்ச சுபாவமான அறிவுஜீவியாய் இருந்தவர் இன்று சமூக வலைதளஙளில், மீடியாவில் எழுதுகிறவராய், டிவி விவாதங்களில் கலந்து கொள்கிறவராய் மாறி இருக்கிறார். தமிழகத்தில் அறிவுஜீவியாய் இருப்பது மரணக்கிணற்றில் பைக் ஓட்டுவது போன்ற காரியம். பீர் என்றுமே எனக்கு ஒரு ஊக்கமாய் இருந்திருக்கிறார். அவரது கட்டுரைத் தொகுப்பான ”நீண்ட சுவர்களின் வெளியே” வெளியாகும் இந்த வேளைகளை இந்நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்வது அந்த ஊக்கத்தை பலமடங்காக்கத் தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஜோக்கர்களை ஆதரிக்கத் தேவையில்லை

பொதுமக்கள் நினைப்பதையும் நம்புவதையும் எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் நினைக்கவோ நம்பவோ ஏற்கவோ அவசியமில்லை. கடந்த சில வாரங்களாகவே இத்தகைய ஒரு தரப்பு வாதத்தை நான் பார்க்கிறேன் - எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் மக்களின் உணர்வுகளில் இருந்து விலகி நிற்கிறார்கள், அது ஒரு தவறு என்று. நிச்சயமாக இல்லை. அப்படி அவர்கள் நிற்பதே சரி என நினைக்கிறேன். மக்களின் போக்குகளைப் புரிந்துகொள்வது வேறு அதை விமர்சிக்காமல் ஏற்பது வேறு. பின்னது வெகுஜன வணிகப் படைப்பாளிகள், ஊடகவியலாளர்களின் குணம், இலக்கு. அவர்கள் வெகுஜனத்தைப் பயன்படுத்தி சம்பாதிப்பவரக்ள். எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் வெகுமக்கள் போக்கிற்கு எதிராகவோ விலகியோ நின்று சிந்திப்பவர்கள். தேர்தலை கணிப்பதோ தேர்தலை வழிநடத்துவதோ அவர்கள் பணியல்ல. தோற்கும் கட்சியைக் கூட அவர்கள் ஆதரிக்கலாம். அரைநூற்றாண்டுக்கு மேலாக இடதுசாரிகள் ஆட்சியில் இல்லாதபோது கூட இடதுசாரி ஆதரவாளர்களாக இருந்த எழுத்தாளர்கள் இல்லையா? கடுமையான அராஜகவாதிகளாகவும் படைப்பாளிகள் இங்கு இருந்திருக்கிறார்கள். அதுவே சரி. பொதுமக்களிடம் அனுபவத்தின் திரட்சியான ஞானம் இருக்கும். ஆனால் பகுத்தறிவோ கருத்துக்களை அ...