தில்லி டேர் டெவில்ஸ் அணியின்
ரிஷப் பண்ட் எனக்கு இளம் யுவ்ராஜ் சிங்கை நினைவுபடுத்துகிறார். டிரைவ் மற்றும் கட்
ஷாட்களின் அந்த பவர், கால் பக்கம் அவர் அடிக்கும் flicky ஷாட்கள். கூடுதலாய் பண்டிடம்
அபாரமான கற்பனையும் உள்ளது. இன்றைய சன் ரைஸர்ஸுக்கு எதிரன ஆட்டத்தில் முஸ்தபீசுரின்
இரண்டு கால் பக்க புல்டாஸ்களை அவர் மிட் ஆனுக்கும் மிட் விக்கெட்டுக்கும் இடையில் மணிக்கட்டை
சொடுக்கி அபாரமான இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். முன்பு ஜெ.பி டூமினி தென்னாப்பிரிக்காவுக்காய்
டெஸ்ட் போட்டிகளில் முதலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராய் ஆடும் போது அடித்த ஷாட்கள் நினைவு
வருகின்றன. அடுத்த மூன்று வருடங்களில் ரிஷப் பண்ட் இந்திய அணியில் ஆட வேண்டும். இல்லாவிட்டால்
நஷ்டமே!
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

Comments