தில்லி டேர் டெவில்ஸ் அணியின்
ரிஷப் பண்ட் எனக்கு இளம் யுவ்ராஜ் சிங்கை நினைவுபடுத்துகிறார். டிரைவ் மற்றும் கட்
ஷாட்களின் அந்த பவர், கால் பக்கம் அவர் அடிக்கும் flicky ஷாட்கள். கூடுதலாய் பண்டிடம்
அபாரமான கற்பனையும் உள்ளது. இன்றைய சன் ரைஸர்ஸுக்கு எதிரன ஆட்டத்தில் முஸ்தபீசுரின்
இரண்டு கால் பக்க புல்டாஸ்களை அவர் மிட் ஆனுக்கும் மிட் விக்கெட்டுக்கும் இடையில் மணிக்கட்டை
சொடுக்கி அபாரமான இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். முன்பு ஜெ.பி டூமினி தென்னாப்பிரிக்காவுக்காய்
டெஸ்ட் போட்டிகளில் முதலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராய் ஆடும் போது அடித்த ஷாட்கள் நினைவு
வருகின்றன. அடுத்த மூன்று வருடங்களில் ரிஷப் பண்ட் இந்திய அணியில் ஆட வேண்டும். இல்லாவிட்டால்
நஷ்டமே!
நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கருத்துகள்