Skip to main content

ஸ்வாதி கொலையாளியின் கைது: மேலும் சில கேள்விகள்


ஸ்வாதியின் குற்றவாளி என போலிசால் நெல்லையில் கைது ராம்குமார் என்பவரை செய்திருப்பது உண்மையில் இவ்வழக்கை முடித்து வைக்காமல் மேலும் சிக்கலாக்குகிறது. பல கேள்விகள் எழுகின்றன.
குற்றம் இழைத்தவன் தொழில்முறை கொலையாளி என்பதற்கான பல சாத்தியங்கள் உள்ளன. ஆனால் முரணாக இந்த கைது கொலை ஒரு மனம் பிறழ்ந்தவனின் குற்றம் என நிரூபிக்க முயல்கிறது.
இது ஏன் ஒரு உணர்ச்சிவயப்பட்டு நிகழ்த்தப்பட்ட குற்றம் இல்லை?

1) குற்றவாளி தன் ஆயுதத்தை ரேகை படாமல் துடைத்து விட்டு கைவிட்டு போயிருக்கிறான். ஏனென்றால் ஆயுதத்துடன் பிடிபட்டால் அவன் தப்பிக்க முடியாது. அதுவே பிரதான ஆதாரம் ஆகும்.
2) தடயம் கிடைக்கக் கூடாது என அவள் போனை எடுத்து போயிருக்கிறான். ஒரு stalker அவளுடன் போனில் பேசியிருக்க முடியாது. பிறகு அவனுக்கு போன் எதற்கு?
3) கொல்லும் முறை, இடம், தப்பிக்கும் வழி, தடயத்தை அழிப்பது என இத்தனையும் யோசித்து செய்யும் ஒருவர் உணர்ச்சிவசப்பட்ட மனம் பிறழ்ந்த கொலையாளியாக இருக்க முடியாது. தில்லியில் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்து கொன்றவர்கள் அவளை துன்புறுத்த பயன்படுத்திய கம்பியை எடுத்து சென்று தம்முடன் வைத்திருந்தார்கள்.சென்னையில் சமீபத்தில் தன் மனைவி, குழந்தையை கொன்றவனும் பிணத்துடனே இருந்தான். அவன் தடயங்களை விட்டு சென்றான். பைக்கை கூட கடற்கரையில் பார்க் செய்து விட்டு அதை எடுக்க செல்லும் போது முட்டாள்தனமாய் மாட்டிக் கொண்டான். ஆனால் ஸ்வாதி விசயத்தில் இது போன்ற தவறுகள் நிகழவில்லை.
4) கொலை நடந்த பின் அவன் ஏன் தன் சொந்த வீட்டில் சென்று பதுங்க வேண்டும்? இவ்வளவு திட்டமிடத் தெரிந்தவனுக்கு வேறு ஊருக்கு சென்று தப்பிக்க தெரியாதா?
5) ஒரு பெண்ணின் கவனத்துக்காய் ஏங்கி பின் தொடரும் ஒருவன் அவளை ஏன் கொடூரமாய் வெட்டி சாய்க்க வேண்டும்? இதுவரை எந்த stalker ஆவது இப்படி கொன்றதாய் வரலாறு உள்ளதா?
உள்ளது. ஆனால் இந்த பின் தொடரும் கொலையாளிகள் பெரும்பாலும் கொல்லப்படும் பெண்களுக்கு நன்கு தெரிந்தவர்களாய் இருப்பார்கள். சில வழக்குகளில் பரிச்சயமில்லாதவர்களும் குற்றம் இழைத்ததுண்டு. ஆனால் எப்போதும் இந்த வகை குற்றங்களில் ஒரு சீரற்ற தன்மை இருக்கும். தொழில்முறை கொலையாளிகளுக்கு எப்படி ஒரே வெட்டில் சாய்ப்பது என தெரியும். ஆனால் உணர்ச்சியால் தூண்டப்பட்ட கொலையாளிகள் உயிர் போகாதோ எனும் கவலையிலும் பதற்றத்திலும் திரும்பத் திரும்ப வெட்டவும் குத்தவும் செய்வார்கள். தில்லியில் ஒரு பல்கலைக்கழக மாணவி சந்தோஷ் என்பவனால் ஹெல்மெட்டால் அடித்தே கொல்லப்பட்டாள். ஜப்பானிலும் அமெரிக்காவிலும் நடந்த குற்றங்களிலும் பெண்கள் துப்பாக்கியால் முகத்தில் சுடப்பட்டிருக்கிறார்கள், வயிற்றில் குத்தப்பட்டிருக்கிறார்கள். ஸ்வாதி கொலையில் சில நொடிகளில் அவள் கழுத்து வெட்டப்பட்டு சில நிமிடங்களில் உயிரிழந்தது, கொலையாளிக்கு அவள் இறந்து விடுவாள் என்பதில் இருந்த தன்னம்பிக்கை வழக்கமான ஸ்டால்க்கர் குற்றங்களில் இருந்து இதை தனித்து காட்டுகிறது. அதே போல் இக்கொலைக்கு பயன்படுத்திய அருவாள், கொலை நடந்த காலை நேரம் ஆகியவை நம் ஐயங்களை வலுவாக்குகின்றன.
6) கொலை செய்த உடன் அவன் தப்பி செல்லும் போது தன் போனில் பேசியதாக சாட்சிகள் கூறுகிறார்கள். அப்படி என்றால் அவனுக்கு துணை நின்றவர்களாகவே அவர்கள் இருக்க வேண்டும். ஸ்டால்க்கருக்கு எதற்கு துணை? ஒரு ஸ்டால்க்கர் ஏன் கொலை நடந்து முடிந்த பின் இன்னொருவரை அழைத்து தகவலை பகிர வேண்டும்?
7) ராம்குமாருடன் மேலும் பத்து பேர் அவரது மேன்ஷனில் தங்கி இருந்ததாய் கூறுகிறார்கள். அவர்களும் ஒருவாரமாய் மாயமாகி விட்டார்கள். அவர்கள் யார்? ராம்குமார் “காதல் கொண்டேன்” தனுஷ் போன்ற காதல் வெறி கொண்டு கொலை செய்தவர் என ஒரு சித்திரம் இப்போது மீடியாவில் உருவாகி வருகிறது. இது உண்மை எனில் அவருக்கு எப்படி துணையாக நண்பர்கள் செயல்பட முடியும்? ஒருவரின் அதர்க்கமான கொலை விருப்பத்தை எப்படி மேலும் பத்து நண்பர்கள் ஆதரிப்பார்கள்? 

7) இறுதியாக, சில மாதங்களுக்கு முன்பு ஸ்வாதியை அதே ரயில் நிலையத்தில் வைத்து கன்னத்தில் அறைந்த அந்த சிகப்பான இளைஞன் யார்? ஏன் ஸ்வாதி அவன் அடிகளை அமைதியாக தாங்கினாள்? அவன் ஸ்வாதியுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்த ஒரு ஆதிக்க மனம் கொண்ட ஆணாக இருக்கலாம். அவன் அவளை பொதுவெளியில் வைத்து தண்டிக்க உத்தேசித்து அப்படி அறைந்திருக்கலாம். அவனுக்கும் இப்போது நெல்லையில் கைதாகி உள்ள இந்த ராம்குமாருக்கும் என்ன தொடர்பு உள்ளது என்பதையும் விசாரிக்க வேண்டும். அந்த சிகப்பான ஆசாமிக்கு இதில் நேரடி தொடர்பு இல்லையென்றாலும் உண்மையான குற்றவாளிகளை அடையாளம் காட்ட அவர் உதவ முடியும். ஏனென்றால் இந்த ராம்குமார் இவ்வழக்கின் வால் நுனி மட்டுமே என என் உள்ளுணர்வு கூறுகிறது.

Comments

Unknown said…
ஆமாம். நானும் இந்தக் கோணத்தில் யோசித்திருக்கிறேன். இந்தப் பையனைப் பார்த்தால் இது மேலும் உறுதிப்படுகிறது. பணத்துக்காக திட்டமிட்டு கொலை செய்த கூலி. இதில் ஒருதலைக் காதல் என்று சொல்வதெல்லாம் நம்பும்படி இல்லை. அந்த கைப்பேசியில் ஏதோ முக்கியமான தகவல் யாரோ ஒருவருக்கு தேவைப்பட்டிருக்கிறது. மேலும் இது உணர்ச்சிவசப்பட்டு செய்த கொலையும் இல்லை. நன்கு ஆராய்ந்து, கால நேரம் பார்த்து, திட்டமிட்டு செய்த கொலை. இதில் ஏதோ பெரிய கை அடங்கியிருப்பதாகவே உள்ளுணர்வு தோன்றுகிறது. நமக்கே தோன்றும் போது போலீசுக்கு தோன்றாதா. கண்டிப்பாக அவர்களை சுதந்திரமாக 'வேலை" செய்யவிட்டாலே போதும். மொத்த நெட்வொர்க்கையும் பிடித்துவிடுவார்கள். நீதி வெல்லவேண்டும். குற்றம் புரிந்தவர்கள் "அனைவரும்" தண்டிக்கப்பட வேண்டும். இதுபோல் மேலும் நடக்காமல் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதே நமது பிரார்த்தனை. நன்றி
விஜயன்
Unknown said…
உங்கள் கற்பனை உண்மையெனில் ராம் குமாரே அந்த உண்மைகளை போலிசாரிடம் சொல்வார்.
vivek kayamozhi said…
மிகவும் சரியான கோணத்தில் புதிய சந்தேகங்களை எழுப்பி உள்ளீர்கள்.
பார்ப்போம்..இன்னும் என்னென்ன கதைகள் வருகின்றன என்று
Ram kumar is a just a weapon! The professionalism speaks
sivaje36 said…
நீங்க சொல்வது உண்மையா இருக்கலாம்
Unknown said…
Eyewitness தமிழரசன் கூறும் போது அன்று கன்னத்தில் அறைந்த வெளிர் நிற ஆள்தான் சுவாதி கொலை நடந்த இடத்தில் இருந்து வேகமாக சென்றார் என்று கூறி இருந்தார் எனவே அந்த வெளிர் நிற ஆசாமி யார்?
Unknown said…
something wrong...
Unknown said…
something wrong...

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

தமிழ்நாட்டின் வளர்ச்சியும் ஏற்றத்தாழ்வும்

  முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன் கடைசியாக வெளியிட்ட காணொளியைப் பார்த்தேன். அதில் அவர் தன் ஆட்சியின் சாதனைகளைக் குறிப்பிட்டு சில குறைகள் உள்ளதையும் தான் ஒப்புக்கொள்வதாகத் தெரிவிக்கிறார். கண்ணியமான நிதானமான பேச்சு. அவர் குறிப்பிடும் ஒரு தகவல் உண்மையானது - தமிழ்நாடு வேறு எந்த ஆட்சியிலும் காணாத பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது (11.9%). இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சி இது. வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைக் கொணர்வதிலும் புது நிறுவனங்களை அமைப்பதிலும் திமுக முன்னின்று செயல்பட்டுள்ளது. (விஜய் திமுக அரசு மாநிலத்தை கடனில் வீழ்த்தியுள்ளதாகச் சொல்லியிருப்பது ஒரு பொய்.) ஸ்டாலின் சொல்லும் இத்தகவல் இந்த ஆண்டின் துவக்கம் முதலே பல ஆங்கில நாளிதழ்களிலும் காணொளிகளிலும் பேசப்பட்டு வந்துள்ளது. ஒருவிதத்தில் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற விரும்புவதும் இதனால்தான் எனத் தோன்றுகிறது. அவர்கள் வந்தால் அவர்களுடைய தரப்பு முதலாளித்துவ வர்க்கம் உள்ளூர் முதலாளிகளைக் காலி பண்ணுவார்கள். ஊழலில் அவர்களுடைய உள்ளூர் தலைவர்களுக்கு பங்கு போகும். அவர்களால் இங்குள்ள வர்த்தகப் போக்குகளைக் கட்டுப்படுத்த இய...