Skip to main content

Posts

Showing posts from October, 2016

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

கபாலியின் மற்றொரு தொன்மம்

“கபாலி” குறித்த கட்டுரைகளில் சிறந்தது என டி.தருமராஜுடைய மூன்று பகுதி கட்டுரை தான். மூன்று விசயங்களை ரசித்தேன். 1)    ரஜினி எனும் தொன்மம் எப்படி “கபாலியில்” புது நிறம் பெறுகிறது. ஆண்டைகளில் தொன்மமாக இருந்தவர் எப்படி சரேலென தலித் தொன்மமாக மாற எத்தனித்தார், அதன் வியாபார சாத்தியங்கள் என்ன என்பது குறித்து டி. தருமராஜ் எழுதியிருக்கிறார். அவர் ”தொன்மம்” என்பதற்கு பதில் “திரைக்கதைக்கு வெளியே இருக்கும் திரைக்கதை” என கூறுகிறார். ரஜினியை பற்றி பேசும் போது இந்த தொன்ம ஆய்வு முக்கியமானது. அவரது வெற்றிக்கும் சரி எம்.ஜி.ஆரின் முந்தைய வெற்றிக்கும் சரி அவர்களை ஒட்டி உருவாக்கப்பட்ட தொன்மங்கள் தாம் உதவின. டி.தருமராஜ் தான் அருந்ததிய மக்கள் குடியிருப்பில் தான் கண்ட நாட்டுப்புற கூத்து ஒன்றை விவரிக்கிறார். அதில் தலித் ஒருவர் ஆக்ரோசமாய் தனக்கு மேல்சாதியாய் உள்ளவனை திரும்ப தாக்கும் இடத்தை தலித் மக்கள் எவ்வாறு திரும்ப திரும்ப நிகழ்த்துப்படி நிர்பந்தித்து பார்த்து ரசித்தார்கள் என சொல்கிறார். இந்த கூத்து நிகழ்வதற்கு சற்று முன் நாயக்கர் சாதியினர் சில அருந்ததிய இளைஞர்களை கூத்து நடக்கும் இடத்தில் இ...

மூத்திரத்தை அடக்கும் மாணவர்கள்

இக்கட்டுரையில் இமையத்தின் கேள்வி முக்கியமானது. ஏன் மாணவர்கள் நாள் முழுக்க கழிப்பறையை பயன்படுத்தாமல் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறார்கள். ஏன் ஒரு பள்ளி நிர்வாகம் கழிவை வெளியேற்றுவதை முக்கியம் என நினைப்பதில்லை? ஏன் போதுமான கட்டமைப்பு வசதிகள், நேரம் இதற்கு வழங்கப்படுவதில்லை?  நான் பள்ளி மாணவனாய் இருக்கும் போது வகுப்பில் இருந்து கழிப்பறை தொலைவில் இருக்கும். போலியோ காரணமாய் என்னால் வேகமாய் நடக்க இயலாது. நான் கழிப்பறையை நெருங்கும் போது மணி அடித்து விடும். இடைவேளை முடிந்து விடும். இதனால் நான் நாள் முழுக்க மூத்திரத்தை அடக்க கற்றுக் கொண்டேன். இதை சமாளிக்க அதிகமாய் தண்ணீரும் அருந்த மாட்டேன்.

இளம் எழுத்தாளன் கண்டிப்பாய் வாசிக்க வேண்டுமா?

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை மாணவர்களிடம் கவிதை குறித்து சமயவேலுடன் சேர்ந்து உரையாடிய அனுபவத்தை போகன் சங்கர் பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். அம்மாணவர்கள் இன்றும் பாரதிதாசனை தாண்டி வாசித்திராதது, தாம் எழுதும் கவிதைகளில் பாரதிதாசனையே பிரதியெடுப்பது குறித்த வருத்தத்தை தெரிவித்திருந்தார். மனுஷ்யபுத்திரனை கூட இவர்களுக்கு தெரியவில்லை என சமயவேலுக்கு சோர்வாகி விடுகிறது. தம் கவிதைகள் உண்மையில் கவிதையே அல்ல என சொல்லப்பட அம்மாணவர்களும் வேதனையில் தவிக்கிறார்கள். இப்படி சிவாஜிகணேஷன் பட கிளைமேக்ஸ் போல் ஆகி விடுகிறது.

திருமாவின் நிலைப்பாடுகள்

திருமா வை.கோவின் வற்புறுத்தலால் தான் திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனும் பார்வையில் எனக்கு நம்பிக்கையில்லை. திருமாவின் நேற்றைய பேட்டி அவரது மனநிலை என்ன என்பதை காட்டி விடுகிறது. அதில் திமுக மற்றும் அதிமுகவுக்கு தன் கதவுகளை எப்போதும் திறந்து வைத்திருப்பதாய் ஒரு தோற்றத்தை கொடுக்கிறார். அதாவது, அவர் எங்கும் வெளிப்படையாய் அதிமுகவை விமர்சிக்கவில்லை. திமுகவை பாராட்டவும் இல்லை. மாறாக, அடுத்து நிகழப் போகும் உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தல்கள் பற்றி பேசுகிறார். 

அபிலாஷின் "கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள்" - மனுஷி

(”புத்தகம் பேசுது” இதழில் வெளியான கட்டுரை) யானை பார்த்த குருடன் கதை நம் எல்லோருக்கும் நினைவிருக்கும் . ஒரு பிரதி குறித்த விமர்சனம் அல்லது வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வது என்பதும் அப்படிப்பட்டதுதான் . தனது அறிவுப் புலனுக்கு எட்டிய அளவில் அல்லது தனது வாழ்வனுபவத்துக்கு ஏற்பவே அப்பிரதி குறித்த புரிதலை அடைகிறான் வாசகன் . அதுதான் பிரதி எனவும் நிறுவ முயல்கிறான் . ஒரு பிரதி , அத்தகைய நிறுவுதல்களுக்கு அப்பாலும் ஏதோவொன்றைத் தாங்கிப் பிடித்து நிற்கிறது . அதேசமயம் , பிரதி குறித்த வாசகனின் அனுபவம்சார் புரிதல் என்பதும் முற்றிலும் மறுக்கப்பட முடியாத ஒன்றாகவே இருப்பதையும் அவதானிக்கத்தான் வேண்டும் . அபிலாஷின் கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள் என்ற நாவல் துப்பறியும் நாவல் என அடைப்புக்குறி இடப்பட்டாலும் என்னளவில் சமகாலச் சிக்கலைப் பேசும் முக்கியமான கதைப் பிரதி .

ஸ்வாதியும் ராம்குமாரும்: ஸ்காட்லாந்த் யார்டில் இருந்து குவாண்டநாமோ வரை

   -     (அக்டோபர் 2016 உயிர்மையில் வெளியான கட்டுரை) ஜூன் 24 அன்று கொல்லப்பட்ட ஸ்வாதியின் வழக்கு இந்தியாவில் மிகவும் புதிராக்கப்பட்ட வழக்குகளில் ஒன்று. இதற்கு இணையாக ராஜீவ் காந்தி கொலை வழக்கை தான் குறிப்பிட முடியும். ராஜீவ் படுகொலையை புலிகள் ஏன் செய்தார்கள், இந்தியாவில் அவர்களுக்கு அடைக்கலமும் உதவியும் அளித்த பிரமுகர்கள் யார், இதன் பின்னணியில் உள்ள சர்வதேச சக்திகள் யார் போன்ற கேள்விகளுக்கு சி.பி.ஐ கடைசி வரை பதில் அளிக்கவில்லை. ஒரு பேட்டரி வாங்கி அளித்த பேரறிவாளனும், ராஜீவ் கொலையாளிகளுடன் பயணம் செய்தது அல்லாமல் வேறு குற்றங்களை செய்யாத நளினியும் 25 வருடங்களுக்கு மேலாய் சிறையில் இருக்கிறார்கள். அந்த வழக்கில் முழு உண்மையும் வெளிவரக் கூடாது என்பதில் தான் சி.பி.ஐயும் நம் அரசும் மிக உன்னிப்பாக இருந்தன. சொல்லப்போனால் ஆட்சியாளர்கள் ஏதேனும் வகையில் சம்மந்தப்படும் வழக்குகளில் புலனாய்வாளர்களுக்கு அளிக்கப்படும் முதல் ஆணையே யாரையெல்லாம், எப்படியெல்லாம் விசாரிக்கக் கூடாது என்பது தான். இது எப்போதும் குற்றத்தை ஏவியவர்களுக்கு வரப்பிரசாதமாகி விடுகிறது. ஸ்வாதி கொலை வழக்...

காதலிப்பவர்கள் எல்லாம் ஏன் திருமணம் செய்ய வேண்டும்?

  இந்த வார குமுதம் லைபில் ப்ரியா தம்பி தனது “மாயநதி” பத்தியில் இளம் வயதில் திருமணமாகி வாழ்க்கையை தொலைக்கும் பெண்களைப் பற்றி எழுதியிருக்கிறார் (ஆண்களின் நிலையும் இவ்விசயத்தில் அவலம் தான் என்றும் சொல்கிறார்.). அவர் தன் ஊரில் இவ்வாறு இளம்வயதில் ஓடிப் போகும் பெண்கள் பற்றி தற்போது அதிகம் கேள்விப்படுவதாய் சொல்கிறார். அவர் சொல்வது குமரி மாவட்ட நாகர்கோயில் பகுதி என நினைக்கிறேன். என் ஊர் பத்மநாபபுரம். எங்கள் ஊரின் மண்ணின் குணமோ நீரின் சுவையோ அங்குள்ள இளம் பெண்கள் முணுக்கென்றால் காதல் வயப்படுவார்கள். சுற்றுவட்டார கிராமத்து ஆண்கள் இதை அறிந்து எங்கள் ஊரில் வட்டமடிப்பார்கள். இதற்கு ஒரு காரணம் இப்பெண்களுக்கு பதினாறு வயதுக்கு மேல் செய்வதற்கு உருப்படியாய் ஒன்றும் இல்லாதது. நல்ல படிப்பு, வேலை ஆகிய வாய்ப்புகள் அமையும் போது பெண்களின் காதல் ஆர்வமும் குறைகிறது. இந்த கோணத்தில் இருந்து தான் ப்ரியா தம்பி எழுதுகிறார்.

ரவிச்சந்திரன் அஷ்வின் – தனி வழி!

ரவிச்சந்திரன் அஷ்வின் மிக குறைந்த ஆட்டங்களில் 200 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர். அது மட்டுமல்ல 50, 100, 150 விக்கெட்டுகள் என ஒவ்வொரு மைல்கல்லையும் மிக குறைந்த டெஸ்ட் ஆட்டங்களில் சாதித்தவர் அஷ்வின். அவர் சீறிப் பாய்கிற வேகத்தை பார்த்தால் தன் முன்னோடியான ஹர்பஜனை அடுத்த ஐந்து வருடங்களில் தாண்டி சென்று விடுவார் எனத் தோன்றுகிறது. ஹர்பஜனின் விக்கெட் எண்ணிக்கை 417. அப்படியானால் அஷ்வின் ஓய்வு பெறும் போது அவர் இந்தியாவின் சிறந்த சுழலர்களில் அனில் கும்பிளேவுக்கு அடுத்தபடியாக மட்டுமே இருப்பார். தாமதமாக சுழல் பந்தை தேர்ந்தெடுத்து ஆடத் துவங்கிய போது அஷ்வினே தான் இப்படியான சிகரங்களை தொட முடியும் என நம்பி இருக்க மாட்டார்.

சாக்ரடீஸ் - காந்தி - இன்றைய வலதுசாரிகள்

வேலம்மாள் பொறியல் கல்லூரியின் விவாத போட்டிக்கு நடுவராக சென்ற போது எடுத்த படம் இது . விவாதத்தில் வெல்ல தர்க்கம் எவ்வளவு முக்கியம் , தர்க்க ரீதியாய் எதிராளியை முறியடிக்க முடியாத போது என்னவெல்லாம் தந்திரங்கள் பிரயோகிக்கலாம் , ஒரு விவாதத்தின் மைய தர்க்கம் , இரண்டாம் நிலை தர்க்கங்கள் என்னென்ன என விளக்கினேன் . முக்கியமாய் ஒரு விவாதத்தில் வெற்றி தோல்வி இறுதியானது அல்ல . அது தனிப்பட்ட வீழ்ச்சியோ எழுச்சியோ அல்ல . ஒரு விவாதத்தில் எதிர்தரப்பை முறியடிக்கும் போது அல்லது எதிர்தரப்பால் நாம் முறியடிக்கப்படும் போது ஒரு கருத்தியலோ தத்துவமோ மேலும் கூர்மையாகிறது , வலுப்பெறுகிறது .

இறுதி யாத்திரை

“இறுதி யாத்திரை” எம்.டி வாசுதேவன் நாயரின் அதிகம் பேசப்படாத ஒரு நாவல். தமிழில் சமீபத்தில் கே.வி ஷைலஜாவின் மொழியாக்கத்தில் வம்சி பதிப்பக பிரசுரமாய் வெளியாகி உள்ளது. இந்நாவல் குறித்து பேசும் முன் எம்.டி என்ன மாதிரியான எழுத்தாளர், அவரது இடம் என்ன என காண்போம். எம்.டி வாசுதேவன் நாயர் மலையாள நவீன இலக்கியத்தின் ஒரு சிறந்த ஸ்டைலிஸ்ட். சுருக்கமான விவரணைகள், நுணுக்கமான பார்வை, மிக மென்மையான உணர்வுகள் (மரணத்தின் இழப்பை கூட அடங்கின தொனியில் ஒரு கசப்பாக வெளிப்படுத்தும் பாங்கு), கவித்துவம், சம்பவங்கள் மற்றும் மனிதர்களுடன் ஒரு விலகின அணுகுமுறை கொண்ட மைய பாத்திரம், நகைமுரண், நிறைவின்மை, அதிருப்தி ஆகியவற்றை மிக்ஸியில் இட்டு ஒரு சுற்றி சுற்றினால் அது தான் எம்.டியின் மொழி.