முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான் அவனல்ல

Image result for milan kundera

(தலைப்பு நான் அளித்தது. கீழ்வருவது மிலன் குந்தெராவின் ஒரு கட்டுரையில் வரும் ஒரு சிறிய உண்மைக் கதை)
என் நண்பர் ஜோசப் ஸ்க்வொரெக்கி, தனது புத்தகம் ஒன்றில், இந்த உண்மைக் கதையை சொல்கிறார்:
பிரேகில் உள்ள ஒரு பொறியியலாளர் லண்டனுக்கு ஒரு தொழில்முறை கருத்தரங்குக்கு அழைக்கப்படுகிறார். அவர் செல்கிறார், நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கிறார், பிரேகுக்கு திரும்புகிறார். திரும்ப வந்த சில மணிநேரங்களில் அவர் தன் அலுவலகத்தில் இருந்தபடி ரூட் பிரேவோவை – ஆளும் சோஷலிஸ கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகை – எடுத்து படிக்கிறார்: ஷெக் நாட்டு பொறியியலாளர் ஒருவர், லண்டனில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு, தன் சோஷலிஸ தாயகத்தைப் பற்றி மேற்கத்திய ஊடகங்களுக்கு அவதூறு கருத்தொன்றை தெரிவித்துள்ளார்; அத்துடன் அவர் மேற்கிலேயே தங்கி விட்டார்.

சட்டத்துக்குப் புறம்பான குடிபெயர்ச்சி மற்றும் அந்த மாதிரியான கருத்து வெளியீடு என்பது ஒரு சாதாரண விசயம் அல்ல. இருபது வருடங்கள் சிறையில் தள்ளி விடுவார்கள். நமது பொறியாளருக்கு தன் கண்ணையே நம்ப முடியவில்லை. ஆனால் சந்தேகமில்லை, அப்பத்திரிகை செய்தி அவரைத் தான் குறிக்கிறது. அவரது காரியதரிசி அலுவலகத்துக்கு வந்து பார்த்து அதிர்ச்சியாகிறார்: அடக்கடவுளே, அவள் சொல்கிறாள், திரும்பி வந்திட்டீங்களா? எனக்குப் புரியவில்லை – உங்களைப் பற்றி என்னவெல்லாம் எழுதியுள்ளார்கள் என படித்தீர்கள் தானே?
தன் காரியதரிசியின் கண்களில் அவர் அச்சத்தைக் காண்கிறார். என்ன செய்வது? அவர் ரூட் பிராவோ அலுவகலகத்துக்கு விரைகிறார். அந்த செய்திக்கு பொறுப்பான ஆசிரியரைக் காண்கிறார். ஆசிரியர் மன்னிப்பு கோருகிறார்; ஆம், இது ஒரு சிக்கலான காரியம் தான், ஆனால் அவர் – ஆசிரியர் – இதற்கு பொறுப்பல்ல, உட்துறை அமைச்சரவையிடம் இருந்து அவருக்கு நேரடியாக வந்த தகவல்களின் அடிப்படையில் தான் அச்செய்தியை எழுதினார்.
ஆக, பொறியாளர் அமைச்சரவைக்கு செல்கிறார். அங்கே அவர்கள் சொல்கிறார்கள், ஆமாம், நிச்சயமாய் எல்லாம் தவறு தான், ஆனால் அவர்கள் – அமைச்சரவை – இதற்கு பொறுப்பல்ல. லண்டன் தூதரகத்தில் உள்ள உளவுத்துறையினரிடம் இருந்து அவர்களுக்கு அந்த அறிக்கை கிடைத்தது. அறிக்கையை திரும்பப் பெறுமாறு பொறியாளர் கேட்கிறார். இல்லை, அவருக்கு சொல்லப்பட்டது, அவர்கள் ஒருபோதும் திரும்பப் பெறுவதில்லை, ஆனால் அவருக்கு எந்த பிரச்சனையும் வராது, கவலைப்பட ஒன்றுமில்லை.
ஆனால் பொறியாளரால் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. தான் கண்காணிப்படுவதாய், தனது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாய், தெருவில் பின் தொடரப் படுவதாய் அவருக்கு திடீரென்று தோன்றுகிறது. தூக்கமில்லை, துர்கனவுகள் துரத்துகின்றன, கடைசியில் இந்த நெருக்கடி தாள முடியாமல், அவர் நிறைய ஆபத்துகளை சந்தித்து தன் நாட்டை விட்டு சட்டத்துக்குப் புறம்பாய் வெளியேறுகிறார். அப்படி அவர் உண்மையிலே அரசியல் காரணத்துக்காய் புலம்பெயர்ந்தவர் ஆகிறார்.

(Somewhere Behind கட்டுரையில் இருந்து)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...