முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆசிரியரும் அப்பாவும்


என்னுடைய வகுப்பு மாணவர்கள் CIA எனும் உள்மதிப்பீட்டுக்காக கட்டுரைகள் சமர்ப்பிப்பார்கள். அவற்றை நான் கவனமாய் படித்து கஞ்சத்தனமாய் மதிப்பெண்கள் அளிப்பேன். புது கருத்துக்கள், சுயமான பார்வை, விரிவான அலசல், ஓரளவு தப்பில்லாத மொழி என அளவுகோல்கள் வைத்தே கராறாய் மதிப்பிடுவேன். பெரும்பாலான மாணவர்கள் 20க்கு 12 தாண்ட மாட்டார்கள். சமீபத்தில் எங்கள் பல்கலையில் அரைக்கல்வியாண்டின் இடையில் நடத்தும் mid-sem பரீட்சைகள் நடந்தன. அதன் விடைத்தாள்கள் என் மேஜைக்கு வந்தன. நான் பாடம் நடத்தாத வகுப்புகளின் விடைத்தாள்கள் (ஆனால் நான் நடத்தும் பாடங்கள்). நான் இந்த தாள்களை தாராள மனதுடன் மதிப்பிட்டு மதிப்பெண்களை அள்ளி வழங்கினேன். சிறு தவறுகள் கண்டாலும் குறித்து விட்டு மதிப்பெண்ணை அதிகம் குறைக்காமல் இருந்தேன். ஏன் இந்த மாணவர்களுக்கு – நான் நேரடியாய் அறியாத மாணவர்களுக்கு – இப்படி மதிப்பெண்களை தாராளமாய் அளிக்கத் தோன்றுகிறது? ஏன் இந்த மனப்பான்மை என் சொந்த மாணவர்களைப் பொறுத்து ஏற்படவில்லை? இக்கேள்வி என்னை குடைந்து கொண்டிருந்தது.


 இன்று காலை எனக்கு உண்மை துலங்கியது. எளிய உண்மை தான்.

நான் இம்மாணவர்களை என் சொந்த குழந்தைகளைப் போல பாவிக்கிறேன். ஆக, இவர்கள் மீது அதிக எதிர்பார்ப்புகள் வைக்கிறேன். அவர்களால் என்னை சுலபத்தில் திருப்திப்படுத்த முடியாது. அவர்களின் சிறு பிழைகளும் எனக்கு பெரிதாய் தெரிகின்றன. என் அப்பாவும் என்னிடம் இப்படித் தான் இருந்தார். அவரால் என்னை சுலபத்தில் பாராட்டி கொண்டாட முடியவில்லை. நான் தடம் புரண்டு விடுவேனோ என அஞ்சினார். என்னிடம் கராறாய் இருக்க முயன்றார். இது ஒரு father complex என தோன்றுகிறது.
இன்று காலை ராஜீவ் எனும் சமூகவியல் பேராசிரியரிடம் இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்னார்: “ஆச்சரியம்! நானும் இன்று காலை இதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். கல்லூரி வளாகத்தில், வகுப்புக்கு வெளியே என் வகுப்பு மாணவர்கள் கும்பலாய் கூடி நின்று சிரித்து விளையாடுவதை காணும் போது நான் அதை ரசிக்கிறேன். ஆனால் இதையே வேறு மாணவர்கள் பண்ணும் போது எரிச்சலடைகிறேன். என்ன இது அபத்தமான, அற்பமான விளையாட்டு. இந்த மாணவர்களுக்கு அறிவே இல்லை எனத் தோன்றுகிறது. ஏன் இப்படி இருவிதங்களில் மாணவர்களைக் காண்கிறேன் என வியந்து கொண்டிருந்தேன். இதுவும் father complex தான். ஆனால் நாம் இருவருக்கும் ஒரு வித்தியாசம். நீ ஒரு பத்தொன்பதாம் நூற்றாண்டு அப்பாவைப் போல் இருக்கிறாய். நானோ இருபதாம் நூற்றாண்டு அப்பாவாய் நடந்து கொள்கிறேன்…”
”அதென்ன பத்தொன்பதாம் நூற்றாண்டு அப்பா?”
“போன தலைமுறை அப்பாக்கள். தன்னால் முடியாததை தன் மகன் சாதிக்க வேண்டும் என ஏங்கிய அப்பாக்கள். தன் பிள்ளைகள் சுவடு பிழைப்பதை தாங்கிக் கொள்ள முடியாத அப்பாக்கள். எதிர்பார்ப்பின் கயிறுகளால் பிள்ளைகளை கட்டி வைத்த அப்பாக்கள். மிதமிஞ்சிய பிரியத்தால் பிள்ளைகளை நேசிக்க தவறிய அப்பாக்கள். ஆனால் இன்றைய அப்பாக்கள் பிள்ளைகள் வாழ்க்கையை பார்க்க கொண்டாடுவதை விரும்புகிறார்கள். அவர்களின் தவறுகளை சுலபத்தில் மன்னிக்கிறார்கள். பிள்ளைகள் என்ன குற்றம் செய்தாலும் அதை கண்ணை மூடி ஏற்கிறார்கள்.”
எனக்கு அவர் சொல்வது உண்மை எனத் தோன்றியது. ஜெயமோகனை சு.ரா மறுத்ததற்கும், வாக்னரை நீட்சே கடுமையாய் விமர்சித்ததற்கும், பிராயிடும் லகானும் மனதளவில் விலகி நின்றதற்கும் இந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு அப்பா-மகன் முரண்கள் தாம் காரணம். இருபதாம் நூற்றாண்டு அப்பா-மகன் உறவை எழுத்தாளர்கள் இடையே காண இயலுமா? சாருவுக்கும் அவரது சீடகோடிகளுக்குமான உறவு ஓரளவு அப்படியானது தான்.

பேராசிரிய நண்பர் இறுதியில் இப்படி சொன்னார்: “ஆனால் ரொம்ப சுவாரஸ்யமான விசயம் இதுவல்ல. இந்த மாணவர்களுக்கு நாம் பொருட்டே அல்ல. அவர்கள் பின்நவீனத்துவ பிறவிகள். தமது கற்பனைக்குள், தமது கனவுகளுக்குள் வாழும் காற்றுக்குமிழிகள் அவர்கள். அவர்களுக்கு சொந்த அப்பாவே பொருட்டில்லை. ஆசிரியர்கள் அவர்கள் உலகிலேயே இல்லை!”   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...