முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குருட்டு நம்பிக்கையின் அவசியம்

Image result for dark alleyway

பெங்களூரின் புறநகர்ப் பகுதி. குப்பை மேட்டை ஒட்டி வளைந்து திரும்பும் ஒரு குறுகலான தெரு. ஒரு இளம்பெண்ணை மற்றொரு சற்று வயது முதிர்ந்த பெண் கையைப் பற்றி அழைத்துப் போகிறாள். இளம்பெண் பார்வையற்றவள்.
 நான் சென்னையில் பார்த்துள்ள பல பார்வையற்றவர்கள் யார் துணையுமின்றி நடந்து போவார்கள். ஆனால் இப்பெண் அப்பகுதிக்கு புதியவள்; அவளுக்கு அந்த பாதை இன்னும் முழுக்கப் பழகவில்லை. வழிகாட்ட ஒரு கரம் துணைக்கு தேவையுள்ளது என ஊகித்தேன்.
 சந்தின் துவக்கத்தில் இவளை விட்டு விட்டு அவள் இவள் போகிறதை ஆவலாதியுடன் பார்த்தாள். இவ்வளவு தூரம் கைப்பற்றி நடந்து வந்தவள் இனிமேல் எப்படி தனியாக போகப் போகிறாள்?

 நான் அந்த சந்துக்குள் நுழைந்து அப்பெண்ணை கவனித்தேன். எனக்குப் பின்னால் அந்த துணை வந்தப் பெண் இன்னமும் சற்று கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். குண்டும் குழியுமான சாலை. பாதி வழியை அடைத்து ஒரு மேடை போட்டிருந்தார்கள். ஒரு மாடு வழியை அடைத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. ஆட்டோ, பைக் என அவ்வப்போது வழிமறியல் வேறு செய்தார்கள். பைக்கில் என்னால் பாதி வழியை கடக்க பத்து நிமிடம் ஆயிற்று. ஆனால் அப்பெண் குச்சியை தட்டியபடி சுலபமாய் நடந்து போய்க் கொண்டிருந்தாள். சட்டென அவளை அடையாளம் கண்டு ஒரு பூக்காரி அம்மா எழுந்து வந்து, எதையும் கேட்காமல் அவளிடம் சகஜமாய் பேசிக் கொண்டு அவள் கையைப் பற்றி அழைத்துச் சென்றாள். சந்தின் மறுமுனையில் ஒரு சிறு கோயில். அது வரை பூக்காரி அம்மாள் அழைத்துப் போய் விட்டாள். இதை அடுத்து மந்திரம் போட்டது போல் இன்னொரு அம்மா வந்தார். அவர் இப்பெண்ணின் கையை அடுத்து பற்றிக் கொண்டார். இப்படியே அப்பெண் நான்கு சந்துகளை தாண்டும் வரை ஐந்து பேர் அவள் கையைப் பற்றி வழிநடத்தினார்கள். அவர் யாரிடமும் உதவி கோர நேரவில்லை. அவள் வீடு ஒரு அடுக்குமாடியில். அங்கு சென்றதும் குஞ்சுப் பறவை கூட்டுக்குள் தலையை இழுத்துக் கொண்டு மறைவது போல் நுழைந்து மறைந்து விட்டார். எவ்வளவு சிரமம், ஆனால் எவ்வளவு சுலபம்!
சிலநேரம் வாழ்வில் எனக்கான தேவைகளை நானே கச்சிதமாய் திட்டமிட்டு நானே நிறைவேற்ற வேண்டும் என தவிப்பேன். என் திட்டங்களில் சிறிது பிசகினாலும் சோர்ந்து விடுவேன். ஆனால் சிலநேரம் அதே வாழ்வில் எதையும் திட்டமிடாமல் நம்மை வழிநடத்தும் ஏதோ ஒரு கரத்தை நம்பி கண்ணை மூடி இறங்கி விட வேண்டும் எனத் தோன்றுகிறது. அந்த குருட்டு நம்பிக்கை தான் நம்மை துன்பங்களில் இருந்து விடுவிக்கும். அன்பை நோக்கி நடத்திச் செல்லும். சிலநேரம் நம் பகுத்தறிவுக் கண் அவிய வேண்டும். அது நல்லது!


கருத்துகள்

bandhu இவ்வாறு கூறியுள்ளார்…
தங்களின் சிறந்த பதிவில் ஒன்று!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...