Skip to main content

மாபியா நாட்டை ஆண்டால்…

Image result for karnataka election horse trading



கர்நாடகாவில் யாருக்கும் ஆட்சியமைக்க தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அங்கு பாஜக அரங்கேற்றும் அதிகார அடவாடித்தனங்களை, குதிரை பேரத்தை பார்க்கையில் இது எந்தளவுக்கு மாபியாக்கள் நிழலுலகை ஆள்வதை ஒத்திருக்கிறது என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது. ஹுஸைன் செய்தி Dongro to Dubai போன்ற நூல்களில் மாபியா சூழலை, எழுதப்படா விதிகளை, முரட்டு அதிகார பரவலாக்கலை விவரிக்கிறார்.

 ஒரு மாபியா டான் மும்பைக்கு துபாயில் இருந்து வந்து தன் கண்ணில் படுகிற இடங்களில் மனதைத் தொடுகிறவற்றை குறித்துக் கொள்கிறார். அடுத்து தன் உதவியாளர்களுக்கு ஆணை இடுகிறார். அவர்கள் நில உரிமையாளர்களின் விருப்பம், அந்த நகராட்சியின் விதிமுறைகள், நியாய அநியாயம் பற்றியெல்லாம் துளியும் அக்கறை கொள்ள மாட்டார்கள். யாரிடமும் கேட்டு பேரம் பேசி காலம் தாழ்த்த மாட்டார்கள். கொடு என்றால் அந்த இடத்தை விட்டு உரிமையாளர் ஓடி விட வேண்டும். அதிகாரிகள் மாபியா முன் கூழைக்கும்பிடு போடுவார்கள். ஒன்றிரண்டு மாதங்களில் அங்கு மாபியா டானின் அலுவலகங்கள், அவரது வணிக வளாகங்கள் நெடிதுயரும்; பட்டவர்த்தமாய் செயல்படும். பாஜக தனக்கு ஆதரவேயற்ற அல்லது முழு ஆதரவற்ற மாநிலங்களை கைப்பற்றும் செயல் இப்படித் தான் இருக்கிறது.
 காங்கிரஸ் குதிரைபேரம் செய்த்ததற்கும், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு மாநில ஆட்சிகளை கட்டுக்குள் வைக்க முயன்றதற்கும் பாஜக அதை செய்வதற்குமான முக்கிய வித்தியாசம் இது. காங்கிரஸ் எப்போதும் சமரசத்துக்கு, பேரம் பேசுவதற்கு ஒரு கால அவகாசத்தை, வாய்ப்பை கொடுத்தது. ஆனால் பாஜக யானை ஒரு எறும்புப் புற்றை நசுக்குவது போல, ஒரு மாபியா டான் ஒரு நகரத்தை குறுகிய அவகாசத்தில் ஆக்கிரமிப்பது போல கண்மூடித்தனமாய் மாநில ஆட்சிகளை கைப்பற்றுகிறது. நாங்கள் எத்தனை இடங்கள் வென்றாலும் இழந்தாலும் இங்கு எங்கள் ஆட்சி தான் நடக்கும். அதற்காக எந்த எல்லைக்கும் போவோம் என்னும் ஒரு காட்டுத்தனமான அணுகுமுறை அவர்களுடையது. பாஜக முன்வைக்கும் தங்குதடையற்ற அநீதி ஒரு காட்டுத்தீயை போல் ஒரு வனத்தை தின்று தன் பசியை அடக்கும் சுபாவம் கொண்டது. அதன் முன் சக்தி குறைந்த, சிறிய அளவிலேனும் தார்மீக குணம் கொண்ட யாரும் தாக்குப்பிடிக்க முடியாது.
 தமிழகத்தில் பாஜக குழந்தைக் காலடிகளைக் கூட எடுத்து வைக்கவில்லை இன்னும். ஆனால் ஆட்சி அவர்கள் கையில். ஊடகங்கள் முழுக்க அவர்களிடம் ஊதியம் பெற்று காலில் விழுகின்றன. எம்.ஜி.ஆர் மரணித்த வேளையில் தமிழகத்தில் ஒரு வெற்றிடம் உருவாகியது. அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் தமிழகத்தை இது போல் வலுக்கட்டாயமாய் கைப்பற்றவில்லை. ஆனால் ஜெயலலிதா மரணத்தின் போது பாஜக மொத்தமாய் தமிழகத்தை ஆக்கிரமித்து அதிமுகவை ஒரு நாய்க்குட்டியை போல் நடத்திய விதம் ஒரு ஜனநாயக படுகொலை மட்டுமல்ல மாபியா பாணியிலான அராஜக கைப்பற்றலும் தான்.
எல்லா இடத்திலும் தானே ஜெயிக்க வேண்டும், நிறைந்திருக்க வேண்டும், அதற்கு காத்திருக்க அவகாசம் இல்லை, பொறுமை இல்லை, எதிரே வருபவனை வெட்டி சாய்த்து முன்னேறு எனும் இந்த ஆவேசம், மூர்க்கம், வெறி இந்த தேசத்தை வேறெப்போதும் இல்லாத அளவுக்கு சீரழிக்கப் போகிறது.

Comments

Anonymous said…
தவறு. மோடி இல்லாமல் இருந்தால் சின்னம்மாதான் இப்போதைய முதல்வர். அதற்கும் பாஜகவைத்தான் குத்தம் சொல்வீங்க..

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...