முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீங்க சொன்னா தலைகீழாத் தான் இருக்கும் (3) – “சகோதரிகள்”

Image result for hemingway
ஹெமிங்வே

முந்தின பதிவில் நான் எழுப்பின கேள்விகள் இவை:
1)   எதார்த்தவாதம் அவசியம் இல்லையா? கதை எதார்த்த வாழ்வை பிரதிபலிக்க வேண்டாமா?
2)   ஒரு கதையில் ஒருவர் கண்ணீர் விடுகிறார். அந்த கண்ணீர் வாசகனுக்கு வர வேண்டியதல்லவா? கதாபாத்திரம் மட்டும் அழுது புலம்பினால் அது அபத்தமல்லவா?
இனி பதில்கள்.


1)   எதார்த்தம் எப்படி ஒரு சித்தரிப்பு பாணியோ மிகையும் அப்படியான ஒரு பாணியே. எதார்த்தம் வெறுமனே ஒரு மொழி மட்டுமே எனும் இடத்துக்கு இன்றைய பின்நவீனத்துவ விமர்சகர்கள் வந்து விட்டார்கள். ஆனால் நாம் இன்னும் ஷகீலாவை விட்ட பாடில்லை.
2)   கதாபாத்திரம் உணர்ந்தால் போதாது, அதை வாசகனும் உணர வேண்டுமே என்பது ஹெமிங்வே சொன்ன வாக்கியம். அது இன்றும் உயிருடன் ஒரு புலியைப் போல நம் இலக்கிய வெளிகளில் உலவுகிறது. ஆனால் நான் ஏற்கனவே சொன்னது போல கதைமொழியே உண்மையின் பிரதிபலிப்பு என்னும் இடத்திற்கு நாம் (உலகளாவிய விமர்சகர்கள்) இன்று வந்து விட்டோம். இன்றைய எழுத்தாளர்கள் மீ-எதார்த்த மொழியில், மிகையுடன், தம் விழியோர கண்ணீரை வாசகன் மீது சுண்டி விடுபவர்களே. (ஜெ.பி சாணக்யா, தேவிபாரதி, எஸ். செந்தில்குமார், லஷ்மி சரவணகுமார், போகன், சுரேஷ் பிரதீப்… [சட்டென நினைவுக்கு வந்த பெயர்களை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன். விடப்பட்டவர்கள் மன்னிக்கவும்.])

அதாவது, இன்றைய கதைகள் வாசகன் நெஞ்சைத் தொட வேண்டியதில்லை என்பதல்ல என் தரப்பு. தொட வேண்டும், உங்களை பாதிக்க வேண்டும், அழவும் சிரிக்கவும் செய்ய வேண்டும், உண்மை போலவே உங்களுக்கு தோன்ற செய்ய வேண்டும். ஆனால் அது இன்று ரொம்ப முக்கியம் அல்ல. ஒரு கதையில் வரும் சம்பவம் நடக்க சாத்தியமற்றது என தோன்றினாலும் பிரச்சனை இல்லை. ஏன் எனும் கேள்விக்குள் நான் போகவில்லை. அது ஒரு சிக்கலான தத்துவ விவாதத்தில் போய் முடியும் என்பதால்.
  
இனி கே.என் செந்திலின் நெடுங்கதையான “சகோதரிகளுக்கு” வருவோம். அதை ஒரு குறுநாவல் என்றே அழைக்க விரும்புவேன் – அதில் நாவலுக்கான கூறுகள் வலுவாக உள்ளன. இதனாலே எந்த சிறுகதையையும் விட அதிகமான கவனத்தை அக்கதை (குறுநாவல்) பெற்றது. ஆனால் சுரேஷ் பிரதீப்பை தவிர நாவலை பெரும்பாலானோர் சரியாய் உள்வாங்கவில்லை. விமர்சனங்கள் பெரும்பாலும் வீட்டைப் பெருக்கி குப்பையை அள்ளி மாடியில் இருந்து தெருவில் வீசுவது போன்றே அமைந்துள்ளது. எதார்த்தமாக இருக்கிறதா இல்லையா என்பதைத் தாண்டி இவ்விமர்சனங்கள் போகவில்லை (எனக்கு சான்றிதழ் தர மறுத்த டாக்டர் நினைவுக்கு வந்தது இதனால் தான்).  
கே.என் செந்திலும் இந்த வகையான “கரார்” விமர்சகர் தான். ஆனால் ஆச்சரியமாக அவரது படைப்பில் இந்த சிக்கல் இல்லை. அசோகமித்திரனும் பாலகுமாரனும் கலந்த ஒரு கதையோட்டத்தை அவர் பயன்படுத்துகிறார். எனக்கு இது மிகுந்த வியப்பை அளித்தது. நான் இதை மிகவும் ரசித்தேன்.
நாவலைப் பற்றி சற்று விரிவாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...