முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீங்க சொன்னா தலைகீழாத் தான் இருக்கும் (3) – “சகோதரிகள்”

Image result for hemingway
ஹெமிங்வே

முந்தின பதிவில் நான் எழுப்பின கேள்விகள் இவை:
1)   எதார்த்தவாதம் அவசியம் இல்லையா? கதை எதார்த்த வாழ்வை பிரதிபலிக்க வேண்டாமா?
2)   ஒரு கதையில் ஒருவர் கண்ணீர் விடுகிறார். அந்த கண்ணீர் வாசகனுக்கு வர வேண்டியதல்லவா? கதாபாத்திரம் மட்டும் அழுது புலம்பினால் அது அபத்தமல்லவா?
இனி பதில்கள்.


1)   எதார்த்தம் எப்படி ஒரு சித்தரிப்பு பாணியோ மிகையும் அப்படியான ஒரு பாணியே. எதார்த்தம் வெறுமனே ஒரு மொழி மட்டுமே எனும் இடத்துக்கு இன்றைய பின்நவீனத்துவ விமர்சகர்கள் வந்து விட்டார்கள். ஆனால் நாம் இன்னும் ஷகீலாவை விட்ட பாடில்லை.
2)   கதாபாத்திரம் உணர்ந்தால் போதாது, அதை வாசகனும் உணர வேண்டுமே என்பது ஹெமிங்வே சொன்ன வாக்கியம். அது இன்றும் உயிருடன் ஒரு புலியைப் போல நம் இலக்கிய வெளிகளில் உலவுகிறது. ஆனால் நான் ஏற்கனவே சொன்னது போல கதைமொழியே உண்மையின் பிரதிபலிப்பு என்னும் இடத்திற்கு நாம் (உலகளாவிய விமர்சகர்கள்) இன்று வந்து விட்டோம். இன்றைய எழுத்தாளர்கள் மீ-எதார்த்த மொழியில், மிகையுடன், தம் விழியோர கண்ணீரை வாசகன் மீது சுண்டி விடுபவர்களே. (ஜெ.பி சாணக்யா, தேவிபாரதி, எஸ். செந்தில்குமார், லஷ்மி சரவணகுமார், போகன், சுரேஷ் பிரதீப்… [சட்டென நினைவுக்கு வந்த பெயர்களை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன். விடப்பட்டவர்கள் மன்னிக்கவும்.])

அதாவது, இன்றைய கதைகள் வாசகன் நெஞ்சைத் தொட வேண்டியதில்லை என்பதல்ல என் தரப்பு. தொட வேண்டும், உங்களை பாதிக்க வேண்டும், அழவும் சிரிக்கவும் செய்ய வேண்டும், உண்மை போலவே உங்களுக்கு தோன்ற செய்ய வேண்டும். ஆனால் அது இன்று ரொம்ப முக்கியம் அல்ல. ஒரு கதையில் வரும் சம்பவம் நடக்க சாத்தியமற்றது என தோன்றினாலும் பிரச்சனை இல்லை. ஏன் எனும் கேள்விக்குள் நான் போகவில்லை. அது ஒரு சிக்கலான தத்துவ விவாதத்தில் போய் முடியும் என்பதால்.
  
இனி கே.என் செந்திலின் நெடுங்கதையான “சகோதரிகளுக்கு” வருவோம். அதை ஒரு குறுநாவல் என்றே அழைக்க விரும்புவேன் – அதில் நாவலுக்கான கூறுகள் வலுவாக உள்ளன. இதனாலே எந்த சிறுகதையையும் விட அதிகமான கவனத்தை அக்கதை (குறுநாவல்) பெற்றது. ஆனால் சுரேஷ் பிரதீப்பை தவிர நாவலை பெரும்பாலானோர் சரியாய் உள்வாங்கவில்லை. விமர்சனங்கள் பெரும்பாலும் வீட்டைப் பெருக்கி குப்பையை அள்ளி மாடியில் இருந்து தெருவில் வீசுவது போன்றே அமைந்துள்ளது. எதார்த்தமாக இருக்கிறதா இல்லையா என்பதைத் தாண்டி இவ்விமர்சனங்கள் போகவில்லை (எனக்கு சான்றிதழ் தர மறுத்த டாக்டர் நினைவுக்கு வந்தது இதனால் தான்).  
கே.என் செந்திலும் இந்த வகையான “கரார்” விமர்சகர் தான். ஆனால் ஆச்சரியமாக அவரது படைப்பில் இந்த சிக்கல் இல்லை. அசோகமித்திரனும் பாலகுமாரனும் கலந்த ஒரு கதையோட்டத்தை அவர் பயன்படுத்துகிறார். எனக்கு இது மிகுந்த வியப்பை அளித்தது. நான் இதை மிகவும் ரசித்தேன்.
நாவலைப் பற்றி சற்று விரிவாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...