முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“என்னங்க ‘சார்’?” கட்டுரையும் எதிர்வினையும்: தீர்வு என்ன?



மின்னம்பலம் டாட்காமில் வெளியாகியுள்ள எனது கட்டுரை “என்னங்க‘சார்’?”. அக்கட்டுரை நல்ல கவனம் பெற்றுள்ளது. “சார்” விளிப்பெயரின் அரசியல், அதன் வரலாறு என்ன, அது இன்றைய சமூகத்தில் எப்படி விம்ர்சனத்துக்குள்ளாகிறது, இந்தியப் பண்பாட்டை பிரதிபலிக்கும் ஒன்றாக எப்படி இந்த விளிப்பெயர் மாறி உள்ளது, அது எப்படி நமது வேலையிட உறவுகளிடையே உள்ள நெருக்கத்தை குறைக்கிறது என பல விசயங்களை அக்கட்டுரையில் விவாதிக்கிறேன்.
அக்கட்டுரைக்கு இன்று வந்துள்ள எதிர்வினை இது:

அன்பிற்கினிய சந்திரன்.
தங்களின் அதென்னங்க 'சார்' சிறப்புக் கட்டுரை படித்தேன். மிக அழகாக பலவற்றையும் அலசியுள்ளீர்கள். ஆனாலும் ,அதென்னங்க 'சார்'...
எல்லோருக்கும் பயனுள்ள ஒரு தீர்வை சொல்லாமலே போய்வீட்டீர்கள்..
நன்றி.
அன்புடன்.
செழியன்.மா.
பத்திரிகையாளர்.

அன்புள்ள செழியன்
நன்றி. தீர்வை அக்கட்டுரைக்குள்ளே நீங்க காண இயலும்.
(1)  அலுவலக உறவுகள் இடையே “சார்”, “மேடம்” விளி ஒரு அந்நிய உணர்வை ஏற்படுத்துகிறது. ஆகையால், அதை விடுத்து பரஸ்பரம் “அண்ணா”, “அக்கா”, “தம்பி” (இமையம் என்னை தம்பி எனத் தான் பிரியமுடன் அழைப்பார்) அழைப்பது நலம். ஆரம்பத்தில் அலுவலகத்தில் இப்படி ஒருவரை அழைப்பது சற்றே மலினமாய் பட்டாலும், நீண்ட நோக்கில் அதுவே பயன் தரும்.
(2)   பொதுவிட பயன்பாட்டைப் பொறுத்தமட்டில் “சார்” என்பது வெறுமனே ஒரு காலனிய எச்சம் அல்ல; அது இந்தியத் தன்மை பெற்றுவிட்ட ஒரு சொல்; நம் பண்பாட்டின் சாரத்தை தனதாக்கிக் கொண்ட சொல். ஆகையால், அதற்கெதிரான பிரச்சாரம் அவசியமற்றது.
இவையே நான் வந்தடையும் முடிவுகள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...