முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“90களின் தமிழ் சினிமா” பேட்டி (11)



(எனது 90களின் தமிழ் சினிமா” நூலை ஒட்டி World of Appu இணையதளத்தில் வெளியான பேட்டி இது.)

Image result for director ram 
ஆங்கிலத்தில் wolfcrow போன்ற யூடியூப் அலைவரிசைகளில் வெளிவரும் சினிமா மொழி அலசல்களைக் காண்கையில் இவையெல்லாம் எப்போது தமிழில் நிகழப் போகின்றன எனும் ஆதங்கம் எனக்கும் ஏற்படுகிறது.
நல்ல விமர்சன போக்கு எதிர்கால சினிமாவை செழுமைப்படுத்தும். அதையே ராம் கோருகிறார். நியாயம் தான்!  
சரி, இதை எப்படி இங்கே தமிழில் தோற்றுவிப்பது?

கல்விப் புலத்தில் மொழிப் பாடங்களுடன் காட்சி ஊடகங்களின் மொழியையும் கற்பிக்கலாம். வெகுஜன ஊடகங்களில் இது பற்றி எளிய அறிமுகங்கள் கொடுக்கலாம். விகடனில் யாராவது இதைப் பற்றி ஒரு எளிய தொடர் எழுதினாலே (வெறுமனே உலக சினிமா கதையை விவரித்து சுருக்காமல்) அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
தமிழில் சினிமாவின் தொழில்நுட்ப ரீதியான விசயங்களை, அதன் காட்சி வரலாற்றை அறிந்த நபர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் அதை எழுதுவதில்லை. நான் ராமை ஒருமுறை சந்தித்த போது பேரன்புபடத்தின் முதல் நாற்பது நிமிடங்களைப் போட்டுக் காட்டினார். நான் அதன் துவக்க காட்சிகள் பற்றி வினவிய போது, அந்த காட்சிகளின் பல்வேறு நுட்பங்களை அவர் ஒரு மணிநேரம் அற்புதமாய் எனக்கு விளக்கினார். காட்சி மொழி, திரைக்கதை பற்றி அவருக்குள்ள ஞானம் என்னை வியக்க வைத்தது. ஆனால் ராம் இதையெல்லாம் எழுதுவதில்லை; அவருக்கு அவகாசமில்லை. இது போன்ற நுட்பங்களை எழுதி பிரசுரிப்பவர்கள், அதை பதிப்பிப்பவர்கள் நமக்கு வேண்டும்.

1.   தமிழ் சினிமாவில் மண்சார்ந்த கதை சொல்லல் முறைகள் கொண்டுவரவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? Asghar Farhadi போன்ற இயக்குனர்கள் சினிமாவுக்கும் நாடகத்துக்குமான கூட்டிணைப்பை ஆராய்கிறார்கள். தமிழ் மண்சார்ந்த கலைகளுக்கும், சினிமாவுக்குமான உரையாடலை எப்படி வலுப்படுத்துவது?

நீங்கள் குறிப்பிடும் மண்சார்ந்த கதைகூறல் தமிழில் என்றுமே இருந்துள்ளதுபல வெற்றிப்படங்கள் இதை பயன்படுத்தி உள்ளன. இன்னும் சொல்லப் போனால் இந்திய சினிமாவே கூத்து, நாடகம், நையாண்டி மேளம் என பல தொல்வடிவங்களில் இருந்து வரித்துக் கொண்ட நுட்பங்கள், அம்சங்களைக் கொண்டு தோன்றினது தான். மணிரத்னம் தனது பேட்டி ஒன்றில் இந்திய சினிமாவில் பாடல்கள் எப்படி மிகை-கற்பனையுடன் எடுக்கப்படுகின்றன; எதார்த்தமான ஒரு படத்தில் கூட பாடல் புகுந்ததும் சட்டென அது ஒரு மிகை எதார்த்த நிலைக்கு நகர்ந்து விடுகிறது; அப்போது நம்மால் எதார்த்த கதையாடலில் சாத்தியப்படாத பல விசயங்களை பாடல் வழியாய் சித்தரிக்க முடிகிறது; இது ஹாலிவுட்டுக்கு சாத்தியப்படாதது என்கிறார். இந்த பாடலே நமது மண்சார்ந்த கலைகளில் இருந்து தோன்றியதல்லவா! நாம் காலங்காலமாய் பாடியும் ஆடியும் தானே கதை சொல்லி வந்துள்ளோம்! நமது சங்கக் கவிதைகள் கூட கவிதைகள் அல்ல நாடக வடிவம் ஒன்றின் வசனங்கள் என்கிறார் பேராசிரியர் நிர்மல் செல்வமணி.
நமது பரீட்சார்த்தமான படங்கள் உலக சினிமாவை ஒரு மாதிரியாய் கொள்கின்றன. குமாரராஜாவின்ஆரண்ய காண்டம்படத்தை உதாரணம் காட்டலாம். என் கேள்வி நம்மால் இத்தகைய படங்களுக்கு நாட்டுப்புற வடிவங்களில் இருந்து, தமிழ் தொல் கதைகளில் இருந்து ஒரு புது கதைகூறலை, காட்சிமொழியை உருவாக்க முடியுமா என்பது. அப்படி செய்தால் அது தமிழன் கண்டுபிடித்த ஒரு புது பாணியாக ஆகும். இதை வெகுமக்கள் ரசிக்கும்படியாய் செய்தால் ஓரளவு வெற்றி பெறுகிற நடுநிலை படங்களையும் நாம் எடுக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...