முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாசிப்பு தரும் சவால்கள்


வாசிப்பின் சவாலை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் - அ) உணர்வுரீதியான சவால், ஆ) புத்திக்கான சவால்.

நம் உணர்வுகள் முன்னுக்குப் பின் முரணானவை. நல்ல எழுத்து இந்தச் சிக்கலான உணர்வு நிலையைப் படம்பிடிக்கும். உதாரணமாக, லெவ் தல்ஸ்தோய் எழுதிய ‘அன்னா கரனீனா’ நாவலில் அன்னா தன் கணவனையும் குழந்தையையும் உதறிக் காதலனுடன் ஓடிப் போகிறாள். அந்த அளவு அவள் காதல் உக்கிரமானது, உண்மையானது. அவளது காதல் வாழ்வு மிகவும் கொந்தளிப்பாகவும் ஆழமான சுகம் அளிப்பதாகவும் உள்ளது. ஒருநாள் உணவகம் ஒன்றில் அன்னாவும் அவளது காதலனும் ஜாலியாக அன்பாய் பேசிக்கொண்டிருப்பதைக் காணும் ஒருவர் தன் நண்பரிடம் இவ்வாறு கூறுகிறார்: “இந்த உறவு நீண்ட நாள் நீடிக்காது. இவர்கள் விரைவில் பெரும் துயரத்தைத் தழுவுவார்கள்.”


உடனே நண்பர் அது எப்படி, இருவரும்தான் அந்நியோன்யமாய் இருக்கிறார்களே எனக் கேட்கிறார். உடனே இவர் சொல்கிறார், “மிதமிஞ்சிய மகிழ்ச்சியை மனித மனத்தால் தாங்க முடியாது. அது தன்னை அறியாது குற்றவுணர்வு கொள்ளும், உடனே வேதனையையும் சுய அழிவையும் கோரும். மிதமான மகிழ்ச்சியே நீடிக்கும்.”
அவ்வாறே நிகழ்கிறது. குற்றவுணர்வும் மகனைப் பிரிந்த வேதனையையும் அன்னாவை வாட்டுகின்றன. அந்தத் தாம்பத்திய மகிழ்ச்சிக்குத் தான் உகந்தவள் அல்ல என அவளுக்குத் தோன்றுகிறது. அவள் பதறுகிறாள்; தவிக்கிறாள்; அவளால் தன் காதலனை விடவோ, தன் குழந்தையை அடையவோ முடியாது. ஒருகட்டத்தில் அவளது எரிச்சலான நடவடிக்கைகள் தாங்காமல் அவளது காதலனும் அவளிடம் கோபிக்கிறான். அவள் சட்டென முடிவெடுத்து ரயிலுக்குத் தலை கொடுத்து உயிர் விடுகிறாள்.
அன்னா ஏன் அப்படி செய்தாள் எனும் கேள்விக்கு எளிதாய் விடை சொல்லலாம். ஆனால், அந்த விடை திருப்தி அளிக்காது. அது ஒரு மர்மமாகவே நீடிக்கிறது. ஏனெனில் அன்னாவின் மனம் முரண்பட்ட உணர்வுகள் நிரம்பியது. அன்னாவைப் பற்றி எழுதும் தல்ஸ்தோயும் அவ்வளவு முரண்பாடுகளையும் தன் எழுத்தில் கொண்டு வருகிறார். இந்த நாவல் நிச்சயம் உணர்வுரீதியாய் நமக்குச் சவாலானது. நம்மைத் திடுக்கிடவும் குழப்பவும் கண்ணீர் விடவும் செய்வது. நாம் பார்க்கும் மனிதர்களையும் இந்த அளவு சிடுக்குகளுடன் புரிந்துகொள்ளத் தூண்டுவது. ஆகையால், அது நல்ல வாசிப்பு.
புத்திக்குச் சவால் அளிப்பவை எவை என்பது உங்களது புத்திசாலித்தனம், சிந்தனைத் திறன், மற்றும் ஜீரண சக்தியைப் பொறுத்தது.
நமக்குப் புரிகிற ஆனால் முழுக்கப் புரியாத, தெரியாத ஒன்றை ஒரு புத்தகம் சொல்லும்போதே நாம் ஒருவித மனத்திளைப்பை அடைகிறோம். இது உடலுறவு உச்சத்துக்கு இணையானது. எனக்குத் தத்துவ நூல்கள் அப்படி அபாரமான திகைப்பை, திகிலை, பல குழப்பங்களை அளிக்கின்றன. ஒவ்வொரு பத்தியைப் படித்து முடிக்கையிலும் என் புத்திசாலித்தனமும், சிந்தனை ஆழமும் கூடிவிட்டதாய் உணர்கிறேன்.

இக்கட்டுரையை மேலும் வாசிக்க
வாசிப்பு குறித்த செண்டிமெண்ட்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.