முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாசிப்பு தரும் சவால்கள்


வாசிப்பின் சவாலை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் - அ) உணர்வுரீதியான சவால், ஆ) புத்திக்கான சவால்.

நம் உணர்வுகள் முன்னுக்குப் பின் முரணானவை. நல்ல எழுத்து இந்தச் சிக்கலான உணர்வு நிலையைப் படம்பிடிக்கும். உதாரணமாக, லெவ் தல்ஸ்தோய் எழுதிய ‘அன்னா கரனீனா’ நாவலில் அன்னா தன் கணவனையும் குழந்தையையும் உதறிக் காதலனுடன் ஓடிப் போகிறாள். அந்த அளவு அவள் காதல் உக்கிரமானது, உண்மையானது. அவளது காதல் வாழ்வு மிகவும் கொந்தளிப்பாகவும் ஆழமான சுகம் அளிப்பதாகவும் உள்ளது. ஒருநாள் உணவகம் ஒன்றில் அன்னாவும் அவளது காதலனும் ஜாலியாக அன்பாய் பேசிக்கொண்டிருப்பதைக் காணும் ஒருவர் தன் நண்பரிடம் இவ்வாறு கூறுகிறார்: “இந்த உறவு நீண்ட நாள் நீடிக்காது. இவர்கள் விரைவில் பெரும் துயரத்தைத் தழுவுவார்கள்.”


உடனே நண்பர் அது எப்படி, இருவரும்தான் அந்நியோன்யமாய் இருக்கிறார்களே எனக் கேட்கிறார். உடனே இவர் சொல்கிறார், “மிதமிஞ்சிய மகிழ்ச்சியை மனித மனத்தால் தாங்க முடியாது. அது தன்னை அறியாது குற்றவுணர்வு கொள்ளும், உடனே வேதனையையும் சுய அழிவையும் கோரும். மிதமான மகிழ்ச்சியே நீடிக்கும்.”
அவ்வாறே நிகழ்கிறது. குற்றவுணர்வும் மகனைப் பிரிந்த வேதனையையும் அன்னாவை வாட்டுகின்றன. அந்தத் தாம்பத்திய மகிழ்ச்சிக்குத் தான் உகந்தவள் அல்ல என அவளுக்குத் தோன்றுகிறது. அவள் பதறுகிறாள்; தவிக்கிறாள்; அவளால் தன் காதலனை விடவோ, தன் குழந்தையை அடையவோ முடியாது. ஒருகட்டத்தில் அவளது எரிச்சலான நடவடிக்கைகள் தாங்காமல் அவளது காதலனும் அவளிடம் கோபிக்கிறான். அவள் சட்டென முடிவெடுத்து ரயிலுக்குத் தலை கொடுத்து உயிர் விடுகிறாள்.
அன்னா ஏன் அப்படி செய்தாள் எனும் கேள்விக்கு எளிதாய் விடை சொல்லலாம். ஆனால், அந்த விடை திருப்தி அளிக்காது. அது ஒரு மர்மமாகவே நீடிக்கிறது. ஏனெனில் அன்னாவின் மனம் முரண்பட்ட உணர்வுகள் நிரம்பியது. அன்னாவைப் பற்றி எழுதும் தல்ஸ்தோயும் அவ்வளவு முரண்பாடுகளையும் தன் எழுத்தில் கொண்டு வருகிறார். இந்த நாவல் நிச்சயம் உணர்வுரீதியாய் நமக்குச் சவாலானது. நம்மைத் திடுக்கிடவும் குழப்பவும் கண்ணீர் விடவும் செய்வது. நாம் பார்க்கும் மனிதர்களையும் இந்த அளவு சிடுக்குகளுடன் புரிந்துகொள்ளத் தூண்டுவது. ஆகையால், அது நல்ல வாசிப்பு.
புத்திக்குச் சவால் அளிப்பவை எவை என்பது உங்களது புத்திசாலித்தனம், சிந்தனைத் திறன், மற்றும் ஜீரண சக்தியைப் பொறுத்தது.
நமக்குப் புரிகிற ஆனால் முழுக்கப் புரியாத, தெரியாத ஒன்றை ஒரு புத்தகம் சொல்லும்போதே நாம் ஒருவித மனத்திளைப்பை அடைகிறோம். இது உடலுறவு உச்சத்துக்கு இணையானது. எனக்குத் தத்துவ நூல்கள் அப்படி அபாரமான திகைப்பை, திகிலை, பல குழப்பங்களை அளிக்கின்றன. ஒவ்வொரு பத்தியைப் படித்து முடிக்கையிலும் என் புத்திசாலித்தனமும், சிந்தனை ஆழமும் கூடிவிட்டதாய் உணர்கிறேன்.

இக்கட்டுரையை மேலும் வாசிக்க
வாசிப்பு குறித்த செண்டிமெண்ட்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...