முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு புதிய தொடர்


Image result for maniratnam

எனக்கு ரொம்பவே திட்டமிடாமல் போகிற போக்கில் முடிவெடுக்கப் பிடிக்கும். ஒரு கோடை விடுமுறையின் போது அப்படித்தான் புரூஸ் லீ குறித்த நூலை எழுதினேன். அப்படித் தான், பிளாக்கில் ஏதோ கோளாறான போது புது பிளாக் ஆரம்பிக்கும் முயற்சியின் போது கவிதைக்கான ஒரு இணைய இதழை ஆரம்பிக்கும் ஐடியா இடையே வர,  “அட ஏன் செய்யக் கூடாது?” என நினைத்து நண்பர் சர்வோத்தமனின் உதவியுடன் இன்மை இதழை ஒரு வருடம் நடத்தினேன்.

சமீபத்தில் நண்பர் அரவிந்தன் மின்னம்பலம் இதழுக்காக ஒரு தொடர் எழுதக் கேட்டிருந்தார். ஒரு சீரியஸான தலைப்பில் எளிய சுவாரஸ்ய தொடர் எழுதலாம் என்றேன். “லாஜிக் – எளிய அறிமுகம்” அல்லது ஏதாவது ஒரு முக்கிய தத்துவவாதியை அறிமுகப்படுத்துவது என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன். அவருக்கு இந்த தலைப்புகள் பிடித்திருந்தன.  அத்தொடர்களுக்காக குறிப்பெடுக்கவும் துவங்கினேன். இப்போது எழுதி வரும் புத்தகம் முடிந்த பின் துவங்கலாம் என அரவிந்தனிடம் சொன்னேன். இந்த நிலையில் நேற்று ஒரு முக்கிய பத்திரிகையின் சிறப்பிதழுக்காக ரஜினியின் நடிப்பாற்றல் பற்றி ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிடிருந்தேன். அதற்காக “தளபதி” பார்த்துக் கொண்டிருந்த போது அப்படத்தின் திரைமொழியைப் பற்றி தனியாக இன்னொரு பக்கம் எழுதத் தொடங்கினேன். அது விரிவாக சுவாரஸ்யமாய் அமைய, ஏன் இதே போல மணியின் வேறு படங்களையும் ஆராய்ந்து எழுதக் கூடாதெனத் தோன்ற அப்படியே எனக்கு மிகவும் பிடித்தமான மிஷ்கினின் படங்களையும் சேர்த்துக் கொள்ளலாமே என ஆசை வளர்ந்தது. இவர்கள் இருவரின் திரைமொழியைப் பற்றி எழுத எனக்கு என்றுமே விருப்பம் இருந்ததுண்டு, ஆனால் இதுவரை நிகழவில்லை. நேற்று இப்படி ஒன்றை எழுதத் துவங்கி ஒரு புதுத் தொடருக்கான முகாந்திரமாய் அது போய் முடிந்தது. அரவிந்தனிடமும் சொல்லி விட்டேன். ” திரைமொழி: மணிரத்னம் மற்றும் மிஷ்கின்” என இப்போதைக்கு தற்காலிக தலைப்பு.

Image result for mysskin director
தொடர் என்பது ஒரு புத்தகத்தை மூன்று மாதக் காலத்தில் எழுதி முடிக்க ஒரு நல்ல பயிற்சியும் கூட. அதோடு இந்த சாக்கில் நான் மிகவும் விரும்பும் படங்களை மீள மீள பார்ப்பதும் ஒரு சுகம். இத்தொடரில் framing, blocking, ஒளியமைப்பு போன்ற விசயங்களில் கவனம் செலுத்த திட்டம். எப்படி அமைகிறது எனப் பார்ப்போம்.
தொடர் ஆரம்பிப்பது ஒரு புது உறவை ஆரம்பிப்பது போல புத்துணர்ச்சி தரும் காரியம். அதற்கு உங்கள் ஆதரவும் உற்சாகமும் மிக மிக அவசியம். என்னுடன் இருங்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...