முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு புதிய தொடர்


Image result for maniratnam

எனக்கு ரொம்பவே திட்டமிடாமல் போகிற போக்கில் முடிவெடுக்கப் பிடிக்கும். ஒரு கோடை விடுமுறையின் போது அப்படித்தான் புரூஸ் லீ குறித்த நூலை எழுதினேன். அப்படித் தான், பிளாக்கில் ஏதோ கோளாறான போது புது பிளாக் ஆரம்பிக்கும் முயற்சியின் போது கவிதைக்கான ஒரு இணைய இதழை ஆரம்பிக்கும் ஐடியா இடையே வர,  “அட ஏன் செய்யக் கூடாது?” என நினைத்து நண்பர் சர்வோத்தமனின் உதவியுடன் இன்மை இதழை ஒரு வருடம் நடத்தினேன்.

சமீபத்தில் நண்பர் அரவிந்தன் மின்னம்பலம் இதழுக்காக ஒரு தொடர் எழுதக் கேட்டிருந்தார். ஒரு சீரியஸான தலைப்பில் எளிய சுவாரஸ்ய தொடர் எழுதலாம் என்றேன். “லாஜிக் – எளிய அறிமுகம்” அல்லது ஏதாவது ஒரு முக்கிய தத்துவவாதியை அறிமுகப்படுத்துவது என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன். அவருக்கு இந்த தலைப்புகள் பிடித்திருந்தன.  அத்தொடர்களுக்காக குறிப்பெடுக்கவும் துவங்கினேன். இப்போது எழுதி வரும் புத்தகம் முடிந்த பின் துவங்கலாம் என அரவிந்தனிடம் சொன்னேன். இந்த நிலையில் நேற்று ஒரு முக்கிய பத்திரிகையின் சிறப்பிதழுக்காக ரஜினியின் நடிப்பாற்றல் பற்றி ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிடிருந்தேன். அதற்காக “தளபதி” பார்த்துக் கொண்டிருந்த போது அப்படத்தின் திரைமொழியைப் பற்றி தனியாக இன்னொரு பக்கம் எழுதத் தொடங்கினேன். அது விரிவாக சுவாரஸ்யமாய் அமைய, ஏன் இதே போல மணியின் வேறு படங்களையும் ஆராய்ந்து எழுதக் கூடாதெனத் தோன்ற அப்படியே எனக்கு மிகவும் பிடித்தமான மிஷ்கினின் படங்களையும் சேர்த்துக் கொள்ளலாமே என ஆசை வளர்ந்தது. இவர்கள் இருவரின் திரைமொழியைப் பற்றி எழுத எனக்கு என்றுமே விருப்பம் இருந்ததுண்டு, ஆனால் இதுவரை நிகழவில்லை. நேற்று இப்படி ஒன்றை எழுதத் துவங்கி ஒரு புதுத் தொடருக்கான முகாந்திரமாய் அது போய் முடிந்தது. அரவிந்தனிடமும் சொல்லி விட்டேன். ” திரைமொழி: மணிரத்னம் மற்றும் மிஷ்கின்” என இப்போதைக்கு தற்காலிக தலைப்பு.

Image result for mysskin director
தொடர் என்பது ஒரு புத்தகத்தை மூன்று மாதக் காலத்தில் எழுதி முடிக்க ஒரு நல்ல பயிற்சியும் கூட. அதோடு இந்த சாக்கில் நான் மிகவும் விரும்பும் படங்களை மீள மீள பார்ப்பதும் ஒரு சுகம். இத்தொடரில் framing, blocking, ஒளியமைப்பு போன்ற விசயங்களில் கவனம் செலுத்த திட்டம். எப்படி அமைகிறது எனப் பார்ப்போம்.
தொடர் ஆரம்பிப்பது ஒரு புது உறவை ஆரம்பிப்பது போல புத்துணர்ச்சி தரும் காரியம். அதற்கு உங்கள் ஆதரவும் உற்சாகமும் மிக மிக அவசியம். என்னுடன் இருங்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...