ஒருவர் லெஸ்பியனாய் இருப்பதில் தவறில்லை, அப்படி இருப்பதானாலே அவர் சொல்வது பொய்யாகி விடாது. ஆனால் ஒரு சந்தர்பத்தில் பாதிக்கப்பட்ட ஒருவரே மற்றொரு சந்தர்பத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவராக இருக்கலாம் என்பதை இது காட்டுகிறது. எப்படி நானா படேகர் எனும் நடிகர் தனுஷ்ஸ்ரீயை பாலியல் ரீதியாய் துன்புறுத்த வாய்ப்புண்டோ அதே போல தனுஷ்ஸ்ரீயும் ராக்கியை துன்புறுத்த சாத்தியம் உண்டு. நானா படேகரிடம் செயல்படும் ஆணாதிக்கவாதமே தனுஷ்ஸ்ரீயிடமும் செயல்படுகிறது. சொல்லப் போனால், தனுஷ்ஸ்ரீயை விட நானா படேகர் கூடுதல் கண்ணியத்துடனே நடந்திருக்கிறார். அவர் கேங் ரேப் செய்வேன் என்றெல்லாம் தனுஷ்ஸ்ரீயை மிரட்டவில்லையே? மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ய முயலவில்லையே?
1) காயத்ரி சாய்- விஸ்வதர்சினி பிரச்சனை:
காயத்ரி சாய் எனும் நடிகை சமீபத்தில் MeTooவில் பரபரப்பை ஏற்படுத்தினார் – ஒரு மூத்த பத்திரிகையாளர் – ஸ்வாமி - தன் வீட்டுக்கு வந்து தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும் அவரை கண்டித்து தான் வெளியேற்றியதாகவும் அவர் கூறினார். இதை ஸ்வாமி மறுத்தார். அவர் தரப்பு இது: காயத்ரி சாய் அவரது கணவர் எம்.ஆர். சாய்நாத்துடன் ஹாங்காங்கில் வாழ்ந்து வந்தார். சாய்நாத் ஒரு வங்கியில் பணிபுரிந்தார். ஒருநாள் அவர் உடல்நலமின்றி இறந்து போக காயத்ரி கோடிக்கணக்கான காப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து அந்த மரணம் குறித்த சில சந்தேகங்கள் காவல்துறைக்கு எழுந்தது. விசாரணையில் இருந்து தப்பிக்கும் முகமாக காயத்ரி சென்னைக்கு புலம்பெயர்ந்தார். ஸ்வாமி இந்த வழக்கு குறித்து ஒரு புலனாய்வு பத்திரிகையில் எழுத காயத்ரிக்கும் அவருக்குமான உறவு கசந்தது. இதை அடுத்து காயத்ரி MeToo புகாரை தனக்கெதிராய் எழுப்புவதாகவும், தன்னை மிரட்டுவதாகவும் சமரசம் செய்வதற்கு 5 கோடி ரூபாய் கேட்பதாகவும் ஊடகங்களுக்குத் தெரிவிக்கிறார். காயத்ரி ஒரு பிரபலம் அல்லவென்பதால் இந்த வழக்கு தொடர்ந்து மக்கள் கவனத்தில் இருக்கவில்லை. ஆனால் இதைத் தொடர்ந்து நடந்த சில சம்பவங்கள் நாம் கவனிக்க வேண்டியவை. பல பாலியல் வழக்குகள் போலியாய் சமைக்கட்டவையோ எனும் ஐயத்தை எழுப்புபவை.
ஸ்வாமியுடன் இந்த மோதல் ஏற்பட்ட பிறகு காயத்ரிக்கு ஒரு தோழி துணை நின்றார். அவர் பெயர் விஸ்வதர்சினி. இவர் காயத்ரியை அடிக்கடி சந்தித்து சமூக வலைதளங்களில்
இந்த வழக்கை முன்னெடுப்பதற்கான உதவிகளை செய்து வந்தார். பின்னர் ஒருநாள் எக்குத்தப்பான ஒரு சம்பவம் நடந்தது. காயத்ரியின் வீட்டில் இருவரும் இருக்கும் போது
அவர் மது போதையில் விஸ்வதர்சினியிடம் தவறாக நடந்து கொள்ளத் துவங்கினார். விஸ்வதர்சினி மறுத்தும் அவர் அவரை விடவில்லை. தொடர்ந்து அத்துமீறிக் கொண்டே இருந்திருக்கிறார். அங்கிருந்து விஸ்வதர்சினி
கிளம்பி வீட்டுக்கு வந்து அதிர்ச்சியில் குழப்பத்தில் இருக்கையில் போனில் அழைப்பு வருகிறது. காயத்ரி மறுமுனையில். கடும் வசைகளை அவர் தொடர்ந்து பொழிகிறார். எனக்கு இணங்காவிட்டால் உன்னை அழித்து விடுவேன்
என மிரட்டுகிறார். காயத்ரிக்கு மாபியாக்களிடம் தொடர்புண்டு என நினைக்கும் விஸ்வதர்சினி உண்மையிலேயே
பயந்து போகிறார். இதன் பின்னர் அவர் காயத்ரியின் நண்பர்கள் மற்றும் ஸ்வாமியிடம் பேசுகிறார். அப்போதே காயத்ரி பற்றி ஆரம்பத்தில் குறிப்பிட்ட
தகவல்கள், ஐயங்கள், கேள்விகள் அவர் விஸ்வதர்சினியின் பார்வைக்கு வருகின்றன. அவர் தனக்கு நடந்த அநீதி, தன் மீது பாய்ந்த பாலியல் வன்முறை பற்றி பேஸ்புக்
லைவ் கொடுத்தார். இப்போது காயத்ரிக்கு கிடைத்த கவனத்தில் நூறில் ஒரு மடங்கு கூட விஸ்வதர்சினிக்கு
கிடைக்கவில்லை. ஆண் செய்யாத
பட்சத்தில் எந்த பாலீயல் குற்றத்தையும் பொருட்படுத்த தேவையில்லை எனும் நமது பொது சமூகத்தின், ஊடகங்களின், போராளிகளின் அணுகுமுறை தடித்தனமானது.
எனது “MeToo: சில விமர்சனங்கள்” நூலில் இருந்து.
நூலை இணையம் வழி வாங்க:
https://www.udumalai.com/meetoo-vimarsanangal.htm
கருத்துகள்