முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண்கள் பலாத்காரம் செய்தால் (5)

அமெரிக்காவில் திருநங்கை ஒருவரை பலாத்காரம் செய்த்தற்காக கைது செய்யப்பட்ட இரு பெண்கள்



கல்லூரி மாணவிகளின் லெஸ்பியன் பலாத்கார வழக்குகள்:

2005இல் அமெரிக்காவின் மஸச்சூஸட்ஸ் மாகாணத்தில் உள்ள ஸ்மித் கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவி தனது இரு லெஸ்பியன் காதலிகளான ரேச்சல் மற்றும் அகஸ்தாவுடன் அவர்களின் வீட்டுக்கு சென்றார். படுக்கையறையில் மதுவருந்தி விட்டு மூவரும் உடலுறவில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ரேச்சலும் அகஸ்தாவும் அம்மாணவியை கைவிலங்கிட்டு கட்டிப் போட்டு விட்டு பலாத்காரம் செய்தனர். சேடோமெஸோக்கிஸ பாணியில் கன்னத்தில் திரும்பத் திரும்ப அறைந்தனர்; ஒரு பெண் அவளது கால்களை பிடித்துக் கொள்ள இன்னொருவள் அவளது அடிவயிற்றை கத்தியால் கீறியிருக்கிறாள். இதன் பிறகு டில்டோ கொண்டு பிறப்புறுப்பை துளைத்திருக்கிறார்கள். இந்த மாணவி பின்னர் கல்லூரி நிர்வாகத்தினரிடம் புகார் தெரிவித்திட, அவர்கள் காவல்துறையினரை அணுக, வழக்கு சீராக நடந்து ரேச்சல் மற்றும் அகஸ்தாவுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது. இதைப் பற்றி எழுதும் அலெஸ்ஸாண்டிரா எனும் பிளாகர் அக்கல்லூரி லெஸ்பியன்களின் கூடாரம் என்றும், நீண்ட காலமாய் லெஸ்பியன் பலாத்காரங்கள் அங்கு நடைபெற்று வந்ததென்றும், கல்லூரி நிர்வாகம் பல குற்றங்களை லெஸ்பியன் போராளிகளுக்கு அடிபணிந்தும் தமது பெயர் கெடக் கூடாதென்றும் குற்றங்களை மூடி மறைத்து வந்தனர். மேற்சொன்ன குற்றம் தான் முதன்முறையாய் விசாரணைக்குள்ளான லெஸ்பியன் பலாத்காரம்.


மேரி கிளேர் இணையதளத்தில் கோவா பெக் மேலும் பல இத்தகைய வழக்குகளை விவரிக்கிறார். அலைனா எனும் கல்லூரி மாணவி தன் லெஸ்பியன் தோழிகளால் போதை மருந்து கலந்த கொக்கோ கோலா அளிக்கப்பட்டு பலாத்காரம் பண்ணப்பட்டார். அலைனா அதிர்ச்சியில் ஒடுங்கிப் போனார். குற்றம் இழைத்த இப்பெண்கள் பலாத்காரத்தை காணொளி பதிவு செய்திருந்தனர். இதை அவர்கள் லீக் செய்ய, அலைனா பொறுக்க முடியாமல் கல்லூரி நிர்வாகத்தினரை அணுகு புகார் தெரிவித்தார். ஆனால் நிர்வாகமோநீ ஒரு லெஸ்பியனா என்ன?” எனும் மட்டம் தட்டியதுடன் மேற்கொண்டு விசாரிக்க மறுத்து விட்டனர்.

கலிபோர்னியாவை சேர்ந்த சாரா எனும் லெஸ்பியன் தன் தோழியுடன் சேர்ந்து வாழத் தொடங்கினார். ஆரம்பத்தில் இனிமையான இணக்கமாய் இருந்த தோழி பின்னர் மனவியாதி கொண்டவராய் உருக்கொண்டார். தினமும் மிரட்டல், அடி, வன்முறை, வசை என சித்திரவதை. எவ்வளவு செக்ஸ் வைத்துக் கொண்டாலும் அவருக்கு திருப்தி இராது. ஒருநாள் ஸ்டிராப் ஆன் எனும் பெல்டில் பொருத்திய டில்டோவுடன் வந்த அவர் சாராவை பலவந்தம் செய்தார். இருவரும் ஜோடிகள் என்பதால் சாராவை பலாத்காரம் செய்ய தனக்கு உரிமையுண்டு என அவர் நம்பினார். அது மட்டுமல்ல அடுத்த ஆறு மாதங்களும் அவருக்கு பண உதவி செய்யவும் செய்தார். காசு தர மறுத்த போதெல்லாம் அவர் சாராவை அடித்தார். சாரா வீட்டு விட்டு தப்பித்து ஓடிய போது அவர் கத்தியுடன் துரத்தி சென்றார். பிறகு கடன் பெற்று அவரை நார்த் கரோலினாவுக்கு அவர் அனுப்பிய பின்னர் தான் சாரா தப்பித்தார்.

2015இல் பெர்க்லியில் எல்லா எனும் பெண்ணுக்கும் இதே போன்றதொரு பலாத்கார அனுபவம் நடக்கிறது. காதலிக்குப் பதிலாய் எதேச்சையாய் சந்தித்த ஒரு பெண் இவர் விசயத்தில் வில்லி ஆகிறார். வீட்டுக்கு வரும் அவர் வெளியேற மறுக்கிறார். திரும்பத் திரும்ப வந்து பலாத்காரம் பண்ணி விட்டுப் போகிறார். பிறகு ஒரு தோழியின் உதவியுடன் எல்லா இந்த ரேப்பிஸ்டிடம் இருந்து தப்பிக்கிறார்.


எனது “MeToo: சில விமர்சனங்கள்” நூலில் இருந்து.

நூலை இணையம் வழி வாங்க:


https://www.udumalai.com/meetoo-vimarsanangal.htm




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...