
மோகன்லால் எத்தனையோ மட்டமான படங்களில்
நடித்திருக்கிறார். ஆனால் அவற்றை எல்லாம் தூக்கி சாப்பிடும்படியான படம் “லூசிபர்”. சில விசில் பறக்கும் வசனங்கள், ஹீரோயிசம், இயக்குநரின் முத்தாய்ப்பான ஸ்டைலான
அம்சங்கள் உண்டெனிலும் ஒட்டுமொத்தமாய் ஒரு மிகப்பெரிய கொட்டாவி இப்படம்.
திரையரங்களில் எழும் கரவொலியை நான் சினிமாவுக்கானதாய் காணவில்லை -
ஒருவித வறுமை, அலுப்பு அவர்களை ஒரு சின்ன வாய்ப்பு
கிடைத்தால் கூட எழுந்து துள்ள வைக்கிறது. ஒரு மோசமான படத்தின் அறிகுறி என்பது அது
முடியும் போது பார்வையாளர்கள் சின்ன சோம்பலுடன் எழுந்து அரைத்தூக்கத்துடன்
வெளியேறுவது. ஆனால் இந்த தூக்கச் சடவையும் மீறி மக்கள் இப்படத்தை
கொண்டாடுகிறார்கள் என்பதை ஏற்கிறேன். அதுவும் கூட மக்கள் இன்று உணர்ந்து வரும்
பெரிய வறட்சியின் வெளிப்பாடு தான். ஏதாவது லைட்டாய், வண்ணமயமாய் ஸ்டைலாய் கொடுத்தால் அவர்கள் எழுந்து கூச்சல் போட, ஆ ஊ என குதிக்க, அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ள
ஏங்குகிறார்கள். “லூசிபர்” போன்ற படங்களை அப்படியான ஏக்கத்தை
தணிக்கின்றன. 9-5
வேலை செய்து விட்டு எண்ணெய் வடியும்
முகத்துடன் வீட்டுக்கு செல்ல விரும்பாமல் பாருக்கு போய் குடித்து விட்டு காபரே
பார்க்க கிளம்பும் மனநிலை இது. இயக்குநர் பிரித்விராஜ் இதற்காக பெருமைப்பட
ஒன்றுமில்லை. இப்படியான படங்களை எடுப்பதற்குப் பதில் அவர் 24 மணிநேர காபரே கிளப் ஒன்று நடத்துவது
மேல் என்பதே உண்மை. ஒரு மோகன்லால் ரசிகனாய் என்னை அந்தளவுக்கு இப்படம் நோகடித்தது.
இப்படத்தின் கதை என்பது லட்சத்தி
ஓராயிரம் தடவையாய் இந்திய சினிமாவில் காப்பி அடிக்கப்பட்ட அதே காட்ஃபாதர் கதை
தான். மைக்கேலின் பாத்திரத்தில் பாஷாவை பொருத்தினால் வருவது தான் “லூசிபரின்” கதை. நடுநடுவே ஜெயலலிதா மரணம், ராகுல் காந்தி, கேரளாவின் தற்போதைய அரசியல் நிலவரம்
ஆகியவை நினைபடுத்தப்படுகின்றன. இப்படம் முன்வைக்கும் அரசியலும் போதனையும் கூட
குழப்பமானது. ஸ்டீபன் எனும் குரேஸி எனும் லூசிபர் எனும் “மோகன்லால்” ஒரு ஆயுதக் கடத்தல் வியாபாரி என
கடைசியில் தெரிய வருகிறது. பெரிய போதை மருந்து கடத்தல்காரர்களிடம் இருந்து அவர்
கேரளாவை, இந்தியாவை காப்பாற்றுவதே அவரது
ஹீரோயிசம். அப்படி இருக்க, அவர் ஆயுத வியாபாரம்
செய்வதில் ஏற்படும் சேதங்களில் இருந்து உலகை யார் காப்பாற்றுவது? வரவர இப்படியான ஆபத்தான, தீமையும் ஒருவித நன்மையே என போதிக்கும்
படங்கள் அதிகமாய் வருகின்றன. இந்த இயக்குநர்களுக்கு உண்மையிலேயே அறிவில்லையா
அல்லது தெரிந்தே உளறுகிறார்களா?
இறுதியில் பிரித்விராஜ் போன்றோரை கூட
மன்னித்து விடலாம். ஆனால் “லூசிபரை” விழுந்து புரண்டு பாராட்டுபவர்களை ஒரு
நாற்காலியில் கட்டி வைத்து இப்படத்தை 100 முறை தொடர்ந்து
இடைவேளை கூட விடாமல் காட்ட வேண்டும், கதறக் கதற பதற பதற...
Comments
Renga
california