Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

லூசிபர்



 lucifer
மோகன்லால் எத்தனையோ மட்டமான படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவற்றை எல்லாம் தூக்கி சாப்பிடும்படியான படம்லூசிபர்”. சில விசில் பறக்கும் வசனங்கள், ஹீரோயிசம், இயக்குநரின் முத்தாய்ப்பான ஸ்டைலான அம்சங்கள் உண்டெனிலும் ஒட்டுமொத்தமாய் ஒரு மிகப்பெரிய கொட்டாவி இப்படம்.

 திரையரங்களில் எழும் கரவொலியை நான் சினிமாவுக்கானதாய் காணவில்லை - ஒருவித வறுமை, அலுப்பு அவர்களை ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தால் கூட எழுந்து துள்ள வைக்கிறது. ஒரு மோசமான படத்தின் அறிகுறி என்பது அது முடியும் போது பார்வையாளர்கள் சின்ன சோம்பலுடன் எழுந்து அரைத்தூக்கத்துடன் வெளியேறுவது. ஆனால் இந்த தூக்கச் சடவையும் மீறி மக்கள் இப்படத்தை கொண்டாடுகிறார்கள் என்பதை ஏற்கிறேன். அதுவும் கூட மக்கள் இன்று உணர்ந்து வரும் பெரிய வறட்சியின் வெளிப்பாடு தான். ஏதாவது லைட்டாய், வண்ணமயமாய் ஸ்டைலாய் கொடுத்தால் அவர்கள் எழுந்து கூச்சல் போட, ஆ ஊ என குதிக்க, அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ள ஏங்குகிறார்கள்.லூசிபர்போன்ற படங்களை அப்படியான ஏக்கத்தை தணிக்கின்றன. 9-5 வேலை செய்து விட்டு எண்ணெய் வடியும் முகத்துடன் வீட்டுக்கு செல்ல விரும்பாமல் பாருக்கு போய் குடித்து விட்டு காபரே பார்க்க கிளம்பும் மனநிலை இது. இயக்குநர் பிரித்விராஜ் இதற்காக பெருமைப்பட ஒன்றுமில்லை. இப்படியான படங்களை எடுப்பதற்குப் பதில் அவர் 24 மணிநேர காபரே கிளப் ஒன்று நடத்துவது மேல் என்பதே உண்மை. ஒரு மோகன்லால் ரசிகனாய் என்னை அந்தளவுக்கு இப்படம் நோகடித்தது.

இப்படத்தின் கதை என்பது லட்சத்தி ஓராயிரம் தடவையாய் இந்திய சினிமாவில் காப்பி அடிக்கப்பட்ட அதே காட்ஃபாதர் கதை தான். மைக்கேலின் பாத்திரத்தில் பாஷாவை பொருத்தினால் வருவது தான்லூசிபரின்கதை. நடுநடுவே ஜெயலலிதா மரணம், ராகுல் காந்தி, கேரளாவின் தற்போதைய அரசியல் நிலவரம் ஆகியவை நினைபடுத்தப்படுகின்றன. இப்படம் முன்வைக்கும் அரசியலும் போதனையும் கூட குழப்பமானது. ஸ்டீபன் எனும் குரேஸி எனும் லூசிபர் எனும்மோகன்லால்ஒரு ஆயுதக் கடத்தல் வியாபாரி என கடைசியில் தெரிய வருகிறது. பெரிய போதை மருந்து கடத்தல்காரர்களிடம் இருந்து அவர் கேரளாவை, இந்தியாவை காப்பாற்றுவதே அவரது ஹீரோயிசம். அப்படி இருக்க, அவர் ஆயுத வியாபாரம் செய்வதில் ஏற்படும் சேதங்களில் இருந்து உலகை யார் காப்பாற்றுவது? வரவர இப்படியான ஆபத்தான, தீமையும் ஒருவித நன்மையே என போதிக்கும் படங்கள் அதிகமாய் வருகின்றன. இந்த இயக்குநர்களுக்கு உண்மையிலேயே அறிவில்லையா அல்லது தெரிந்தே உளறுகிறார்களா?

இறுதியில் பிரித்விராஜ் போன்றோரை கூட மன்னித்து விடலாம். ஆனால்லூசிபரைவிழுந்து புரண்டு பாராட்டுபவர்களை ஒரு நாற்காலியில் கட்டி வைத்து இப்படத்தை 100 முறை தொடர்ந்து இடைவேளை கூட விடாமல் காட்ட வேண்டும், கதறக் கதற பதற பதற...


Comments

Unknown said…
nice review. you saved me from watching this movie. Recently enjoyed 'Super Deluxe' and me & my wife wept at the final touching scene. Looking forward to your review of that movie. That director comes across to me almost as a karmayogi. what is your take on him and his recent interviews? thanks.
Renga
california

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...