முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லூசிபர்



 lucifer
மோகன்லால் எத்தனையோ மட்டமான படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவற்றை எல்லாம் தூக்கி சாப்பிடும்படியான படம்லூசிபர்”. சில விசில் பறக்கும் வசனங்கள், ஹீரோயிசம், இயக்குநரின் முத்தாய்ப்பான ஸ்டைலான அம்சங்கள் உண்டெனிலும் ஒட்டுமொத்தமாய் ஒரு மிகப்பெரிய கொட்டாவி இப்படம்.

 திரையரங்களில் எழும் கரவொலியை நான் சினிமாவுக்கானதாய் காணவில்லை - ஒருவித வறுமை, அலுப்பு அவர்களை ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தால் கூட எழுந்து துள்ள வைக்கிறது. ஒரு மோசமான படத்தின் அறிகுறி என்பது அது முடியும் போது பார்வையாளர்கள் சின்ன சோம்பலுடன் எழுந்து அரைத்தூக்கத்துடன் வெளியேறுவது. ஆனால் இந்த தூக்கச் சடவையும் மீறி மக்கள் இப்படத்தை கொண்டாடுகிறார்கள் என்பதை ஏற்கிறேன். அதுவும் கூட மக்கள் இன்று உணர்ந்து வரும் பெரிய வறட்சியின் வெளிப்பாடு தான். ஏதாவது லைட்டாய், வண்ணமயமாய் ஸ்டைலாய் கொடுத்தால் அவர்கள் எழுந்து கூச்சல் போட, ஆ ஊ என குதிக்க, அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ள ஏங்குகிறார்கள்.லூசிபர்போன்ற படங்களை அப்படியான ஏக்கத்தை தணிக்கின்றன. 9-5 வேலை செய்து விட்டு எண்ணெய் வடியும் முகத்துடன் வீட்டுக்கு செல்ல விரும்பாமல் பாருக்கு போய் குடித்து விட்டு காபரே பார்க்க கிளம்பும் மனநிலை இது. இயக்குநர் பிரித்விராஜ் இதற்காக பெருமைப்பட ஒன்றுமில்லை. இப்படியான படங்களை எடுப்பதற்குப் பதில் அவர் 24 மணிநேர காபரே கிளப் ஒன்று நடத்துவது மேல் என்பதே உண்மை. ஒரு மோகன்லால் ரசிகனாய் என்னை அந்தளவுக்கு இப்படம் நோகடித்தது.

இப்படத்தின் கதை என்பது லட்சத்தி ஓராயிரம் தடவையாய் இந்திய சினிமாவில் காப்பி அடிக்கப்பட்ட அதே காட்ஃபாதர் கதை தான். மைக்கேலின் பாத்திரத்தில் பாஷாவை பொருத்தினால் வருவது தான்லூசிபரின்கதை. நடுநடுவே ஜெயலலிதா மரணம், ராகுல் காந்தி, கேரளாவின் தற்போதைய அரசியல் நிலவரம் ஆகியவை நினைபடுத்தப்படுகின்றன. இப்படம் முன்வைக்கும் அரசியலும் போதனையும் கூட குழப்பமானது. ஸ்டீபன் எனும் குரேஸி எனும் லூசிபர் எனும்மோகன்லால்ஒரு ஆயுதக் கடத்தல் வியாபாரி என கடைசியில் தெரிய வருகிறது. பெரிய போதை மருந்து கடத்தல்காரர்களிடம் இருந்து அவர் கேரளாவை, இந்தியாவை காப்பாற்றுவதே அவரது ஹீரோயிசம். அப்படி இருக்க, அவர் ஆயுத வியாபாரம் செய்வதில் ஏற்படும் சேதங்களில் இருந்து உலகை யார் காப்பாற்றுவது? வரவர இப்படியான ஆபத்தான, தீமையும் ஒருவித நன்மையே என போதிக்கும் படங்கள் அதிகமாய் வருகின்றன. இந்த இயக்குநர்களுக்கு உண்மையிலேயே அறிவில்லையா அல்லது தெரிந்தே உளறுகிறார்களா?

இறுதியில் பிரித்விராஜ் போன்றோரை கூட மன்னித்து விடலாம். ஆனால்லூசிபரைவிழுந்து புரண்டு பாராட்டுபவர்களை ஒரு நாற்காலியில் கட்டி வைத்து இப்படத்தை 100 முறை தொடர்ந்து இடைவேளை கூட விடாமல் காட்ட வேண்டும், கதறக் கதற பதற பதற...


கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
nice review. you saved me from watching this movie. Recently enjoyed 'Super Deluxe' and me & my wife wept at the final touching scene. Looking forward to your review of that movie. That director comes across to me almost as a karmayogi. what is your take on him and his recent interviews? thanks.
Renga
california

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...