முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லூசிபர்



 lucifer
மோகன்லால் எத்தனையோ மட்டமான படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவற்றை எல்லாம் தூக்கி சாப்பிடும்படியான படம்லூசிபர்”. சில விசில் பறக்கும் வசனங்கள், ஹீரோயிசம், இயக்குநரின் முத்தாய்ப்பான ஸ்டைலான அம்சங்கள் உண்டெனிலும் ஒட்டுமொத்தமாய் ஒரு மிகப்பெரிய கொட்டாவி இப்படம்.

 திரையரங்களில் எழும் கரவொலியை நான் சினிமாவுக்கானதாய் காணவில்லை - ஒருவித வறுமை, அலுப்பு அவர்களை ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தால் கூட எழுந்து துள்ள வைக்கிறது. ஒரு மோசமான படத்தின் அறிகுறி என்பது அது முடியும் போது பார்வையாளர்கள் சின்ன சோம்பலுடன் எழுந்து அரைத்தூக்கத்துடன் வெளியேறுவது. ஆனால் இந்த தூக்கச் சடவையும் மீறி மக்கள் இப்படத்தை கொண்டாடுகிறார்கள் என்பதை ஏற்கிறேன். அதுவும் கூட மக்கள் இன்று உணர்ந்து வரும் பெரிய வறட்சியின் வெளிப்பாடு தான். ஏதாவது லைட்டாய், வண்ணமயமாய் ஸ்டைலாய் கொடுத்தால் அவர்கள் எழுந்து கூச்சல் போட, ஆ ஊ என குதிக்க, அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ள ஏங்குகிறார்கள்.லூசிபர்போன்ற படங்களை அப்படியான ஏக்கத்தை தணிக்கின்றன. 9-5 வேலை செய்து விட்டு எண்ணெய் வடியும் முகத்துடன் வீட்டுக்கு செல்ல விரும்பாமல் பாருக்கு போய் குடித்து விட்டு காபரே பார்க்க கிளம்பும் மனநிலை இது. இயக்குநர் பிரித்விராஜ் இதற்காக பெருமைப்பட ஒன்றுமில்லை. இப்படியான படங்களை எடுப்பதற்குப் பதில் அவர் 24 மணிநேர காபரே கிளப் ஒன்று நடத்துவது மேல் என்பதே உண்மை. ஒரு மோகன்லால் ரசிகனாய் என்னை அந்தளவுக்கு இப்படம் நோகடித்தது.

இப்படத்தின் கதை என்பது லட்சத்தி ஓராயிரம் தடவையாய் இந்திய சினிமாவில் காப்பி அடிக்கப்பட்ட அதே காட்ஃபாதர் கதை தான். மைக்கேலின் பாத்திரத்தில் பாஷாவை பொருத்தினால் வருவது தான்லூசிபரின்கதை. நடுநடுவே ஜெயலலிதா மரணம், ராகுல் காந்தி, கேரளாவின் தற்போதைய அரசியல் நிலவரம் ஆகியவை நினைபடுத்தப்படுகின்றன. இப்படம் முன்வைக்கும் அரசியலும் போதனையும் கூட குழப்பமானது. ஸ்டீபன் எனும் குரேஸி எனும் லூசிபர் எனும்மோகன்லால்ஒரு ஆயுதக் கடத்தல் வியாபாரி என கடைசியில் தெரிய வருகிறது. பெரிய போதை மருந்து கடத்தல்காரர்களிடம் இருந்து அவர் கேரளாவை, இந்தியாவை காப்பாற்றுவதே அவரது ஹீரோயிசம். அப்படி இருக்க, அவர் ஆயுத வியாபாரம் செய்வதில் ஏற்படும் சேதங்களில் இருந்து உலகை யார் காப்பாற்றுவது? வரவர இப்படியான ஆபத்தான, தீமையும் ஒருவித நன்மையே என போதிக்கும் படங்கள் அதிகமாய் வருகின்றன. இந்த இயக்குநர்களுக்கு உண்மையிலேயே அறிவில்லையா அல்லது தெரிந்தே உளறுகிறார்களா?

இறுதியில் பிரித்விராஜ் போன்றோரை கூட மன்னித்து விடலாம். ஆனால்லூசிபரைவிழுந்து புரண்டு பாராட்டுபவர்களை ஒரு நாற்காலியில் கட்டி வைத்து இப்படத்தை 100 முறை தொடர்ந்து இடைவேளை கூட விடாமல் காட்ட வேண்டும், கதறக் கதற பதற பதற...


கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
nice review. you saved me from watching this movie. Recently enjoyed 'Super Deluxe' and me & my wife wept at the final touching scene. Looking forward to your review of that movie. That director comes across to me almost as a karmayogi. what is your take on him and his recent interviews? thanks.
Renga
california

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...