முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மிஷிமா- தற்கொலையும் கலையும் அருகருகே வந்தால்? (1)

எனக்கு வாழ்க்கைக் கதைகளைப் படிக்க எப்போதுமே விருப்பம் இருந்ததுண்டு. அதன் நேர்மை, சுதந்திரம், தீவிரத்தன்மையை சிலநேரம் புனைவினால் கூட அடைய முடியாது. இங்கு நான் ரெண்டாயிரத்தின் பிற்பகுதி வரை கிழக்குப் பதிப்பகம் அதிகமாய் வெளியிட்ட டெம்பிளேட் வாழ்க்கைக் கதைகளையும் குறிப்பிட வேண்டும். நீங்கள் 2-3 மணிநேரங்களில் வேகமாய் சரளமாய் ஒருவரது வாழ்க்கையை அறிய விரும்பினால் இத்தகைய நூல்களை அலமாரியில் இருந்து உருவி 2-மினிட் நூடுல்ஸ் போல உட்கொள்ளலாம். ஒருநாள் மாலைகுருபடம் பார்க்க செல்லுமுன் மதியம் அவசரமாய் கிழக்குப் பதிப்பகம் போய் அம்பானியின் வாழ்க்கைக் கதையை வாங்கி வருகிற வழியிலேயே படித்து படம் துவங்கும் போது சரியாய் கடைசிப் பக்கம் எட்டி, பிறகு அதன் ஒளியில் படத்தைப் பார்த்தது நினைவுள்ளது. சொக்கன் எழுதிய இத்தகைய நூல்கள் அப்போது என் விருப்பப்பட்டியலில் இருந்தன. உதாரணமாய், “சார்லி சாப்ளின்”, “சச்சின்: ஒரு புயலின் பூர்வகதைஆகியவற்றை குறிப்பிடலாம். சந்திரபாபு பற்றி முகில் எழுதியகண்ணீரும் பிரபாகரனும்”, வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை சித்தரிக்கும் செல்லமுத்து குப்புசாமியின்பிரபாகரன்: ஒரு வாழ்க்கைஆகிய நூல்களும் கிழக்கு வெளியிட்ட இந்த வகையான எளிய உணர்ச்சிகரமான வாழ்க்கைக் கதைகளில் உடனடியாய் நினைவுக்கு வருபவை. ஆனால் ஜனரஞ்சக வாசிப்புக்கான இப்படியான நூல்கள் ஆங்கிலத்தில் இன்னும் சிறப்பாய் தகவல் செறிவுடன் அதிகாரபூர்வ ஆவணங்களின் பின்னணியில் எழுதப்படுகின்றன. தமிழில் அப்படியான புத்தகம் எனக் குறிப்பிடுவதானால் சுதாங்கனின்எம்.ஜி.ஆர் கொலைமுயற்சி வழக்கு” (கிழக்கு வெளியீடு) நூலை சொல்லலாம். சுவாரஸ்யமும் வியப்பும் இன்றி இதைப் படிக்க முடியாது. பாரதியார் கவிதைகளின் பதிப்புரிமை மீதான வழக்குகள், அதைச் சுற்றிய போராட்டங்களின் வரலாற்றை ஆர்வமூட்டும் வகையில் பேசும் நூலான . இரா வெங்கடாசலபதியின்பாரதி: கவிஞனும் காப்புரிமையும்நூலை இவ்வகையில் இதை விட நல்ல புத்தகம் என சொல்லலாம்

எஸ்.ராமகிருஷ்ணனின்எனதருமை டால்ஸ்டாய்”, “செகாவ் வாழ்கிறார்போன்ற புத்தகங்கள் புனைவுமொழியில் உணர்வுபூர்வமாய், விமர்சனப்பார்வையுடன் எழுதப்பட்ட வேறுவகை வாழ்க்கைக்கதைகள்.
தொ.மு.சி ரகுநாதனின்புதுமைப்பித்தன் வரலாறுஇந்த வகைமைகளில் சுலபத்தில் மாட்டாத நினைவுக்குறிப்பும் தரவுகளும் கலந்து உருவான மிக நல்ல புத்தகம். மற்றொருவர் குறித்த நினைவுக்குறிப்பு வகைமையில் கமலா புதுமைப்பித்தன் எழுதியபுதுமைப்பித்தனின் சம்சார பந்தம்முக்கியமானது.

வாழ்க்கைக் கதையை எழுதுவது, சில நேரம், பார்வையற்ற ஒருவர் வாகன நெருக்கடி நடுவே சாலையை கடப்பது போல. கொஞ்சம் பிசகினால் ஆபத்து. அதுவும், விமர்சனபூர்வமான வாழ்க்கைக்கதைகளில். அவை புறவயமான வரலாற்றுப் பிரதிகள் அல்ல. எழுத்தாளனின் கற்பனை, அவத்தானிப்பு, அலசல், விவாதங்கள், வரலாற்று ஆவணங்கள் மற்றும் ஆய்வுக்குட்பட்ட ஆளுமையின் தரவுகளுடன் இணைந்து உருவாவதே விமர்சனபூர்வ வாழ்க்கைக் கதை. இதில் 25% புனைவும் விமர்சனமும் இழையோடும். சில அம்சங்கள் சொல்லப்படாமல் அல்லது அதிக கவனம் பெறாமல் போகும். .தா., தமிழில் ஜெயமோகன் கவிஞர் ராஜமார்த்தாண்டனுக்கு எழுதிய அஞ்சலிக் கட்டுரை. மற்றொரு உதாரணம் அவர் சு.ராவின் வாழ்க்கையை (தன் பார்வையில் துண்டுத்துண்டாய் சித்தரித்து) விரிவான இலக்கிய விமர்சனம் மற்றும் தனது பிடிவாதமான நிலைப்பாடுகள் சிலவற்றை முன்னிறுத்தி எழுதியசு.ரா: நினைவின் நதியில்நூலும் முக்கியமானது. ஜி.நாகராஜன் பற்றிய சு.ரா மற்றும் சி.மோகனின் நினைவுக்குறிப்புகள் மற்றும் சுருக்கமான வாழ்க்கைக் கதைகள், மற்றும் கிருஷ்ணன் நம்பி பற்றின சு.ராவின் குறுநூல் ஆகியவற்றில் விமர்சனம் மிக மெல்லியதாய், கண்ணுக்குப் படாதபடி இழையோடும். நான் புரூஸ் குறித்து எழுதிய நூல்சண்டையிடாத சண்டை வீரன்நிச்சயம் விமர்சனபூர்வ வாழ்க்கைக்கதையே

இந்த விமர்சன பூர்வ வாழ்க்கைக் கதை பின்புலத்தில் நான் இங்கு அறிமுகப்படுத்த விரும்பும் ஒரு ஆங்கில நூல் டேமியன் பிளானகன் எழுதிய “Yukio Mishima”.
 Reaction Books பதிப்பகத்தின் Critical Series எனும் வரிசையில் இந்நூல் வருகிறது. இதே வரிசையில் சார்த்தர், தஸ்தாவஸ்கி, பூக்கோ, ஜேம்ஸ் ஜாய்ஸ் ஆகியோர் குறித்த சில நூல்கள் வந்துள்ளன. நான் இவ்வருடம் படித்த மிகச்சிறந்த நூல் இது தான் எனப் படுகிறது. வரலாற்றுபூர்வ பிசிறற்ற ஆய்வு பின்புலம், மிஷிமாவின் இலக்கிய பங்களிப்பு குறித்த சரியான புரிதல், ஆழமான உளவியல் பார்வை, லேசான தத்துவ தொனி ஆகியவை இந்நூலின் சிறப்பம்சங்கள். இவற்றை விட முக்கியமாய் பரபரவென போகும் எழுத்து நடை, வாழ்க்கைக் கதையை பலவீனப்படுத்தும் தகவல்பூர்வ தொகுப்புகளை சரளமாய் கோர்வையாய் தொகுத்துள்ள விதம், விடாமல் பற்றி நெளிந்து போகும் காட்டுத் தீ போன்ற ஒரு மொழி இந்நூலை

 ஒரு நல்ல நாவலுக்கு கிட்டத்தட்ட இணையாக கருத வைக்கின்றன. உளவியல் பரிச்சயம் உள்ளவர்களுக்கு இந்நூல் இன்னும் சுவாரஸ்யம் தரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...