முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐந்து வருடக் கணக்கு



என் வெளிவாழ்க்கையை (கல்வி, வேலை, எழுத்து, வாய்ப்புகள், முன்னேற்றம், புகழ்) பொறுத்தமட்டில் ஒரு ஐந்து வருடக் கணக்கு இருக்கிறது என நினைக்கிறேன் - சில வருடங்கள் பிடிக்காத விசயங்களை பல்லைக் கடித்த படி சகிக்க வேண்டி இருக்கும். முயற்சிகளுக்கு பலன் பெரிதாய் இருக்காது. முக்கியமாக ஏதோ சிறையில் அடைபட்ட உணர்வு இருக்கும். விருப்பமில்லாத ஆட்களுடன் விருப்பமில்லாத வகையில் வேலை செய்ய வேண்டி இருக்கும். அல்லது எந்திரத்தனமாய் ஒரு சின்ன அடி கூட மாற்றி வைக்க முடியாத செக்கிழுக்கும் வேளையாக இருக்கும். எந்த திசையிலும் தப்பிச் செல்ல வாய்ப்பிருக்காது. எதிர்காலத்தில் மாற்றம் வரும் என்பதே என்னை அப்போது தக்க வைக்கும் சிந்தனையாக இருக்கும்.


பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான ஒரு ஐந்து வருடங்கள் எனக்கு அப்படி அமைந்தன. அதன் பிறகு கல்லூரிக்கு படிக்க சென்றதுமே அத்தனைக் காலமும் அடக்கி வைத்திருந்த உற்சாகம் பீறிட்டுக் கிளம்பியது. தினம் தினம் வண்ணமயமானது. நிறைய புது மனிதர்களை சந்திக்க புது அனுபவங்களை அடைய முடிந்தது. அந்த ஐந்து வருடங்கள் முடிந்த பின் மீண்டும் நான் ஐந்து வருடங்கள் செக்கில் மாட்டிக் கொண்டேன். தினமும் எழுத முயல்வேன். ஆனால் பதிப்பிக்க வாய்ப்போ தன்னம்பிக்கையோ இராது. வேலையிலும் நிம்மதியோ திருப்தியோ இராது. தேவையில்லாமல் தொடர்ந்து தவறான முடிவுகள் எடுத்து தவறான வேலையிடங்களில் மாட்டி அழிவேன். அதன் பிறகு ஒருநாள் என் அதிர்ஷ்டம் மாறியது. நிறைய எழுத, பிரசுரிக்க ஆரம்பித்தேன். வேலையை மாற்றினேன். எம்.பில், முனைவர் பட்ட ஆய்வு என சேர்ந்தேன். புத்தகங்கள் வெளியிட்டேன். டிவி ஊடகத்தில் அதிகம் பங்கு பெற்றேன். வாழ்க்கை ரொம்ப பரபரப்பாகியது. நிறைய புது நண்பர்களை ஒவ்வொரு வாரமும் சந்தித்தேன். முந்தின ஐந்து வருடங்கள் எழுத முடியாததற்கு சேர்த்து இப்போது இரவு முழுக்க தூங்காமல் எழுதினேன். எதைத் தொட்டாலும் துலங்கியது. சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் கிடைத்தது. மூன்று நாவல்கள் உள்ளிட்டு பதினெட்டு புத்தகங்கள் எழுதினேன். நான் என் கால் நூற்றாண்டு வாழ்க்கையில் விரும்பின அனைத்தையும் கூடுதலாகவே அடைந்தேன். இந்த முறை ஐந்து வருடங்கள் கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக நீடித்தது. அடுத்து மீண்டும் என் வாழ்க்கை செக்குக்கு திரும்பியது.
இப்போது எழுத்திலோ வேலையிலோ புதிதாக எதையும் செய்வதில்லை, சவால்கள் இல்லை, புதுமை இல்லை, அதே ஒரு சில பேரை திரும்பத் திரும்பப் பார்த்து பேசி அவர்களுடனே முரண்பட்டு ஒன்றுபட்டு அழுது சிரித்து ஒரு துளி அழுக்கு நீரில் அடைபட்ட பாக்டீரியா போல ஒரு வாழ்க்கை. புதுப்புதிதாய் சந்திக்க யாருமில்லை. (நிறைய மாணவர்கள் வந்து போனாலும் அவர்களுடன் நட்பு பாராட்ட முடியாதே). ஊடகத்தில் பங்கேற்க முடியாது. என் மண்ணில் நடக்கிற எதனோடு பங்குபெற, நேரடியாய் உணர, அறிய முடியாது. இலக்கிய கூட்டங்கள் இல்லை, உரையாடல்கள் இல்லை. என் எழுத்திலும் மிக வித்தியாசமாக சவாலாய் எதையும் செய்வதில்லையே எனும் வருத்தமும் உண்டு. எவ்வளவு முயன்றாலும் நான்காவது நாவலை எழுதி முடிக்க முடியவில்லை. நாவல் என்றில்லை நீண்ட கால உழைப்பை கோரும் எந்த புத்தகத்திலும் ஈடுபடும் திறனை இழந்து விட்டது போல இருக்கிறது. இரண்டரை வருடங்கள் ஓடி விட்டன. மேற்சொன்ன கணக்குப்படி அடுத்த இரண்டரை ஆண்டுகளில் என் வாழ்க்கையில் மீண்டும் ஒரு மலர்ச்சி, வசந்தம், விடுதலை வர வேண்டும்
அதுவரை நான் நம்பிக்கை இழக்காமல், முனைப்புடன் இருக்க வேண்டும். இந்த வறட்சிக் காலத்தில் பண்ண முடிகிற வேலைகளை ஒழுங்காக செய்ய வேண்டும்.

நண்பர்களே! இப்படியான சில வருட சுழற்சி உங்களது வாழ்விலும் உண்டா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...