முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புத்தக வெளியீடும் மணமேடையும்



புத்தக விற்பனையே / அதிக வாசகர்களை அடைவதே உங்கள் இலக்கு எனில் வெளியீடே அவசியம் இல்லை என நினைக்கிறேன்.

 எண்பது, தொண்ணூறுகளில் அவை நடக்கவில்லையே. நல்ல புத்தகங்கள் எப்படியும் வாசகனை அடையும். ஜெ.ஜெ சில குறிப்புகள் நாவல் காஸ்மோபொலிட்டன் கிளப்பில் / தேவநேயப்பாவாணர் அரங்கில் வெளியிடப்பட்டதா?  இல்லையே. இருந்தும் அது இலக்கிய வாசகரிடத்தில் கவனம் பெற்றது. பரவலாக வாசிக்கப்பட்டது.
இன்று வெளியீட்டின் படோடத்தால் உடனடி கவனம் கிடைக்கலாம். ஆனால் அதுவும் அவசியம் அல்ல. இமயத்தின் நாவல்களைப் பாருங்கள். அவை இப்படி வெளியிடப்படாமலே வாசகனை அடைகின்றன. 
நான் சில வெளியீடுகளில் ஐநூறு பேருக்கு மேல் வருவதை ஆனால் கூட்டம் முடியும் போது பத்து புத்தகங்களுக்கு மேல் விற்காததைப் பார்த்திருக்கிறேன். இதன் அர்த்தமெல்லாம் என்ன? 
எழுத்தாளனுக்கு ஆர்வமும் ஆற்றலும் இருந்தால் தொடர்ந்து தன் நூலை முகநூலில் விளம்பரம் பண்ணலாம், அதனால் கூடுதல் புத்தகங்கள் விற்கும். அதனோடு ஒப்பிடுகையில் பெரிய எழுத்தாளர்களை, பேச்சாளர்களைக் கொணர்ந்து புத்தகத்தைப் பற்றி பேச வைப்பதெல்லாம் வீண்! அவர்களின் பேச்சை எழுதி வாங்கி வெளியிட்டால் கூடுதல் விற்பனையாகும். மற்றொரு நல்ல விளம்பரம் விருதுகள் - காலச்சுவடு, உயிர்மை, விகடன், அகாடெமி என எல்லா விருதுகளும் ஊடகத்தில் கவனப்படுத்தப்பட்டால் விற்பனை பெருகும்.
இவ்வளவும் தெரிந்திருந்தும்
நான் என்னுடைய புத்தகங்களுக்கு வெளியீடுகள் நடத்தி இருக்கிறேன்; அண்மையில் நான் கொணர்ந்த மூன்று ஆங்கில நூல்களுக்கு பல்கலைக்கழக வளாகத்துக்கு உள்ளேயே வெளியீடு நடத்தினேன். ஹைடெக்கர் புத்தகத்துக்கு சற்று பிரம்மாண்டமாகவே வெளியீடு நடத்தினேன். ஏன்?
வெளியீடுகள் புத்தக விற்பனைக்கானவை அல்ல; எழுத்தாளன் கவனப்படுவதற்கானவை அவை. அதனால் தான் அவன் மேடையில் ஏற்றப்படுகிறான். அவனுக்கு தன் வெளியில், உள்வட்டத்தில் ஒரு அங்கீகாரம் இதனால் கிடைக்கிறது.

 நான் இந்த வெளியீடுகளை மணமேடையுடன் ஒப்புடுவேன்.
 கணவன்/மனைவி அங்கீகாரம் போல ஒன்று எழுத்தாளனுக்கும் இங்கு கிடைக்கிறது. பேச்சாளர் அவனுக்குத் தாலி கட்டுகிறார். அவன் குனிந்து பணிவன்புடன் அதை ஏற்கிறான். நன்றி நவிலுகிறான். பார்வையாளர்கள் கைதட்டி பூத்தூவுகிறார்கள். இது முடிந்த பின் விருந்து இல்லை என்பதால் அவர்கள் மொய் எழுதாமல் போய் விடுகிறார்கள். நிகழ்ச்சி முடிந்த பின் எழுத்தாளனும் அவன் புத்தகமும் தனித்து விடப்படுகிறார்கள். அதைத் தழுவியபடி அவன் அன்றிரவு களைப்புடன் உறங்கிப் போகிறான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...