முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Dissent கருத்தரங்கு


Dissent (எதிர்ப்போக்கு) கருத்தரங்கு நாளை மறுநாள் எங்கள் பல்கலையில் நடக்கிறது. நாடக இயக்குநரும் பெண்ணியவாதியுமான மங்கை அரசு சிறப்புரை வழங்குகிறார்.
 அதன் பிறகு இரண்டு விவாத அரங்குகள் - ஒன்று, மாற்றுத்திறனாளிகள் பற்றியது; அதில் மாற்றுத்திறனாளிகள் குறித்து எழுதியும் போராடியும் வரும் கல்வியாளர்களான ஷில்பா ஆனந்த், மீனு பம்பானி ஆகியோருடன் நானும் பங்கேற்கிறேன். இந்த கருத்தரங்கை நான் ஒருங்கிணைக்கிறேன் என்பதால் எந்த அரங்கிலும் தனியாகப் பேச வேண்டாம் எனத் தான் நினைத்தேன். ஆனால் பாருங்கள் அரங்கில் பேச மாற்றுத்திறனாளி படைப்பாளிகள் யாரும் கிடைக்கவில்லை. சரி போகட்டும் எனக்கு கொஞ்சம் கூட்டத்துடன் நானே ஒரு பங்கேற்பாளனாகி விட்டேன். என்னுடையகால்கள்நாவல் குறித்து, ஒருவர் சொந்த பிரச்சனையை புனைவில் கொண்டு வருவதன் சிக்கல்கள் பற்றி பேசலாம் என இருக்கிறேன். இந்த அரங்கை பேராசிரியர் சந்தோஷ் நெறியாள்கை செய்கிறார்; அவர் எங்கள் பல்கலையில் மாற்றுத்திறனாளிகள் இலக்கியம் பற்றி வகுப்பெடுப்பவர்
அடுத்த விவாத அரங்கு தலித் சினிமா குறித்து - இதில் ஸ்டாலின் ராஜாங்கம், திவ்ய பாரதி (கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர்) மற்றும் பேராசிரியர் அருள் மணி (சினிமா ஆய்வாளர்) கலந்து கொள்கிறார்கள். தலித் நாடகங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் ஜோஷ்வா நெறியாள்கை செய்கிறார்.

இந்த இரு அரங்குகளும் முடிந்த பிறகு மதிய உணவு. மில்லெட் மாமா எனப்படும் சிறுதானிய உணவகம் ஒன்றினால் இது அளிக்கப்படுகிறது - சுவையான ஆரோக்கியமான அட்டகாசமான சாப்பாடு

மதியம் ஒன்றரை முதல் ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்படும். சுமார் நாற்பது கட்டுரைகள் - தத்துவம், சினிமா, ஊடகம், நாடகம், ஓவியம், சமூகம், அரசியல், பாலினம், மாற்றுத்திறனாளிகள், இலக்கியம், இசை, சூழலியல் என பல்வேறு தலைப்புகளில் இந்த ஆய்வுக்கட்டுரை அரங்குகளைப் பிரித்திருக்கிறோம்; இந்த அரங்குகள் நான்கு இடங்களில் ஒரே சமயம் நடக்கின்றன. ஆழமான வித்தியாசமான பல கட்டுரைகள் வந்திருக்கின்றன. உதாரணமாக டேவிட் வெஸ்லி வடிவேலுவின் உடல்மொழி குறித்து எழுதியுள்ள கட்டுரையை சொல்லலாம். Standup comedy, விளையாட்டு பற்றி சினிமாவில் பயிற்சியாளரின் அதிகாரம் செயல்படுவது, பெண்ணியத்தை தெரிதாவின் கண்ணோட்டத்தில் அலசுவது போன்ற புதுமையான விசயங்களைப் பேசும் கட்டுரைகள் சிலவற்றையும் குறிப்பிடலாம். நான் நாகார்ஜுனரின் பௌத்த தத்துவம் (மாயாவாதம்) பற்றி ஒரு கட்டுரை வாசிக்கிறேன். நாலே முக்காலுக்கு கருத்தரங்கு முடிவுக்கு வருகிறது.


  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...