முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மோடியின் சமூக அழுத்த அரசியல்



இன்று பாரதப் பிரதமர் கேட்டுக் கொண்டதைப் போல சரியாக ஒன்பது மணிக்கு தெருவிளக்குகளை அணைத்து விட்டார்கள். தெருவில் எங்கள் வீட்டில் மட்டும் தான் விளக்கு எரிந்தது. சுற்றத்தினர் அனைவரும் கொரோனா எதிர்ப்பு முகமாக போன் ஒளியைக் காட்டுவதை, மெழுகுவர்த்தியை பால்கனியை எரிய வைத்துள்ளதைக் கண்ட போது, என் பக்கத்து வீட்டு சேட்டுநீங்க ஏன் விளக்கை அணைக்கல?’ என கோபமாகக் கேட்ட போது எனக்கு ஒன்று தோன்றியது - இவர்கள் எலலாரும் மோடியுடன் உடன்படாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் தம் சுற்றத்தினரிடம் இருந்து தனிமைப்பட விரும்பவில்லை.

 எப்படி பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன? மக்களின் விருப்பத்தினாலா? அல்ல சமூக அழுத்ததினால். என் பக்கத்து வீட்டுக்காரன், உறவுக்காரர்கள், நண்பர்கள் தீபாவளிக்கு புதுத்துணி எடுத்து, கறி சமைத்து, இனிப்பு செய்து சாப்பிட்டு, பட்டாசு வெடிக்கும் போது நான் அதையெல்லாம் செய்யாமல் இருந்தால் சமூக வெளியேற்றம் செய்யப்பட்டதாக உணர்வேன். இப்போது நானும் அவர்களுடன் கலந்து கொள்கிறேன். தீபாவளி எவ்வளவு மகிழ்ச்சியான கொண்டாட்டம் என எனக்குத் தோன்றுகிறது. ஆனால் நான் ஒன்றைப் புரிந்து கொள்வதில்லை - அது தீபாவளிக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி அல்ல, அதுதீபாவளிக் கொண்டாட்டம் மகிழ்ச்சியானதுஎன நினைப்பதன் சந்தோஷம். அதை என் செயலின் மூலம் ஒரு சமூக மனிதனாக நான் அறிவதன் மகிழ்ச்சி. மகிழ்ச்சியில் கலந்து கொள்கிற மகிழ்ச்சி. மனிதனால் பிறர் செய்வதை தானும் செய்யாதிருக்க முடியாது, அவன் என்னதான் அதற்காக பெருமுயற்சிகள் எடுத்தாலும்.
 தீபாவளிக் கொண்டாட்டத்தைப் போல மோடி இந்த கொரோனா கொண்டாட்டத்தை உண்டு பண்ணி நமக்கு அளிக்கிறார். கொண்டாடுவதோ மறுப்பதோ உங்கள் விருப்பம் என அவர் வாய்ப்பளித்தாலும் உண்மையில் அந்த வாய்ப்பு இச்சூழலில் இருப்பதில்லை என அவர் ஏற்கனவே அறிவார்.
 இந்த ஒன்பது நிமிட விவகாரம் ஒரு பெரிய சமூக அழுத்தத்தை உண்டு பண்ணினதில் பலருக்கும் பிடிக்கிறதோ இல்லையோ அதை செய்து விட்டார்கள். குடியுரிமை சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறவர்கள் கூட. சில இஸ்லாமிய நண்பர்கள் முழுகுவர்த்திகளைக் கொளுத்தி படம் எடுத்து முகநூலில் பகிர்வதைக் கண்டேன். அவர்களும் தாம் தனித்து விடப்படுவோமா என அஞ்சுகிறார்கள். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிகமாய் எதிர்-முகாமுக்கு தாவிட, கொண்டாட்டத்தில் திளைக்க இது வாய்ப்பு தானே. போனஸாக தேசபக்தியையும் நிரூபிக்கலாம். தீபாவளியின் போது அது முடியுமா சொல்லுங்கள்?

என்னதான் சொன்னாலும் மோடி ஒரு மேதை தான்! போகிற போக்கில் ஒன்பது நிமிட சமூகக்கொண்டாடங்களைக் கண்டுபிடிக்கிற, அதில் இவ்வளவு மகிழ்ச்சியை மக்களுக்கு உறுதிபடுத்துகிற, தேசபக்தி, சமூக ஒத்துழைப்பு ஆகிய அர்த்தங்களை அந்த சடங்கின் மூலம் உணர வைக்கிற மேதை. இந்திய வரலாற்றிலே வேறெவரும் இதைப் போல செய்ததில்லை.

கருத்துகள்

sivan இவ்வாறு கூறியுள்ளார்…
insightful articles. good. Sivakumar N

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...