Skip to main content

அன்வர் ரஷீதின் Trance



இந்நேரம் அன்வர் ரஷீத் இயக்கத்தில் வெளியான “Trance” படத்தை கன்னாபின்னாவெனப் பாராட்டுகிற பல பேஸ்புக் பதிவுகளை படித்திருப்பீர்கள். ஆனால் நானும் இவர்களுடன் சேர்ந்து அல்லேயுயா எனக் கூவாமல் உண்மையை சொல்லி விடுகிறேன் - இப்படம் சுவாரஸ்யமானது, ஆனால் அதன் திரைக்கதை பிழையானது. மிகப்பெரிய ஓட்டை திரைக்கதையில் இருப்பதாலே அதன் இரண்டாம் பகுதி ரசிகர்களுக்கு அலுப்பூட்டுகிறது, புத்திசாலித்தனமான கிளைமேக்ஸ் மனதைத் தொடாமல் போகிறது.


டிரான்ஸ்மல்டி மில்லியன் ஜெபக்கூட்ட கார்ப்பரேட் அமைப்புகளை பகடி செய்யும், அம்பலப்படுத்தும் படம். நம்மூரில் சொல்வதானால் பால் தினகரனைப் போன்றோரை போலிகளாக சித்தரிக்க முயல்கிறது. “காதலா காதலாபடத்தில் போதகர் ஒருவர் முடமானவரை ஆண்டவர் குணப்படுத்துவதாய் நாடகம் போட்டு மக்களை ஏமாற்றும் காட்சி வரும். அதன் படோபமான ஒருமணி நேர நீட்சி தான்டிரான்ஸின்முதல் பாதி.
 அவநம்பிக்கைகளின் அழுத்தம் தாளாமல் போகும் ஒருவன் என்ன செய்வான்? ஒன்று, நொறுங்கிப் போய் அழிவான். அல்லது எதிர்முனைக்கு சென்று சென்று தன்னம்பிக்கையை போலியாக உண்டுபண்ணி அதனால் மேலெழலாம் என நினைப்பான். அடுத்து, அவன் இதையே மற்றவர்களுக்கும் போதிக்க எண்ணுவான். ஒரு தன்னம்பிக்கை போதகராக விரும்புவான். எப்படி பல மனநல மருத்துவர்கள் மனச்சிக்கல்களுடன் இருக்கிறார்களோ அப்படியே பாஸிட்டிங் சிந்தனை பற்றி பிரஸ்தாபிக்கும் வெற்றிச்சிந்தனையாளர்களும் தோல்வியைக் கண்டு ஓடுகிறவர்களே. பகத் பாஸிலின் விஜு பாத்திரம் இப்படியான ஒருவனே.

 அவனது வாழ்வில் அம்மா மற்றும் தம்பியின் தற்கொலைகள் அடுத்தடுத்து அவனை மனச்சோர்வுக்கு தள்ளுகின்றன. ஆனாலும் அவன் துணிச்சலுடன் மீண்டு வருகிறான். அவனது போலித்தனத்துக்கு மத்தியில் இந்த நிஜ உயிர்த்துடிப்பான ஆளுமை நிஜமானது. நம்மை ஈர்ப்பது. முதல் இருபது நிமிடங்களில் வரும் இந்த கதாபாத்திரத்தை நிறுவும் காட்சிகள் அழகானவை. அடுத்து ஒரு பெரும் கார்ப்பரேட் நிறுவனம் அவனை வேலைக்கெடுத்து பாஸ்டர் ஜோஷ்வா கார்ல்டனாக உருமாற்றுகிறார்கள். பாஸ்டர் ஜோஷ்வாவாக அவன் உலகப்புகழ் அடைகிறான். நிறைய பணம் சம்பாதிக்கிறான். அவனது மனநிலை சீரழிந்து அவன் தளர்ந்திடாதிருக்கும் பொருட்டு கார்ப்பரேட் நிறுவன முதலாளிகள் அவனுக்கு போதை மாத்திரைகளை அளிக்கிறார்கள். அவனது மனநிலையை இது முழுமையாக சீரழிக்கத் தொடங்குகிறது. அவன் தன்னை மெல்ல மெல்ல கடவுளாக நினைக்கத் தொடங்குகிறான்
டிரான்ஸில்இந்த பகுதி - கார்ப்பரேட் நிறுவனத்துக்குள் அவன் பாஸ்டராக பயிற்சி பெறும் பகுதிதான் சுவாரஸ்யமானது. ஆனால் இதுதான் திரைக்கதையின் பெரிய ஓட்டையாகவும் உள்ளது. இது கதையை மற்றொரு டிராக்கில் இழுத்து சென்று விடுகிறது. அந்த ஓட்டை என்ன?
ஒரு திரைக்கதையின் மையப்பாத்திரமான ஹீரோவுக்கு என்று ஒரு தேவை, விழைவு, நோக்கம் இருக்கும், அதுவே கிளைமேக்ஸில் நிறைவுபெறும் என ராபர்ட் மெக்கீ சொல்கிறார். இந்த படத்தின் ஹீரோவுக்கு அது தன்னுடைய துயரங்களில் இருந்து விடுதலை பெற்று, புகழடைந்து வாழ்வில் மேம்படுவது. படத்தின் இறுதி வரை அவன் முழுமையாக இந்த இலக்கை அடைவதோ அதற்காக முயல்வதோ இல்லை. பாஸ்டர் ஆன பின்னர் அவன் தன்னை மறந்து ஒரு போலியான பிரச்சாரகன் ஆகிறான், அப்போது அவன் இலக்கு தன் நிறுவனத்தின் போலித்தனங்களை உணர்ந்து அவற்றை அம்பலப்படுத்துவதாகிறது. இது ஆரம்ப பகுதியில் வரும் அவனது தேவையில் (துன்பத்தில் இருந்து விடுபட்டு வாழ்வில் புகழடைய வேண்டும்) இருந்து முரணாகிறது. ஒரு கட்டத்தில் இந்த படம் எதைப் பேசுகிறது, நாயகனுக்கு என்னதான் வேண்டும் எனும் குழப்பம் நமக்கு ஏற்படுகிறது. அதே போல கிளைமேக்ஸில் நமது ஹீரோ முதிர்ச்சியடைகிறாரா அல்லது பைத்தியமாகத்தான் எஞ்சுகிறாரா என்பதிலும் தெளிவில்லை. இது தான் அந்த பெரிய ஓட்டை. இதனால் தான் இப்படம் பெரிய அளவில் வணிக வெற்றி பெறவில்லை என நினைக்கிறேன்

இதையும் மீறி மூன்று விசயங்களுக்காக இப்படத்தைக் கொண்டாடலாம்
1) பகத் பாஸிலின் அபாரமான நடிப்பு.
2) நவீன காலத்தில் மதம் ஒரு மிகப்பெரிய போதைப்பொருளாக மாற்றப்படுவதை இப்படம் பேசுவது.
3) காட்சி மொழி - துவக்கத்தில் இருந்தே உருவகமாக வண்ண மீன்கள் வருகின்றன. தன் அம்மா இறந்த பின் தம்பிக்கு மனம் பிசகிட அவனை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு வேலை செய்ய புறப்படுகிறான் சின்ன வயது நாயகன். அப்போது தம்பி ஜன்னலைப் பற்றிக் கொண்டு கத்த அண்ணன் வண்ண மீன்களை பிளாஸ்டிக் பையில் கொண்டு வந்து காட்டி அவனை மகிழ்ச்சிப்படுத்துகிறான். படம் முழுக்க இப்படி வண்ண மீன்கள் வந்து கொண்டே இருக்கின்றன - செயற்கையான பாதுகாப்புக்குள், போலியான நம்பிக்கைகளுக்குள் மனிதனை பூட்டி வைப்பதற்கான உருவகமாக. தம்பியை முதலில் விஜு ஒரு வண்ணமீனாகப் பூட்டி வைக்கிறான். அடுத்து விஜுவை அந்த கார்ப்பரேட் நிறுவனம் பாஸ்டராக்கி வண்ணமீனாக்குகிறார்கள். இறுதியில் நாயகி ஆம்ஸ்டர்டாமில் கண்ணாடிக்குள் இருந்து உடலைக்காட்டி சம்பாதிக்கும் அழகியாக வேலை செய்கிறாள் என குறிப்பாகக் காட்டுகிறார்கள். அவளை அங்கு அவன் காண செல்லும் போது அவள் ஓடி வந்து (தன் விடுதலையை குறிக்கும் வண்ணம்) ஒரு கண்ணாடியை ஓங்கிக் குத்தி உடைக்கிறாள். அத்துடன் படம் முடிகிறது. அது அவள் தனது கண்ணாடிக்குடுவை உடைத்து வெளிவந்து விட்டாள் என்பதை காட்சிவழியாக காட்டுகிறது. இந்த காட்சிபூர்வமான சரடு ரசிக்கத்தக்க ஒன்று.  

படத்தின் உருவாக்கத்திலும் நடிப்பிலும் செலுத்திய அக்கறையை திரைக்கதையை நேர்த்தியாக்குவதிலும் செலுத்தி இருந்தால் இது ஒரு கிளாசிக் ஆகியிருக்கும்.

Comments

Sivakumar said…
As per the article, the screenplay is flawed since the motive or the purpose of the hero (becoming rich and popular) is not in line with his final act of exposing the villain gang. But the same seems to happen in Mudhalvan too, where the hero was never interested in becoming a CM nor doing social services. He is just a common man contended with his job and family right? Did not we see it as a transformation and root for him?

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...