முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் (3)

ரஷ்ய விமர்சகர் பக்தின்

நான் இங்கு விவாதித்து நிறுவ முயல்வது அத்தனையும் ஏற்கனவே நமது தத்துவ மரபில் இருக்கிறது. ஒருவேளை ஜெ.மோ, போகன் மற்றும் அவர்களை ஒத்த பிறரும் மேற்கத்திய லௌகீக, விஞ்ஞானபூர்வ மரபினால் பாதிக்கப்பட்டு, வாசிப்பை ஒரு நிரூபணம் சார்ந்த பருண்மையான செயல்முறையாக காணலாம். தத்துவத்தில் இந்த முரணை logos vs mythos என்பார்கள். லோகோஸ் என்றால் அனுபவத்தை ஒரு பார்முலாவாக சுருக்குவது, எதையும் தூலமாகக் கண்டு நிரூபித்தாலே உண்டு என சொல்வது. அதிலிருந்து தான் விஞ்ஞானம் தோன்றியது. மித்தோஸ் என்பது மானுட அனுபவம் அதன் ஆழமான நிலையில், வாழ்வது மட்டுமே, அது நிரூபிக்க முடியாதது, மொழியின் கட்டமைப்புகளைக் கடந்தது எனக் காண்பது. அதில் இருந்து இலக்கியமும் கலைகளும் சில தத்துவ மரபுகளும் தோன்றின. தத்துவத்தில் அரிஸ்டாட்டில், விட்ஜென்ஸைன் போன்றோர் லோகோஸ் அணியை சேர்ந்தவர்கள். கீர்க்கெகாட், நீட்சே, சார்த், ஹைடெக்கர் ஆகியோர், இலக்கிய விமர்சனத்தில் தெரிதா, பக்தின் போன்றவர்கள் மித்தோஸ் அணியில் பிரதானமானவர்கள். தத்துவத்தில் பின்னர் இது பகுப்பாய்வு தத்துவம் (analytic philosophy) vs. மீமெய்யியல் (metaphysics) என இரு எதிரெதிர் படைகளாக ஆயுதமேந்தி நின்றன


ஆனால் இந்திய தத்துவ மரபில் இந்த பிரிவினை என்றுமே இருந்ததில்லை - நாம் பிரக்ஞை குறித்த விசாரணை என்பது உடலையும் பருண்மையான இந்த உலகையும் அறியும் போதே சாத்தியமாகும், இரண்டும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதவை என நம்பினோம். ஆகையாலே அறிவார்ந்த தரப்புக்கு வாசிப்பில் ஜெ.மோ, போகன் போன்றோர் கொடுக்கிற மிதமிஞ்சிய இந்த முக்கியத்துவம் மேற்கத்திய மரபின், அவர்கள் ஆங்கிலம் வழி பெற்ற அந்நிய தாக்கத்தினால், அதன்ஹேங் ஓவரினால்தானோ எனத் தோன்றுகிறது. குறிப்பாக, ஜெயமோகனுக்கு இளமையில் பரிச்சயமான மார்க்ஸியத்தின் நீட்சியான cultural materialismத்தின் தாக்கம் இன்றும் உண்டு, வாழ்க்கையை வரலாற்று விசைகளால், தர்க்கவிதிகளால் இயங்கும் ஒரு பிரம்மாண்ட எந்திரமாகப் பார்க்கிறார் (அவர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மார்க்ஸியர்களை சாடினாலும்) என்பது வருந்தத்தக்கது.

 மீண்டும் உங்கள்பூர்வநிலத்துக்குமீளுங்கள் என இவர்களை நோக்கி கரத்தை நீட்டி விரும்புகிறேன். இந்த நிலத்தில் வாழ்வதும் உணர்வதும் சிந்திப்பதும் ஒன்றுடன் ஒன்று பின்னியவை. இதை அவர்கள் தனித்தனியாக பிரித்துப் பார்ப்பதேவாசகன் அறிவார்ந்து கவனித்துப் படிக்க வேண்டும், கராறாக தெளிவாகப் பேச வேண்டும்எனும் கோரிக்கையாகிறது. ஆனால் கீதையில் அர்ஜுனனுக்கு ஞானத்தை கிருஷ்ணர் அளிக்கும் போதுஇன்னின்ன புத்தகங்களை முதலில் படித்து விட்டு வாஎனக் கூறுவதில்லை. புத்தக அறிவுக்கு மிதமிஞ்சிய இடமளிப்பதே மேற்கத்திய மரபின் போக்கு. கிருஷ்ணர்நீ பகுத்துணர்ந்து சிந்திக்காதே, வாழ், வாழ்வது மட்டுமே ஞானம்என்கிறார். இதன் நீட்சியாகவே நான் வாசிப்பையும் காண்கிறேன். சாப்பிடுவது, நடனமாடுவது, பாடுவது, புணர்வது போன்ற ஒரு செயலே வாசிப்பதும். அதற்கு மூளை தேவையென்றாலும் அது மூளையால் நிகழ்த்தப்பட வேண்டியது அல்ல

மூளையால் வாசித்து மொழியில் அதை தெளிவாக பகுத்தறிகிறவன் வறட்டு, அறிவியல்பூர்வ வாசகன். கண்களால் பார்த்து உடலால் வாசிக்கிறவன், சொற்களை உணர்வுகளால், பௌதீகமாய் அனுபவிக்கிறவனே அசல் வாசகன். எப்படி வாழ்வதில் படிநிலை, உயர்வு தாழ்வு இல்லையோ அப்படியேவாசிப்பதிலும்இல்லை. மொழி எனும் ஒரு கருவி மூலம் நாம் இந்த அனுபவத்தை உடம்பில் ஏற்றி உடம்பின் பகுதியாக பார்க்கிறோம்; தொல்படிமத்தை ஒரு கருத்துருவாக அல்ல புலனுணர்வாகவே காண்கிறோம் - அதுதான் அசலான வாசிப்பு. இந்திய வாசிப்பு என்பது ஒரு கொண்டாட்டம், ஒரு ரசனை, ஒரு புலனின்ப நுகர்தல். அதனால் தான் தொல்காப்பியர் ஒரு படைப்பை அறியும் முறையை மெய்ப்பாடு என்றார்; அவர் சொற்களுக்குள் இருக்கும் கருத்துருவை, உணர்ச்சிக் கட்டமைப்பை புலனுணர்வாக முன்வைக்கிறார். இந்த மரபில் இருந்து வந்ததாலே நாம் ஆதியில் சங்கக்கவிதைகளை படிக்கவில்லை, நிகழ்த்தினோம், நமது இயற்கைச் சூழலின், திணையின், பகுதியாக கவிதையைப் பார்த்தோம். அப்போது நிகழ்த்துபவன் சொல்லும் கவிதையை பார்வையாளன் பார்வையால் கண்டு காதால் கேட்டு அதை தன் உடம்பாகவே பாவித்து அறிந்தான். அங்கு அவனுக்கும் நிகழ்த்து கலைஞனுக்கும் கவிதைக்குமான எல்லைகள் மறைந்து மூன்றும் ஒன்றானது. இன்று நாம் கண்களால் படிக்கும் செயற்கையான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தாலும் நம்மால் ரசனையை பகுத்தறிவை மீறிய ஒரு பித்துநிலைக்கு சென்று கவிதையை உள்வாங்க முடிகிறது, அது உரக்க வாசிக்கப்படும் போது, ஒரு பெருங்கூட்டத்தின் நாவில் அச்சொற்கள் ஒரே சமயம் திரண்டு வரும் போது. ஒரு கவிதை வாசகனை நாம் தனியாக இருந்து ஆய்வு மேற்கொள்ளும் ஒரு அறிவியல் வாசகனைப் போல தனிமைக்குள் தள்ளி மனதுக்குள் வாசிக்கத் தூண்டும் போது, வாசிப்பை ஒரு கூட்டு செயலில் இருந்து தனித்த செயல்முறையாகக் காணும் போது நாம் கவிதையைக் கொல்கிறோம். ஒரு வாசகனுக்கு இன்னின்ன தகுதிகள் வேண்டும், அவன் எழுத்தாளனிடம் இப்படி நடந்து கொள்ள வேண்டும் எனக் கோரும் போதே நாம் வாசகனை கூட்டுச்செயல்பாட்டில் இருந்து துண்டித்து தனிமைப்படுத்திக் வேலயை தொடங்கி விடுகிறோம். இந்த பூர்வ நிலத்தில் கால் பதித்து நிற்கும் வாசகன் தனியன் அல்ல. அவன் காமத்தைப் படிக்கையில் இச்சையை தன் உடலில் உணர்கிறவன், இசையைப் பற்றிப் படிக்கையில் அதைத் தன் காதில் கேட்பவன், ஒரு நாவலின் பாத்திரங்கள் தன்னுடன் கூடவே வாழ்வதாக உணர்பவன், அவர்களை தொட்டுணர முடிபவன், அவர்களின் அகச்சிக்கல்களை தனதாக அறிபவன், அதற்காக வருந்தி அழுகிறவன், இவையெல்லாம் சொற்களில் வைக்கப்பட்டால் பொய்யாகத் தெரிகின்றன எனப் புரிந்தவன். அவனுக்காகவே நான் பேசுகிறேன். “மோகமுள்ளில் யமுனா ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்?” என பகுப்பாய்ந்து அவன் அறிய மாட்டான், அவளாக தானே மாறி அவன் அதை உணர்வுநிலையில் வைத்து அறிவான். ஒரு நல்ல நாவலாசிரியனின் ஒவ்வொரு பாத்திரத்தின் மன அமைப்பும் அதனளவில் முழுக்க சரியாக, முழுமையாக இருப்பதனால் அவன் முன்னுக்குப் பின் முரணான பல மனிதர்களாக வாசிப்பினூடே தானும் உருமாறுகிறான்; ஒரே சமயம் உடைந்த பல மனிதர்களாகிறான் (மிகைல் பக்தின் இதை diologism என்கிறார்). அவன் நுண்பிரதியை ஒரு கரண்டியில் எடுத்து அளந்து பார்ப்பதில்லை. அவன் படித்து விட்டு தத்துபித்தென்று உளறலாம், கோபப்படலாம், எரிச்சலடையலாம், அதன் பொருள் அவனுக்கே தெரியாமல் போகலாம். அவன் நினைப்பதொன்று, சொல்வது மற்றொன்றாக ஆகலாம். அவனது சொற்களுக்கு நேரடியாக தர்க்கபூர்வமான பொருளோ ஒழுங்கோ இராது. இன்னும் (மேற்கத்திய) பகுப்பாய்வு மரபினால் கெட்டு சீரழியாத இந்த எளிய, களங்கமில்லாத வாசகனுக்காகத்தான் பேசுகிறேன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...