Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஹைடெக்கர் குறிப்புகள் (5)


இருவிதமான இருப்புகள் - Being vs being:


Being என்பதை தமிழில் நாம் இருப்பு என மொழியாக்கினாலும் ஹைடெக்கரின் தத்துவத்தில் ஒரு சிக்கல் வருகிறது. அவர் தனது கட்டுரைகளில் இரண்டு விதமான beings பற்றிப் பேசுகிறார்: ஒன்று சிறிய b வருகிற being, மற்றொன்று பெரிய B. 1) being - பல்வேறு பொருட்களின் இருப்புகள், பல்வேறு இடங்களில் காலங்களில் நமது இருப்புகள். 2) Being - இதையெல்லாம் மொத்தமாய் வைத்து உலகில் நமது இருப்பு என ஒரு இருப்பை வகைப்படுத்துகிறார். இது Being. ஆனால் இது ஒரு தனித்த மீபொருண்மை நிலை அல்ல (நமதுபரம்பொருளைப்போல), மாறாக உலகு, அதிலுள்ள பொருட்கள் மற்றும் உயிர்கள், அவை இருக்கும் காலம் ஆகியவற்றில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாத இருப்பே இந்த Being.



ஹைடெக்கர்: மரணத்தின் இருப்பு


 மரணம் குறித்து அவர் கூறிய கருத்துக்கள் அதுவரையில் யாருமே கற்பனை செய்திராதவை. “மரணம் என்பது முடிவல்ல, அதுவே இருப்புஎன அவர் கருதியதை எப்படிப் புரிந்து கொள்வது? மரணத்தில் இருந்தே வாழ்வு துவங்க முடியும் என அவர் ஏன் சொன்னார்?


ஒரு குழந்தை பிறக்கும் போதே மரணத்தை நோக்கித் தான் பிறக்கிறது - அதாவது குழந்தை + எனும் குறியிடும் அல்லஎனும் குறியுடனே பிறக்கிறது. அது வளர வளர அதற்கான காலம் குறைந்தபடியே போகிறது. அதாவது ஒரு இடத்துக்குப் பயணிக்கும் போது துவக்கத்திலேயே பாதி பணத்தை செலவழித்து விடுகிறோம். இனி பாதி பணத்தைக் கொண்டு சிக்கனமாகவே வாழ வேண்டும். ஆனால் இந்த பணம் எவ்வளவு நாட்கள் வரும் எனத் தெரியவில்லை, தினம் தினம் அந்த பயத்துடனே வாழ நேர்கிறது. இதை outstanding being என ஹைடெக்கர் குறிப்பிடுகிறார். அதாவது கடனாகப் பெற்ற இருப்பு. முழுமையற்ற நமது இருப்பு நமது பெரும் சுமையாக இருக்கிறது. மரணத்துடனாவது அது முழுமை பெறுமா?


ஆம் முழுமை பெறும், ஆனால் அப்போது நம் வாழ்க்கை, நமது இருப்பு முடிந்து போகும், நமது முழுமையை அனுபவிக்க, அதன் இருப்பில் இருக்க நாம் இருக்க மாட்டோம். இந்த முரணை ஹைடெக்கர் தனது The Possibility of Experiencing the Death of Others and the Possibility of Grasping Da-stein as a Whole எனும் கட்டுரையில் அற்புதமாக விளக்குகிறார்.


இந்த கட்டுரையின் இறுதிப் பகுதியில் அவர் மனிதன் தன் மரணத்தின் முழுமையின்மையை உணர்ந்து அதனால் தொந்தரவுக்கு உள்ளாவதாலே ஈமச்சடங்குகளுக்கு இவ்வளவு இடமளிக்கிறான் எனச் சொல்கிறார் - தன்னால் அனுபவிக்க முடியாத மரணத்தின் பயணத்தை அவன் நாடகமாக்கி, ஒரு சடங்காக்கி நிகழ்த்துகிறான், அதில் பங்கேற்று தன் வாழ்க்கைக்கு ஒரு முழுமையை உண்டு பண்ண முயல்கிறான்.


ஹைடெக்கர் காலத்தை எப்படிப் பார்க்கிறார்?


காலம் என்பதை பிளேட்டோவுக்குப் பின்பு, பிளேட்டோவுக்கு முன்பு என ஹைடெக்கர் பிரித்துக் கொள்கிறார். காலத்துக்கு ஒரு சாரத்தை, ஒரு முற்றுமுழுமையை, தொடர்ச்சியை அளிக்கும் போது பிற்கால கிரேக்க தத்துவத்திலே துவங்குகிறது. ஆனால் ஆரம்ப கால கிரேக்கர்கள் காலத்தை தமது இருப்பின் ஒரு பகுதியாக (தமக்கு வெளியே அல்ல) பார்த்தார்கள். மேலும் ஆதி கிரேக்க மொழியில் முற்காலம், சமகாலம், எதிர்காலம் எனும் பகுப்பு இல்லை, அவர்கள் அதிகமும் தொடர்வினையைக் (continuous tense) கொண்டே பேசினார்கள் என ஹைடெக்கர் ஒரு இடத்தில் சொல்கிறார். பழங்கால கிரேக்கத்தில் ஒருவர் நடக்க மாட்டார், நடந்தபடியே இருப்பார், சிரிக்க மாட்டார், சிரித்தபடியே இருப்பார். இது கேட்க விளையாட்டுத்தனமாக இருந்தாலும் இதில் பொருள் உண்டுசிறு தருணங்களிலே நமது இருப்பு உள்ளது, அப்போது நான் இருந்து கொண்டிருக்கிறோமே ஒழியஇருப்பதுஇல்லை. ஹெராக்ளிடஸின் மேற்கோளானநீங்கள் ஒரே நதியில் திரும்ப கால் வைப்பதில்லைஎன்பதை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம்


காலம் இப்படி ஒவ்வொரு கணத்துக்கும் முழுமையானதாக இருப்பதாலே நம்மால் அதைக் கடந்து இருப்பை அறிய முடிவதில்லை என ஹைடெக்கர் சொல்கிறார் - இதை ஹைடெக்கர் நோக்குக்கு நாம் எப்படி சிரிக்கிறோம் என்பதை வைத்து விளக்குகிறார். ஒரு ஜோக்கைக் கேட்டு அதைப் பரிசீலிக்கநேரம்இல்லாததாலே சிரிக்கிறோம், யோசிக்க நேரமிருந்தால் சிரிக்க மாட்டோம்.


Comments

G. கோபி said…
ஹைடெக்கர் பற்றிய தத்துவக் கட்டுரை வாசிப்பதற்கு ஆர்வமாக இருந்தது. மேலும் ஹை டெக்கரை எனக்கு அறிமுகப் படுத்திய உங்களுக்கு நன்றிகளும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். By கோபி (8675871151)

Popular posts from this blog

நடிகையரின் பிம்பச்சிறை - அழகு ஏன் ஒரு பிரச்சினையாகிறது?

  ( இது நவம்பர் 2025 இல் எழுதப்பட்ட கட்டுரை . டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது . ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன் .) அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன் . தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும் , செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார் . எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம் , அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது . ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது . நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள் . அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது . வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும் . முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான் . வணிகப் பட நாயகர்கள...

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

சாகும்வரை பொழுதுபோக்கு

  "Indeed, we may have reached the point where cosmetics has replaced ideology as the field of expertise over which a politician must have competent control." - Amusing Ourselves to Death, Neil Postman "ஒரு அரசியல் தலைவர் முழுமையான ஆளுகை கொண்டிருக்க வேண்டும் என நம்பிய கருத்தியலை வெளித்தோற்றம் பதிலீடாக்கி விட்ட ஒரு புள்ளியை நாம் இன்று எட்டி விட்டிருக்கிறோம்." "சாகும்வரை பொழுதுபோக்கு", நீல் போஸ்ட்மேன்