முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹைடெக்கர் குறிப்புகள் (5)


இருவிதமான இருப்புகள் - Being vs being:


Being என்பதை தமிழில் நாம் இருப்பு என மொழியாக்கினாலும் ஹைடெக்கரின் தத்துவத்தில் ஒரு சிக்கல் வருகிறது. அவர் தனது கட்டுரைகளில் இரண்டு விதமான beings பற்றிப் பேசுகிறார்: ஒன்று சிறிய b வருகிற being, மற்றொன்று பெரிய B. 1) being - பல்வேறு பொருட்களின் இருப்புகள், பல்வேறு இடங்களில் காலங்களில் நமது இருப்புகள். 2) Being - இதையெல்லாம் மொத்தமாய் வைத்து உலகில் நமது இருப்பு என ஒரு இருப்பை வகைப்படுத்துகிறார். இது Being. ஆனால் இது ஒரு தனித்த மீபொருண்மை நிலை அல்ல (நமதுபரம்பொருளைப்போல), மாறாக உலகு, அதிலுள்ள பொருட்கள் மற்றும் உயிர்கள், அவை இருக்கும் காலம் ஆகியவற்றில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாத இருப்பே இந்த Being.



ஹைடெக்கர்: மரணத்தின் இருப்பு


 மரணம் குறித்து அவர் கூறிய கருத்துக்கள் அதுவரையில் யாருமே கற்பனை செய்திராதவை. “மரணம் என்பது முடிவல்ல, அதுவே இருப்புஎன அவர் கருதியதை எப்படிப் புரிந்து கொள்வது? மரணத்தில் இருந்தே வாழ்வு துவங்க முடியும் என அவர் ஏன் சொன்னார்?


ஒரு குழந்தை பிறக்கும் போதே மரணத்தை நோக்கித் தான் பிறக்கிறது - அதாவது குழந்தை + எனும் குறியிடும் அல்லஎனும் குறியுடனே பிறக்கிறது. அது வளர வளர அதற்கான காலம் குறைந்தபடியே போகிறது. அதாவது ஒரு இடத்துக்குப் பயணிக்கும் போது துவக்கத்திலேயே பாதி பணத்தை செலவழித்து விடுகிறோம். இனி பாதி பணத்தைக் கொண்டு சிக்கனமாகவே வாழ வேண்டும். ஆனால் இந்த பணம் எவ்வளவு நாட்கள் வரும் எனத் தெரியவில்லை, தினம் தினம் அந்த பயத்துடனே வாழ நேர்கிறது. இதை outstanding being என ஹைடெக்கர் குறிப்பிடுகிறார். அதாவது கடனாகப் பெற்ற இருப்பு. முழுமையற்ற நமது இருப்பு நமது பெரும் சுமையாக இருக்கிறது. மரணத்துடனாவது அது முழுமை பெறுமா?


ஆம் முழுமை பெறும், ஆனால் அப்போது நம் வாழ்க்கை, நமது இருப்பு முடிந்து போகும், நமது முழுமையை அனுபவிக்க, அதன் இருப்பில் இருக்க நாம் இருக்க மாட்டோம். இந்த முரணை ஹைடெக்கர் தனது The Possibility of Experiencing the Death of Others and the Possibility of Grasping Da-stein as a Whole எனும் கட்டுரையில் அற்புதமாக விளக்குகிறார்.


இந்த கட்டுரையின் இறுதிப் பகுதியில் அவர் மனிதன் தன் மரணத்தின் முழுமையின்மையை உணர்ந்து அதனால் தொந்தரவுக்கு உள்ளாவதாலே ஈமச்சடங்குகளுக்கு இவ்வளவு இடமளிக்கிறான் எனச் சொல்கிறார் - தன்னால் அனுபவிக்க முடியாத மரணத்தின் பயணத்தை அவன் நாடகமாக்கி, ஒரு சடங்காக்கி நிகழ்த்துகிறான், அதில் பங்கேற்று தன் வாழ்க்கைக்கு ஒரு முழுமையை உண்டு பண்ண முயல்கிறான்.


ஹைடெக்கர் காலத்தை எப்படிப் பார்க்கிறார்?


காலம் என்பதை பிளேட்டோவுக்குப் பின்பு, பிளேட்டோவுக்கு முன்பு என ஹைடெக்கர் பிரித்துக் கொள்கிறார். காலத்துக்கு ஒரு சாரத்தை, ஒரு முற்றுமுழுமையை, தொடர்ச்சியை அளிக்கும் போது பிற்கால கிரேக்க தத்துவத்திலே துவங்குகிறது. ஆனால் ஆரம்ப கால கிரேக்கர்கள் காலத்தை தமது இருப்பின் ஒரு பகுதியாக (தமக்கு வெளியே அல்ல) பார்த்தார்கள். மேலும் ஆதி கிரேக்க மொழியில் முற்காலம், சமகாலம், எதிர்காலம் எனும் பகுப்பு இல்லை, அவர்கள் அதிகமும் தொடர்வினையைக் (continuous tense) கொண்டே பேசினார்கள் என ஹைடெக்கர் ஒரு இடத்தில் சொல்கிறார். பழங்கால கிரேக்கத்தில் ஒருவர் நடக்க மாட்டார், நடந்தபடியே இருப்பார், சிரிக்க மாட்டார், சிரித்தபடியே இருப்பார். இது கேட்க விளையாட்டுத்தனமாக இருந்தாலும் இதில் பொருள் உண்டுசிறு தருணங்களிலே நமது இருப்பு உள்ளது, அப்போது நான் இருந்து கொண்டிருக்கிறோமே ஒழியஇருப்பதுஇல்லை. ஹெராக்ளிடஸின் மேற்கோளானநீங்கள் ஒரே நதியில் திரும்ப கால் வைப்பதில்லைஎன்பதை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம்


காலம் இப்படி ஒவ்வொரு கணத்துக்கும் முழுமையானதாக இருப்பதாலே நம்மால் அதைக் கடந்து இருப்பை அறிய முடிவதில்லை என ஹைடெக்கர் சொல்கிறார் - இதை ஹைடெக்கர் நோக்குக்கு நாம் எப்படி சிரிக்கிறோம் என்பதை வைத்து விளக்குகிறார். ஒரு ஜோக்கைக் கேட்டு அதைப் பரிசீலிக்கநேரம்இல்லாததாலே சிரிக்கிறோம், யோசிக்க நேரமிருந்தால் சிரிக்க மாட்டோம்.


கருத்துகள்

G. கோபி இவ்வாறு கூறியுள்ளார்…
ஹைடெக்கர் பற்றிய தத்துவக் கட்டுரை வாசிப்பதற்கு ஆர்வமாக இருந்தது. மேலும் ஹை டெக்கரை எனக்கு அறிமுகப் படுத்திய உங்களுக்கு நன்றிகளும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். By கோபி (8675871151)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...