Skip to main content

ஹைடெக்கர் குறிப்புகள் (5)


இருவிதமான இருப்புகள் - Being vs being:


Being என்பதை தமிழில் நாம் இருப்பு என மொழியாக்கினாலும் ஹைடெக்கரின் தத்துவத்தில் ஒரு சிக்கல் வருகிறது. அவர் தனது கட்டுரைகளில் இரண்டு விதமான beings பற்றிப் பேசுகிறார்: ஒன்று சிறிய b வருகிற being, மற்றொன்று பெரிய B. 1) being - பல்வேறு பொருட்களின் இருப்புகள், பல்வேறு இடங்களில் காலங்களில் நமது இருப்புகள். 2) Being - இதையெல்லாம் மொத்தமாய் வைத்து உலகில் நமது இருப்பு என ஒரு இருப்பை வகைப்படுத்துகிறார். இது Being. ஆனால் இது ஒரு தனித்த மீபொருண்மை நிலை அல்ல (நமதுபரம்பொருளைப்போல), மாறாக உலகு, அதிலுள்ள பொருட்கள் மற்றும் உயிர்கள், அவை இருக்கும் காலம் ஆகியவற்றில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாத இருப்பே இந்த Being.



ஹைடெக்கர்: மரணத்தின் இருப்பு


 மரணம் குறித்து அவர் கூறிய கருத்துக்கள் அதுவரையில் யாருமே கற்பனை செய்திராதவை. “மரணம் என்பது முடிவல்ல, அதுவே இருப்புஎன அவர் கருதியதை எப்படிப் புரிந்து கொள்வது? மரணத்தில் இருந்தே வாழ்வு துவங்க முடியும் என அவர் ஏன் சொன்னார்?


ஒரு குழந்தை பிறக்கும் போதே மரணத்தை நோக்கித் தான் பிறக்கிறது - அதாவது குழந்தை + எனும் குறியிடும் அல்லஎனும் குறியுடனே பிறக்கிறது. அது வளர வளர அதற்கான காலம் குறைந்தபடியே போகிறது. அதாவது ஒரு இடத்துக்குப் பயணிக்கும் போது துவக்கத்திலேயே பாதி பணத்தை செலவழித்து விடுகிறோம். இனி பாதி பணத்தைக் கொண்டு சிக்கனமாகவே வாழ வேண்டும். ஆனால் இந்த பணம் எவ்வளவு நாட்கள் வரும் எனத் தெரியவில்லை, தினம் தினம் அந்த பயத்துடனே வாழ நேர்கிறது. இதை outstanding being என ஹைடெக்கர் குறிப்பிடுகிறார். அதாவது கடனாகப் பெற்ற இருப்பு. முழுமையற்ற நமது இருப்பு நமது பெரும் சுமையாக இருக்கிறது. மரணத்துடனாவது அது முழுமை பெறுமா?


ஆம் முழுமை பெறும், ஆனால் அப்போது நம் வாழ்க்கை, நமது இருப்பு முடிந்து போகும், நமது முழுமையை அனுபவிக்க, அதன் இருப்பில் இருக்க நாம் இருக்க மாட்டோம். இந்த முரணை ஹைடெக்கர் தனது The Possibility of Experiencing the Death of Others and the Possibility of Grasping Da-stein as a Whole எனும் கட்டுரையில் அற்புதமாக விளக்குகிறார்.


இந்த கட்டுரையின் இறுதிப் பகுதியில் அவர் மனிதன் தன் மரணத்தின் முழுமையின்மையை உணர்ந்து அதனால் தொந்தரவுக்கு உள்ளாவதாலே ஈமச்சடங்குகளுக்கு இவ்வளவு இடமளிக்கிறான் எனச் சொல்கிறார் - தன்னால் அனுபவிக்க முடியாத மரணத்தின் பயணத்தை அவன் நாடகமாக்கி, ஒரு சடங்காக்கி நிகழ்த்துகிறான், அதில் பங்கேற்று தன் வாழ்க்கைக்கு ஒரு முழுமையை உண்டு பண்ண முயல்கிறான்.


ஹைடெக்கர் காலத்தை எப்படிப் பார்க்கிறார்?


காலம் என்பதை பிளேட்டோவுக்குப் பின்பு, பிளேட்டோவுக்கு முன்பு என ஹைடெக்கர் பிரித்துக் கொள்கிறார். காலத்துக்கு ஒரு சாரத்தை, ஒரு முற்றுமுழுமையை, தொடர்ச்சியை அளிக்கும் போது பிற்கால கிரேக்க தத்துவத்திலே துவங்குகிறது. ஆனால் ஆரம்ப கால கிரேக்கர்கள் காலத்தை தமது இருப்பின் ஒரு பகுதியாக (தமக்கு வெளியே அல்ல) பார்த்தார்கள். மேலும் ஆதி கிரேக்க மொழியில் முற்காலம், சமகாலம், எதிர்காலம் எனும் பகுப்பு இல்லை, அவர்கள் அதிகமும் தொடர்வினையைக் (continuous tense) கொண்டே பேசினார்கள் என ஹைடெக்கர் ஒரு இடத்தில் சொல்கிறார். பழங்கால கிரேக்கத்தில் ஒருவர் நடக்க மாட்டார், நடந்தபடியே இருப்பார், சிரிக்க மாட்டார், சிரித்தபடியே இருப்பார். இது கேட்க விளையாட்டுத்தனமாக இருந்தாலும் இதில் பொருள் உண்டுசிறு தருணங்களிலே நமது இருப்பு உள்ளது, அப்போது நான் இருந்து கொண்டிருக்கிறோமே ஒழியஇருப்பதுஇல்லை. ஹெராக்ளிடஸின் மேற்கோளானநீங்கள் ஒரே நதியில் திரும்ப கால் வைப்பதில்லைஎன்பதை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம்


காலம் இப்படி ஒவ்வொரு கணத்துக்கும் முழுமையானதாக இருப்பதாலே நம்மால் அதைக் கடந்து இருப்பை அறிய முடிவதில்லை என ஹைடெக்கர் சொல்கிறார் - இதை ஹைடெக்கர் நோக்குக்கு நாம் எப்படி சிரிக்கிறோம் என்பதை வைத்து விளக்குகிறார். ஒரு ஜோக்கைக் கேட்டு அதைப் பரிசீலிக்கநேரம்இல்லாததாலே சிரிக்கிறோம், யோசிக்க நேரமிருந்தால் சிரிக்க மாட்டோம்.


Comments

G. கோபி said…
ஹைடெக்கர் பற்றிய தத்துவக் கட்டுரை வாசிப்பதற்கு ஆர்வமாக இருந்தது. மேலும் ஹை டெக்கரை எனக்கு அறிமுகப் படுத்திய உங்களுக்கு நன்றிகளும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். By கோபி (8675871151)

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...