முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு கல்வியாளனாக என் சித்தாந்தமும் ஆன்லைன் வகுப்புகளும் (2)


 இருட்டில் ஒரு விளக்கை ஏந்தி செல்பவனே ஆசிரியன் - விளக்கை ஏந்தும் போதே அவனுக்கும் வெளிச்சம் கிடைக்கிறது. ஆக, பேசும் போது அவனுக்கும் அறிவு கிடைக்கிறது, ஆசிரியனாக அவனுக்கு அதற்கு முன்பு எந்த அறிவும் இல்லை, மொழியே (விளக்கு) அதை சாத்தியமாக்குகிறது. இந்த இடத்தில் ஒரு ஆசிரியன் வேண்டுவதெல்லாம் மற்றொரு விளக்கில் ஒளியேற்றிக்கொண்டு இரு கரங்கள் அவனுடன் வர வேண்டும், அக்கரங்களுடன் மேலும் பல நூறு ஒளிக்கரங்கள் இணைய வேண்டும் என்பதே


இதனாலே நவீன கல்வியியலில் உள்ள கற்றலின் நோக்கம், பயன் போன்ற சொல்லாக்கங்கள் எனக்கு அருவருப்பாக உள்ளன. கல்வியை ஒரு மளிகைக்கடை அண்ணாச்சியைப் போலக் காணும் இவர்களை நான் எதிர்க்கிறேன், கல்வியின் முழுமுதல் எதிரிகள் இவர்களே, இவர்களாலே நம் சமூகம் விளங்காமல் இருட்டில் உழல்கிறது.


நான் வெளிச்சம் எனக் குறிப்பிட்டேன் அல்லவா, வெளிச்சம் தோன்றி விட்டால் அங்கு நீங்கள் உங்களுக்கான ஒளிவிளக்கை ஏற்படுத்தாவிடினும் அந்த வெளிச்சம் உங்களை விட்டு மறையாது, அது உங்களுக்கு பயன்படும். ‘சராசரிமாணவர்கள், ‘அக்கறையற்றமாணவர்களை இப்படி தம்மையறியாது சில துளிகள் வெளிச்சத்தில் மெல்ல மெல்ல வாழத் தொடங்குபவர்களாகவே பார்க்கிறேன். அந்த சில துளிகள் ஒளிமழையாகும் ஒருநாள்.


அதனால் என் வகுப்பில் மாணவர்கள் ஒரே சமயம் கண்கள் ஒளிர கவனிக்காவிடினும் நான் சோர்வடைய மாட்டேன். பேசப்படுகிற எதுவும் வீணல்ல என்பது என் நம்பிக்கை. நான் தேர்வுக்காக படிப்பிக்கவில்லை. என் நோக்கம் தேர்வு போன்ற அற்பங்களைத் தாண்டியது, மகத்தானது


இந்த நோக்கு எனக்குக் கிடைத்தது என் பதின்வயது கலை இலக்கியப் பெருமன்ற (மார்க்ஸிய) உரையாடல்களில் இருந்து, பின்னாளில் சிறுபத்திரிகை வட்டத்தில் கிடைத்த ஆளுமைகளின் பரிச்சயங்களில் இருந்துமே. அவர்கள் நான்கு பேர் சேர்ந்து சமூகத்தை, கலாச்சாரத்தை, இலக்கியத்தை, தத்துவத்தை, உலகத்தை, உலகத்தைக் கடந்த அறிவைப் பற்றியெல்லாம் பேசுவார்கள், தம்மை பல கோடி பேர் கேட்காவிட்டாலும் அச்சொற்கள் நிச்சயம் போய் சேரும் என நம்பினார்கள். அந்நம்பிக்கைகள் பொய்க்கவில்லை என்பதை இன்று காண்கிறோம். பேஸ்புக், யுடியூப் வந்த பின்னரும் நாம் சிறுகூட்டமே. இந்த சிறுவட்டத்தில் பேசுவதே தமிழ் சமூகம் முழுக்க வெவ்வேறு வடிவங்களில் போய் சேர்கிறது. எல்லாருக்கும் ஒரே சமயம் ஒரே மாதிரி போய் சேய்வது குப்பையாக மட்டுமே இருக்கும், போதனையால் யாருக்கும் பயனில்லை.


இதை நான் இங்கு கூறக் காரணம் அண்மையில் பத்ரி சேஷாத்ரி ஆன்லைன் வகுப்புகளில் தனக்கு ஏற்படும் ஏமாற்றங்கள் குறித்து எழுதியிருந்ததே. என் அணுகுமுறை முழுக்க வேறு - அது ஒரு ஆசிரியனாக என் சித்தாந்தத்தில் இருந்து வருவது. ஆசிரியன்-மாணவன்-அறிவு வளர்ச்சி-விவாதம்-சமூக முன்னேற்றம்-சமத்துவம்-விடுதலை எனும் சங்கிலித்தொடருக்குள்ளே கல்வி வர முடியும். அது ஒரு மகத்தான பயணம், சமூகப் பங்களிப்பு, அங்கு தனிமனிதர்கள், அவர்களின் தனிப்பட்ட பயன்பாடு முக்கியமே அல்ல. மேற்சொன்ன சங்கிலித்தொடருக்குள் வராத எந்த அறிவும் ஆபத்தானது, அவசியமற்றது.


கருத்துகள்

மன்னன் இவ்வாறு கூறியுள்ளார்…
சார் வணக்கம்

நான் உங்களுடைய அருகாமை ஆளுமைகள் பற்றிய காணொளியை கேட்டேன். அதிலும் நீங்கள் கலை இலக்கிய பெருமன்றத்தை பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள். கலை இல்லகிய பெருமன்றத்தை பற்றி நான் மேலும் தெரிந்துகொள்ள விழைகிறேன். நேரம் இருப்பின் குறிப்பு தரவும்

நன்றி
மன்னன்,
சிதம்பரம்
thirumannan@gmail.com

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...