முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய அரசியலமைப்பை மாற்றத் திட்டமிடும் பாஜக



இந்திய அரசியலமைப்பில் இருந்து மதசார்பின்மை, சோஷலிசம் ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும் எனும் வழக்கை கொடுத்திருக்கும் விஷ்ணு ஷங்கர் ஜெயின் என்பவர் வேறு யாருமில்லை, விஷ்வ ஹிந்து பரிஷத்தின் வழக்குரைஞரே. ஆக, இதை பாஜகவின் கோரிக்கையாகவே பார்க்கலாம். விரைவில், இப்போதுள்ள நாடடங்கை ஒரு சாக்காக பயன்படுத்தி, எந்த விவாதமும் இன்றி, பாஜக அரசு இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்பதை இந்தியா இந்து மத சார்பான நாடு என சட்டபூர்வமாகவே மாற்றி, அதை அடுத்து குடியுரிமை திருத்த மசோதா வழி இதை ஒரு இந்துக்களுக்கு மட்டுமான நாடு என்றே அறிவிக்கப் போகிறார்கள். ஜியின் இந்த ஆட்சி முடியும் முன் அவர் தனது மிகப்பெரிய ‘சாதனையாக’ இதையே முன்வைக்கப் போகிறார். அடுத்தடுத்த ஆண்டுகளில் தேசிய கீதம், தேசத்தந்தை என ஒவ்வொன்றையும் மாற்றப் போகிறார்கள். நம்மில் யாராவது கோமாவில் விழுந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு விழித்தெழுந்தால் இந்த நாட்டை அடையாளம் காணவே முடியாது. இந்நாடு அந்தளவுக்கு மாறி இருக்கும். கோமாவில் விழுந்த போது இந்தியாவாக இருந்த நாடு இப்போது “ஹிந்துஸ்தான்” ஆகியிருக்கும். கோமாவில் விழுந்த போது இந்தியனாக இருந்தவன் இப்போது “ஹிந்துவாக” இருப்பான். நீங்கள் இந்துவாக இருந்தாலும் இல்லாவிடிலும், முற்போக்காளராக இருந்தாலும், நாத்திகராக இருந்தாலும் ‘ஹிந்துவாகவே’ இருந்தாக வேண்டும். 
இப்போதைக்கு ‘இந்தியனாக’ இருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி அடைவோம். ஒவ்வொரு நாளையும் முழுமையாக அனுபவிப்போம். ஏனென்றால் இது நீடிக்காது. நான் ஒருநாள் ‘இந்தியனாக’ இருந்தேன் என நம் பேரப்பிள்ளைகளிடம் சொல்லிக் கொள்ளலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...