Skip to main content

இது காணொளிகளின் காலம்


எழுத்துப் பதிவுகளின் காலம் முடிவுக்கு வருகிறது எனத் தோன்றுகிறது. அண்மையில் அதிஷாவிடம் பேசும் போது இதையே வலியுறுத்தினார், “நாமெல்லாம் பத்து வருஷம் லேட்டுஎன்றார். காணொளிகள் அதிகம் பேரை போய்ச் சேர்கிறது என்பதை விட, அது அதிகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே முக்கியம். அண்ணா, கலைஞர் இருவருமே, அவர்கள் வகுத்துக் கொண்ட எல்லைக்குள், நல்ல எழுத்தாளர்கள், ஆனால் மேடைப்பேச்சின் ஊடாகத் தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அவர்களுக்குப் பின்னால் தோன்றின சமூக ஆளுமைகளும் இப்படித்தான். பேசிப் பேசி ஒருவர் பிரதமரே ஆகி விட்டார். நிம்மி அக்கா டிவியில் பேசி கவர்ந்தே நிதியமைச்சர் ஆனார். பேச்சுத்திறன் இல்லாததாலே மற்றொருவராக ஈடு கொடுக்க முடியாமல், குற்றவுணர்வால் தன் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கவே மறுக்கிறார். எஸ்.ரா தன் பேச்சுத்திறனால் அடைந்த புகழ் எழுத்துக்குக் கிடைத்ததை விட பல மடங்கு அதிகம். மனுஷ்யபுத்திரன் என்றால் எல்லாருக்கும் தெரிய வந்தது டிவியினாலே. உணர்ச்சிப்பிழம்பாகப் பேசும் பவா. செல்லத்துரையையும் குறிப்பிட வேண்டும். உப்புமா கிளறுவதைப் பற்றி அவர் பேசினால் கூட பல்லாயிரம் பேர் முகவாயில் கையை வைத்து அசந்து போய் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஜெயமோகன், சாரு உள்ளிட்ட வேறு பல நல்ல பேச்சாளர்களும் எழுத்துலகில் உண்டு. அவர்கள் கொத்தாய் காணொளிகளுக்கு நகரும் தொலைவில் இல்லை.


 எத்தனையோ சாமான்யர்கள் பத்து நிமிடங்கள் யுடியூபில் பேசி வி..பிகள் ஆகி விடுகிறார்கள். இங்கு பிளாகும், பின்னர் பேஸ்புக்கும் சூறாவளியாய் சுழன்ற போது கூட சிறு சிறு குழுக்களுக்கு உள்ளாகத்தான் நட்சத்திரங்கள் தோன்றினார்கள். ஒரு குறிப்பிட்ட குழுவில் பிரமுகராக இருப்பவர் மற்றொரு குழுவில் தெரியப்படாமல் இருப்பார்கள். இந்த பத்தி கட்டி பிரபலம் ஆவதெல்லாம் யுடியூபில் அதிகம் இல்லை. அங்கு ஒருவர் பிரபலம் என்றால் எல்லாருக்கும் தெரிந்திருக்கும் - அதாவது ஓரளவுக்கு பரவலாக சமையல், கிசுகிசு, பேட்டி, செய்திகள் கவனிப்போருக்கு. கிட்டத்தட்ட டிவியைப் போலத்தான்.

 இன்னொரு சுவாரஸ்யம் இந்த காணொளி பிரபலங்கள் ஏதாவது ஒரு துறையில் விபரம் தெரிந்த நிபுணர்களாக இருக்க வேண்டியதில்லை - பேஸ்புக்கில், பிளாகில் இது அவசியம், இல்லையென்றால் முட்டை வாங்க நேரிடும். ஆனால் காணொளியில் அந்த சரளம், ஒழுக்கு, உடல்மொழி, குரல், அதன் உயிர் தான் முக்கியம், தகவல் இரண்டாம் பட்சமே. சீண்டலாகக் கேள்வி கேட்பதை விடுத்து மதனுக்கு என்ன தெரியும் சொல்லுங்கள்; ரெண்டு நிமிட வீடியோ முடிவில் த்தூ த்தூ என முத்தாய்ப்பாக முடிப்பதை விட சூர்யா தேவிக்கு என்னத் தெரியும் சொல்லுங்கள். எந்தளவுக்கு நீங்கள் நிபுணத்துவம் இல்லாமல் சாதாரணமாக இருக்கிறீர்கள் அது உங்களுக்கு அனுகூலமாகும். நாம் முழுவதுமாக காணொளிப் பதிவுகளுக்கு நகரும் போது பேஸ்புக்கில் உள்ள தகவல் நேர்த்தி, ஆழம் கூட இல்லாமல் ஆகும் என்பது வருத்தத்துக்குரியதே, ஆனால் ஒருவேளை ஆழமான பார்வை கொண்ட சிந்தனையாளர்கள் அங்கு போகும் போகும் ஒரு மாற்றம் ஏற்படலாம்.


காணொளி என்பது படிக்க விருப்பமற்றவர்களுக்கான ஊடகம், அதனாலே நிறைய பேரிடம் போய் சேர்கிறது என ஒரு பார்வை உண்டு. ஆனால் பல லட்சம் பேர் படிக்கிற பரபரப்புக் கட்டுரைகளும் உண்டு என அனுபவத்திலே கண்டிருக்கிறேன். நிறைய பேர்களைப் போய் சேர்ப்பதில் டிவீட்டும் சளைத்ததில்லை. ஆனால் காணொளியின் சிறப்பு அது ஏற்படுத்தும் தாக்கம் - எப்படி விளக்குவதெனத் தெரியவில்லை, மற்ற வடிவங்களை விட இது அந்தரங்கமாக, உணர்வுரீதியாக நெருக்கமாக இருக்கிறது. நான் எழுதிய கட்டுரைகளை நினைவில் வைத்திருப்போர் உண்டு, ஆனால் பேசும் போது அதைவிட பல ஆயிரம் பேர் உணர்வு உணர்வுரீதியாகத் தாக்கம் பெற்று மனம் நெகிழ்ந்து என்னிடம் வந்து பேசுகிறார்கள். நான் முன்பு விஜய் டிவியில் ஒரு விவாத நிகழ்ச்சியில் (“பெரிதினும் பெரிது கேள்”) சிறப்பு விருந்தினராக சென்று போட்டியாளர்களை மதிப்பீடு செய்தேன். அப்போது அங்கு போட்டியிட்ட ஒரு இளைஞன் பின்பு கல்லூரியில் என்னிடம் மாணவனாக வந்து சேர்ந்து முதல் நாளே தன்னை அந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு அறிமுகப்படுத்தினான். மற்றொரு மாணவன் பள்ளியில் படிக்கும் போது நான் அங்கு பேசச் சென்றிருந்தேன். அவனும் கல்லூரி வந்த பின் அதை மறக்காமல் குறிப்பிட்டு என்னிடம் நட்பானான். அண்மையில் நான் லைவ்வில் இருமுறை பேசிய போது கிடைத்த உணர்ச்சிகரமான ஆதரவும் இப்படியானதே

இதற்கு ஒரு மரபான காரணம் உண்டு:

பேச்சின் தாக்கம் கிட்டத்தட்ட சினிமாவைப் போல. நமது சங்கக்கவிதைகளும் கூட நாடக அரங்கப் பிரதிகளே, தலைவன் என், தலைவி, தோழி இவர்கள் திரும்ப திரும்ப தோன்றக்காரணம் இதுவே  ஒரு பார்வை உண்டு. அதன் பிறகு காப்பியங்களும் பக்தர்களால் வீட்டில் வைத்து பாடப்பட்டன. அதன் பிறகு பலவித கவிதை வடிவங்கள் கவிதை ஒழுங்குடனே தோன்றின - பாரதி, பாரதிதாசன், வானம்பாடி கவிஞர்கள் வரை. காஸெட் வந்து வீடு வீடாய் சினிமா பாடல்கள் போன பின்னர் இந்த கவிதைகளுக்கு, இசைப்பாடல்களுக்கு இடமில்லாமல் போயின. அதன் பின், தமிழர்களுக்கு கவிதை என்றாலே சினிமாப் பாட்டுத்தான். கவிதைக்கு நிகழ்த்து வடிவங்களுக்குமான தொடர்பைக் குறிக்கவே இவ்வளவும் சொன்னேன் - அதுதான் இப்போது யுடியூபில் வந்து நிற்கிறது. நம்மைப் போன்ற சிறுபான்மையினர் தாம் ஒரு பிரதியை வாழ்வின் நிகழ்த்தலில், நாடகீயத்தில் இருந்து விடுவித்து வைத்து படிப்பவர்களாக இருந்து வருகிறோம். வெகுமக்களின் மரபு பல்லாயிரம் வருடங்களாகவே இதற்கு நேர்மாறானது. ஒரு சிறிய செய்தியைக் கூட ஒரு செய்திக் காட்சியாக அல்லாமல் ஒருவர் அந்தரங்க தொனியில் முன்வைப்பதை, விவாதிப்பதை விரும்பும் மனம் ரொம்பப் பழையது, பல்லாயிரம் ஆண்டு பழையது. சங்கப்பாடல்களை நாடகமாய் கண்டு களித்த அரை-பழங்குடியினருக்கும் வேறுபல செய்திகளை வாழ்க்கைப்பதிவுகளை அதே போல அந்தரங்கமாய் நிகழ்த்தப்பட்டு காணும் யுடியூப் பயனர்களுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. இத்தனை ஆயிரம் வருடங்களாக நாம் அப்படியே இருக்கிறோம்

Comments

SP Harish said…
Blogger Kolandha has also written about this :
https://www.kolandha.com/2020/06/amusing-ourselves-to-death.html

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...