முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“நாராயணா, நாராயணா”



நமது செய்திச்சேனல்கள் தினமும் தேர்தல் பற்றி மட்டுமே விவாதிப்போம், எதைப் பேசினாலும் “கூட்டணி-திமுக-அதிமுக-பாஜக” எனும் மந்திரத்தை ஜெபித்தே ஆவோம் என பிடிவாதம் பிடிக்காமல் இருந்தால் நல்லது. சில விசயங்களை அரசியல் கலக்காமல், அரசியல் செய்யாமல் விவாதித்தால் நல்லது.


 அரியர் மாணவர்களை ஆல்பாஸ் செய்வது பற்றின சர்ச்சை ஒரு உதாரணம் - அதைப் பற்றி பேசும் முன்பு நெறியாளர்களுக்கே தெளிவிருப்பதில்லை, அதிமுகவினர் ஒரு பக்கம் தாம் விதிமுறை பின்பற்றியே முடிவெடுத்திருப்பதாக பக்கம் பக்கமாய் விதிமுறைகளைப் படித்துக்காட்டி அனத்த, எதிர்க்கட்சியினர் இம்முடிவு சரியே ஆனால் பின்பற்றிய முறையை தவறு எனச் சாட, கல்லூரி தாளாளர்கள் நடுவே வந்து உளற இதை எதற்குப் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என பார்வையாளர்கள் மண்டையை பிய்க்கிறார்கள். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்களா இல்லையா, இல்லை இது ஒரு டெக்னிக்கலான, பேசித்தீர்க்க வேண்டிய ஒரு அதிகாரமட்ட உள்விவகாரம் மட்டுமேவா அல்லது கூட்டணி அரசியலா என்பதில் முதலில் நெறியாளர் ஒரு முடிவை எடுத்து விட்டு அதை சமூக பாதிப்பு, நீதி, நியாயம் எனும். கண்ணோட்டத்தில் அணுகி கேள்விகளைத் தொடுப்பதே சிறப்பு. ஆனால் அந்த தெளிவெல்லாம் இருப்பதில்லை.

 அல்லது ஒரு பிரச்சனையை நிபுணர்களை வைத்து அரசியல் கலக்காமல் விவாதிக்கலாம். ஆனால் வழுக்கி விழுந்தாலும் அதில் தேர்தல் அரசியலைப் பேச வேண்டும் அஜெண்டாவுடனே நம் ஊடகங்கள் இருக்கின்றன. 


உதாரணத்துக்கு, ஒரு பொருளாதாரப் பிரச்சனையைப் பற்றிப் பேசும் போது இந்த நெறியாளர்கள் ஆட்டோமேட்டிக்காக ஒரு காங்கிரஸ்காரர் / முற்போக்காளர், இரண்டு நேரடி சங்கிகள், பொருளாதா நிபுணர் என்ற பெயரில் நான்காவது சங்கி என களத்தை தயாரிக்கிறார்கள். இந்த பங்கேற்பாளர்களோ பொருளாதாரப் பிரச்சனைகளை மக்களுக்குப் புரிய வைக்காமல் “நீ ஆட்சியில இருந்தப்போ என்ன பண்ணினேன்னு தெரியாதா? / உன் ஆட்சியில தான் ஜிடிபி கோமாவுக்கு போயிருச்சு தெரியாதா?” என மாறி மாறி சக்களத்திச் சண்டை போடுகிறார்கள் - அதுவும் மூன்றுக்கு ஒன்று என ஒரு தரப்பை கும்பலாக ஒரே சமயத்தில் மொத்துகிறார்கள். நெறியாளர் நாரதரைப் போலப் புன்னகைக்கிறார். அல்லது “எனக்கு ஒண்ணும் தெரியாது, நீங்களே அடிச்சு ஒரு முடிவுக்கு வாங்க” என கொளுத்திப் போட்டுவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். அல்லது நிஜமாகவே அவர்கள் விவாதப் பொருளைப் பற்றி போதுமான தயாரிப்போ வாசிப்போ இல்லாமல் இருக்கிறார்கள். அல்லது பாதுகாப்பாக அப்படி தாம் இருப்பதைப் போல ஒரு “அசடன்” பாவனையை புனைகிறார்கள். அவர்களுடைய ஒரே அக்கறை விவாதத்தில் கலந்து கொள்ளுகிற சங்கிகள் தம்மைப் பற்றி தில்லிக்கு புகார் கொடுத்து வேலைக்கு ஆப்பு வைக்கக் கூடாதே ஆண்டவா என இருக்கிறது.


 சரியாகச் சொலவதானால் இன்றைய டி.வி விவாதங்கள் காவல் நிலைய வதைகளைப் போல இருக்கின்றன. ரத்தம் வழியும் லத்தியுடன் மூன்று சங்கிகள், தலைகீழாக தொங்க விடப்பட்ட ‘எதிர்க்கட்சி’ ஆள், தமக்கும் அடி விழுந்து விடுமோ என கைகட்டி ஒதுங்கி நிற்கும் நெறியாளர். இதில் கொடுமையே இந்த சங்கிகள் “எங்களுக்கு ஊடகங்களில் போதுமான இடம் அளிப்பதில்லை, திராவிட சார்புடன் ஊடகவியலாளர்கள் பேசுகிறார்கள்” என லத்தியை சுழற்றிக் கொண்டே அழுவது.

 அதிலும் அடிவாங்குகிற ஏதாவது ஒரு ‘கைதி’ இவர்களைத் திரும்ப கலாய்த்து விட்டால் முகத்தை அஷ்டகோணலாக்குகிறார்கள், தனியாக கத்துகிறார்கள், புலம்புகிறார்கள், சூடுபட்ட பன்றியைப் போல உறுமுகிறார்கள். இதைக் கண்டு நெறியாளர் பீதியடைந்து சங்கிகளை சமாதானப்படுத்த காலில் விழாதக் குறையாக என்னென்னமோ செய்வார். அவர்களை எதிர்க்கேள்வி இன்றி தொடர்ந்து உளற அனுமதிப்பார். யார் பேசினாலும் எப்போது வேண்டுமெனிலும் குறுக்கிடுகிற உரிமையை அளிப்பார். அல்லது  நிகழ்ச்சி நடுவே மறைமுகமாக அவர் தன்னை மிரட்டினாலும் நெறியாளர் புன்னகை சொரிய ‘தாமரையாக’ முகம் மலர்வார்.


தமிழ் டிவி சேனல்களில் நடக்கும் அநேகமாக எல்லா விவாதங்களுக்கும் இவை பொருந்தும். கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்போது தான் நிலைமை ரொம்பவே மோசமாகி இருக்கிறது.


இந்த கொடுமைகளைப் பார்க்கும் போது வனிதா அக்கா-பீட்டர் பால்-எலிசபெத் அக்கா விவகாரம் எல்லாம் மேல் எனத் தோன்றுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...