Skip to main content

ரஜினி ஏன் கட்சி ஆரம்பிக்க மாட்டார்?



நவம்பரில் ரஜினி கட்சி ஆரம்பிப்பது உறுதி எனச் சொல்லி சேனல்கள் விவாதங்கள் நடத்தி வருகின்றன. ரஜினி கட்சி ஆரம்பிப்பார் எனச் சொல்லி கால் நூற்றாண்டு கடந்து விட்டது; அப்படிச் சொன்னவர்களுக்கே தாடி, மீசை நரைத்து, தலையெல்லாம் சொட்டையாகி விட்டது. இனியும் ஏன்யா மற்றொரு தலைமுறையை குழப்பறீங்க என காறித்துப்பலாம் தான். ஆனால் அதைவிட முக்கியமாய், இப்போது கட்சி ஆரம்பத்தால் ரஜினிக்கு என்ன பிரச்சனைகளெல்லாம் வரும் எனக் கேட்பது பயன் தரும்.


1) ரஜினிக்கு சமூக அரசியல் ஆர்வமோ பிரக்ஞையோ இல்லை. ஒருங்கிணைப்புத் திறனும் இல்லை. அவர் அரசியலுக்கு ஏற்றவரே அல்ல. இதை நம்மை விட நன்றாக ரஜினியும் லதாவும் அறிவார்கள். அதனாலே தனக்கு வராத தளத்தில் கால்பதிக்க தயங்குகிறார்.


2) தொண்ணூறுகளில் ரஜினி ஜெயாவுக்கு எதிராக சற்று சவுண்டு விட்டு அது ஓரளவுக்கு திமுக கூட்டணிக்கு தேர்தலில் உதவியது என்னவோ உண்மைதான். ஆனால் உடனே அவர் கோடம்பாக்கம், இயமமலை என ஒதுங்கி விட்டார். அதன் பிறகு தமிழகம் என ஒன்று இருக்கிறதென்றோ, அதைக் காப்பாற்றத் துடிக்கும்ஆண்டவன்இருக்கிறார் என்றோ அவர் மறந்து விட்டார். ஏனென்றால் அவர் சம்பாதிப்பதற்காக இங்கு வந்தவர், வந்த நோக்கத்தை மறந்து அரசியலில் சூதாட அவர் தயாரில்லை.


3) கமலுடன் ஒப்பிடுகையில் ரஜினிக்கு சினிமா எனும் கலையின் மீதும் பெரிய அக்கறையோ லட்சிய வேட்கையோ இல்லை. முழுக்க முழுக்க அவருக்கு நடிப்பு ஒரு தொழில்தான். அத்தொழிலுக்குப் பாதகமான எதையும் அவர் இதுவரை செய்ததில்லை. அதனாலே கமலைப் போன்று கண்ணிவெடியில் கால்வைக்கிற முயற்சிகளில் இறங்கி பெரும்பணத்தை அவர் இழந்ததில்லை, இதுவரை அவர் கடனிலும் மூழ்கியதில்லை. அப்படித்தான் அவர் ஒரு படத்துக்கு 90 கோடி வாங்கும் அளவுக்கு (இது போக, படத்தின் லாபத்திலும் பங்குவாங்குகிறாரா எனத் தெரியவில்லை) இந்தியாவின் உச்ச நட்சத்திர நடிகராக மாறி இருக்கிறார்.


4) ரஜினியின் பலம் அவரது லௌகீகம். சுயநலம். அடைந்த எதையும் இழந்து விடலாகாதே எனும் கவனம். இதற்கு நேர்மாறான ஒரு சித்திரத்தை அவர் ஊடகம் வழியாக உருவாக்கி உலவ விட்டிருக்கிறார்


5) ரஜினியின் நடிப்பு வாழ்வின் இறங்குமுகம் துவங்கி விட்டது. விஜய் சர்க்காரில் நூறு கோடி பெற்று அதிக சம்பளம் பெறும் நடிகராக ரஜினியை வரிசையில் முந்தி விட்டார். இதை வைத்து ரஜினி சினிமாவில் இருந்து ஓய்வுபெற்று அரசியல் கட்சி ஆரம்பித்து புதிய இன்னிங்ஸை ஆரம்பிப்பார் என சிலர் நம்பினர். ஆனால் ரஜினி எல்லாரையும் விட புத்திசாலி. ஒரு நடிகராக தன் நிறைகுறைகளைத் துல்லியமாக அறிந்தவர் அவர்.


6) என்னதான் இறங்குமுகத்தில் இருந்தாலும் இன்னும் 5-8 வருடங்களாவது அவருக்கு சம்பாதிக்க மீதமுள்ளது. அதாவது அவரைப் போன்ற 40 வருடங்கள் கோலோச்சிய மாஸ் ஹீரோவின் நடிப்பு வாழ்வின் இறங்குமுகமே பல வருடங்கள் நீடிக்கும். இதனாலே ரஜினி கடந்த சில வருடங்களில் இளம் இயக்குநர்களின் இயக்கத்தில் தொடர்ந்து படங்களாக நடித்துத் தள்ளுகிறார். தன் ஆயுளை நீட்டிப்பதற்காக புதிய விசயங்களை கதைத்தேர்வில் முயன்று பார்க்கிறார். நிறைய உழைக்கிறார். இதையெல்லாம் அரசியலில் இறங்குவதன் மூலம் அவர் கைவிடுவாரா?


7) தொண்ணூறுகளில் கூட ரஜினி சாபமிட்ட பிறகு ஜெயலலிதா ஆட்சியை இழந்தாலும் திரும்ப வந்த அம்மா அவரைப் பழிவாங்க முயற்சிக்கவில்லை. அதற்குக் காரணம் ரஜினி யாருக்கும் அரசியல் எதிரி அல்ல, அவருக்கு சொந்தக் கட்சியோ, நேரடி அரசியல் அடையாளமோ இல்லை என்பது. திமுகவுக்கு ஆதரவாக களமிறங்கி லூஸ் டாக் செய்ததற்கு வடிவேலு எப்படியான தண்டனையை அதிமுக வென்றபிறகு அனுபவித்தார் என அறிவோம். வடிவேலு போன்ற உச்ச நகைச்சுவை நடிகரை வீட்டில் உட்கார வைக்க இருந்த ஒரே காரணம் அவர் எதிர்க்கட்சிக்காக பிரச்சாரம் செய்தார் என்பது. அரசியல் கட்சி ஆரம்பித்தால் இன்னும் உக்கிரமாக கட்சிகளை சாட வேண்டி இருக்கும். அது அதிகாரத் தரப்புடன் பகைமையை உண்டு பண்ணும். ஆக, அரசியல் எனத் தேர்வு செய்து விட்டால் சினிமாவை விட்டு விட வேண்டும். ஒரு திரைக்கலைஞனால் இங்கு அரசாங்கத்தை எதிர்த்து களமடவே முடியாது. இதுதான் நட்சத்திர நடிகர்கள் பொதுவாக கட்சியில் இணைந்து பங்காற்றத் தயங்குவதற்குக் காரணம்.


8) ரஜினிக்கும் இந்த பயம் இருந்திருக்கும், இருக்கும் - ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்துக்காக நிகழ்காலத்தின் வசதிகளை, அதிகாரத்தை கைவிட அவர் தயாராக மாட்டார். ஒருவேளை ஜெயலலிதா, கலைஞர் மறைவுக்குப் பிறகு தனக்கான ஒரு வெளி உருவாகி விட்டது என அவர் நம்பிக்கை வளர்த்திருக்கலாம். ஆனால் ஆளும் அதிமுகவுக்கும் அவர்களைப் பின்னிருந்து இயக்கும் பாஜகவுக்கும் தமிழக மக்களிடையே செல்வாக்கில்லை என, அடுத்து வருவது திமுக ஆட்சியே எனப் புரிந்து கொண்ட நிலையில் அவர் தான் அரசியல் கட்சி ஆரம்பித்தால் அது தன் மொத்த சொத்தையும் விற்று திருப்பதி உண்டியலில் போட்டது போலாகும்.

9) ரஜினி என்னதான் இமைய மலை, பனிக்குகைகள், சாமியார் என கனவு கண்டாலும் அவரால் ஏழ்மையில், முற்றும் துறந்தெல்லாம் வாழ முடியாது. பாஜக பின்னிருந்து பணத்தை இறக்கினாலும் ரஜினியும் செலவு செய்தே ஆக வேண்டும். களமிறங்கினால் அதிமுகவையோ திமுகவோ விமர்சிக்காமல் பிரச்சாரம் செய்ய முடியாது. அப்படி தலைவர்களை மட்டுமல்ல கட்சித்தொண்டர்களையும் லட்சக்கணக்கில் பகைக்க நேரிடும். இது பாஜக கூட்டணியில் ஆட்சி அமையாத பட்சத்தில் ரஜினியின் படங்கள் தயாரிக்கப்பட்டு வெளிவருவதில், வெளிவந்தாலும் ஓடுவதில் பெரும் தடங்கல்களை ஏற்படுத்தும். அடுத்த சில வருடங்கள் நடிக்காமல் இருந்தால், நடித்த படங்கள் வெளியாகாமல் போனால் இதன் விளைவு 500-1000 கோடிகள் நஷ்டமாக இருக்கலாம்


10) நவம்பரில் கட்சி ஆரம்பித்து ஆறே மாதங்களில் உள்கட்டமைப்பை நிறுவி, ஊரூராகப் பயணித்து மக்களை சந்தித்து பிரச்சாரம் பண்ணி கட்சியை நிலைப்படுத்தி தேர்தலில் நின்று ... “முதல்வன்படத்தில் மட்டுமே இது சாத்தியம். இருந்தும் ரஜினி அதைத் தள்ளிப்போட்டு என்ன பயன், அரசியலில் இறங்குவதற்கு சாத்தியமில்லாத சூழலை தானே உருவாக்குவதைத் தவிர. அதாவது, கட்சி ஆரம்பிக்கப் போவதாய் சொல்லி உரையாற்றினாரே அப்போது கூட அவருக்கு சற்றே நம்பிக்கை இருந்திருக்கலாம், ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது. ரஜினி கட்சி ஆரம்பித்தால் வெற்றிவாய்ப்பு 1-10 என இருக்கையில் அவர் அம்முடிவை எடுக்கவே மாட்டார். எடுத்தால் அவரைப் போல பெரிய முட்டாள் வேறில்லை. ரஜினி முட்டாளில்லை.


மாறாக, ரஜினி வரும் சட்டமன்றத் தேர்தலில் பட்டும்படாமல் சில வேட்பாளர்களை ஆதரித்து அறிக்கை விடுவார். அல்லது சில கட்சிகளுக்கு மறைமுகமாய் ஆசி வழங்கி பூடகமாய் பேசுவார். தன் கருத்துக்களால் யாரும் புண்படாமல் பார்த்துக் கொள்வார். நிச்சயமாக வெளிப்படையாக பாஜக சார்புநிலையை எடுக்க மாட்டார். பத்திரிகையாளர் சந்திப்பில் பேச மாட்டார். தேர்தல் முடிந்து ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதும் பூங்கொத்து கொடுத்து அவரைப் புகழ்ந்து அறிக்கை வெளியிடுவார் ரஜினி. அதுதான் ரஜினி ஸ்டைல்.


Comments

Masked said…
மிக மிக சரியான பார்வை. ரஜினி ஒரு தேர்ந்த வியாபாரி. நிச்சயம் எவ்விதத்திலும் நஷ்டம் அடைய மாட்டார். கட்சி தொடங்கி தேர்தலில் நின்று 10 இடங்கள் வருவதே நடக்காத விஷயம்.
Chef Ramu said…
ஜனவரியில் மீண்டும் சந்திப்போம்

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...